என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குண்டும் குழியுமான தார்சாலையை சீரமைக்க கோரிக்கை
- மாணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி வருகிறது.
- இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் இடறி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலங்களில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும் தற்போது பெய்து வரும் பருவ மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே மழைநீர் தேங்குவதை தடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று மாணிக்கம்பட்டி கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்