search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை"

    • இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • முத்துப்பேட்டை போலீசார் லாரியை சாலையிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    முத்துப்பேட்டை:

    திண்டுக்கல்லில் இருந்து தில்லைவிளாகம் கிராமத்திற்கு தென்னை மட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று முத்து ப்பேட்டை கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென சாலையில் உள்ள சென்டர் மீடியனில் லாரி எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் லாரியின் முன்பகுதியில் உள்ள இரு சக்கரமும் துண்டாகி லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    இதில் லாரியை ஓட்டி வந்த டிரை வரான புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கிராமத்தை சேர்ந்த பாலகிரு ஷ்ணன் (வயது 27) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதனால் அப்பகு தியில் பல மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அவ்வழியாக வந்த வாகன ங்கள் மாற்று பாதையில் திருப்பி அனுப்ப ப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீசார் லாரியை சாலையிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • பிரச்சினையை தீர்ப்பதற்கு பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தோவாளை அருகே திடல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதுக்குளம்- கடம்பாடி விளாகம் காலனி சாலை உள்ளது. இச்சாலையானது மிகவும் குறுகலாகவும், மிகவும் பழுதடைந்தும் காணப்பட்டு வருகிறது. இந்த சாலையானது நெடுஞ் சாலைத்துறையின் கிராம சாலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் சரி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு புதுக்குளம்- கடம்பாடி விளாகம் காலனி சாலை யினை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோல் சிறமடம்-அனந்தனார் கால்வாய் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.6 கோடியே 98 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இந்த சாலை ஊராட்சி சாலையாக ஆக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான நிதி யினை அரசு ஒதுக்கி பணி யினை தொடங்கிட வேண்டும்.முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கப்படும் என்றும் இதன்பேரில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றும் பொருட்டு மாவட்ட கலெக்டரிடம் விவரங்கள் தெரிவிக்க கூறப்பட்டிருந்தது. இதில் அரசு தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்தும் இத்திட்டம் கொண்டு வரப்பட வில்லை. அஞ்சுகிராமம், பால்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட் டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடி தண்ணீர் வசதி கிடைக்கப் பெறவில்லை. இப்பிரச்சினையை தீர்ப்ப தற்கு பேரூராட்சி உதவி இயக்குநர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோன்று ஈசாந்தி மங்கலம் பகுதியில் தற்போது குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரு கின்ற வீடுகளுக்கு குடி தண்ணீர் வசதி முறையாக செய்யப்பட வேண்டும். தோவாளையில் கட்டப்பட்டு வருகின்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணி மண்டப பணிகளை விரைந்து கட்டி முடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குழி தோண்டி போட்டு விட்டு இன்னும் பணிகள் முடியவே இல்லை
    • வாகன ஓட்டிகள் சாலையில் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் காணப் படுகிறது

    பீளமேடு,

    கோவை மாநகரின் முக்கிய பகுதியாக பீளமேடு விளங்கி வருகிறது.

    இங்கு அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவ னங்கள், ஐ.டி. நிறுவனங்களும் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். பீளமேடு பகுதியில் இருந்து, காந்திமாநகர், சேரன்மா நகர் வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலைக்கு ஒரு இணைப்பு சாலை செல்கிறது.

    இந்த சாலை பீளமேடு பயனீர் மில் சாலை என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக விளாங்குறிச்சி, சேரன் மாநகர், காந்திமா நகர், பாரதிநகர் பகுதிகளுக்கு செல்லலாம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சாலையில், குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன.

    குழி தோண்டி போட்டு விட்டு இன்னும் பணிகள் நடைபெறாமலேயே உள்ளதால் இந்த சாலை முழுவதும் எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் பெரிய அளவிலான குழிகளும் உள்ளது. இது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிக ளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவ்வழியாக செல்பவர்கள் மிகுந்த கவனத்துடனேயே வாகனத்தை இயக்கி சென்று வருகின்றனர்.

    இருந்த போதிலும் குண்டும், குழியுமான சாலையில் அடிக்கடி விபத்துக்களும் நடந்து வருகிறது. சிலர் சாலையில் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் காணப் படுகிறது. மேலும் மழைக்காலங்க ளில் இந்த ரோட்டில் செல்லவே முடியாது. குழிகளில் தண்ணீர் தேங்கி விடுவதால், குழி எங்கு இருக்கிறது என்று தெரியா மல் வாகனத்தை இயக்கி சென்று, குழிக்குள் விழுந்து எழுந்து செல்பவர்க ளையும் காணமுடி கிறது. மேலும் குண்டும், குழியு மான சாலையால் இந்த பகுதியில் கடும் போக்கு வரத்து நெரி சலும் ஏற்ப ட்டு வருகிறது.

    எனவே இந்த சாலையை சரி செய்து தர வேண்டும் என்பதே வாகன ஓட்டிக ளின் கோரிக்கை யாக உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

    • 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஆதினங்குடியிலிருந்து கணபதிபுரம் வரை செல்லும் சாலை உள்ளது.

    இந்த சாலை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு கொண்டது.

    இந்த சாலையை ஆதினங்குடி,பண்டாரவடை, இடையாத்தங்குடி, தென்பிடாகை, கிடாமங்கலம், ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடும் நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வர இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

    மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியே சென்று வருகின்றன.

    மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் வெளியூர்களுக்கு எடுத்துச்செல்ல இதே சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றன.

    இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் சாலையில் மின் வசதி இல்லாத காரணத்தால் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • வளர்ச்சி பணிகளுக்காக பொது நிதி யிலிருந்து சுமார் ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இரணியல்:

    நெய்யூர் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக பொது நிதி யிலிருந்து சுமார் ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா பேரூராட்சிக்குட்பட்ட அந்தந்த பகுதிகளில் நடந்தது. பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் ஷீலா, அஜின், ஆசிரியர் மேரி லில்லி புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பென் டேவிட் வரவேற்றார்.

    9-வது வார்டு பிலாபிளை செல்லும் சாலையில் அலங்கார கற்கள் பதிக்கும் பணிக்கு ரூ.2 லட்சமும், 8 மற்றும் 9-வது வார்டு குழிவிளையில் இருந்து எரிவிளாகம் பம்பு ரூம் செல்லும் சாலை வரை சாலை சீரமைப்பு ரூ. 9.75 லட்சத்திலும், 14-வது வார்டு இடையன்விளை கிணறு வடக்குபக்கம் முதல் குளம் வரை வடிகால் அமைப்பதற்கு ரூ.4 லட்சத்திலும், 3-வது வார்டு முரசன்கோடு ஆர்சி சர்ச் குறுக்குசாலையில் சிமெண்ட் தளம் அமைக்க ரூ. 6.50 லட்சத்திலும், 7-வது வார்டுக்குட்பட்ட பாதிரிகோடு முதல் முரசங்கோடு இணைப்பு சாலை சீரமைப்பு ரூ. 9.85 லட்சத்திலும் உள்ள பணிகளை குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற தொகுதி தி.மு.க. மேற்பார்வையாளர் உசிலம்பட்டி அருண், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருவது தெரியவில்லை.
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது கருவேல மர முள்கள் குத்தி காயம் ஏற்படுகிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம், மல்லிபட்டினம், மனோரா, பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, மரக்காவலசை, சம்பைப ட்டினம், செந்தலை, மந்திரி பட்டினம், அண்ணாநகர், கணேசபுரம் செல்லும் சாலையில் இருபுறமும் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து சாலையில் உள்ள வெள்ளை கோடுகளை மறைக்கும் அளவிற்கு சாலையில் உள்ளது.

    இதனால் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருவது தெரியவில்லை.

    மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை ஓரத்தில் உள்ள கருவேல மரங்களில் உள்ள கிளைகளில் உள்ள முள் குத்தி காயம் ஏற்படுகிறது.எனவே மேலும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக சாலையை மறைத்து வளர்ந்து வரும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொத்தூர் கிராமத்தில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது.
    • பொதுமக்கள் சாலையின் நடுவில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ரெகுநாதபுரம் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது.

    கிராம மக்கள் இந்த சாலையின் வழியே அம்மாபேட்டை உள்ளிட்ட அருகில் உள்ள மற்ற ஊர்களுக்கும் செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    சாலை வெகு நாட்களாக பராமரிப்பின்றி மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படுவதால் கடும் அவதியடைந்து வந்தனர்.

    இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையின் நடுவில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக சாலை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • யூனியன் தலைவர் ராம்குமார் தொடங்கி வைத்தார்
    • ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    ஊட்டி,

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொணவக்கரை ஊராட்சி அட்டடி கிராமத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனைப்படி சாலைப்பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    இந்த பணியை கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி தலைவர் முருகன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராமன், முருகன், குராக்கரை சுப்பிரமணி, இளைஞரணியை சேர்ந்த சிவனேசன், அட்டடி வார்டு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • ஆவுடையானூர் செல்லும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்களை தொற்று நோய் பாதிக்கும் நிலை உள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி சந்தை அருகே நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் இருந்து ஆவுடையானூர் கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சிய ளிப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலையில் பெய்த மழையின் காரணமாக மார்க்கெட் சாலை அருகே முகப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தவறி விழும் நிலை ஏற்பட்டது. தேங்கி நிற்கும் மழை நீரால் துர்நாற்றம் வீசி வருவதால் கொசுக்கள் கிருமிகள் மூலம் பொதுமக்களை தொற்று நோய்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட் அருகே குண்டும் குழியுமான சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்புவ தோடு, முறையாக புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 5 ஆயிரம் கன அடி தண்ணீரையாவது முறையாக தொடர்ந்து வழங்க வேண்டும் என்றார்.
    • தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் இலக்கியா தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் பேசும்போது,

    குறுவை பயிர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக காப்பீடு திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை. இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குறுவைக்கு காப்பீடு திட்டத்தை விரைந்து அறிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம், நீர் ஒழுங்காற்று முறை குழு ஆகியவற்றிற்கு தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மாநிலங்களில் உள்ள அணைகளின் விவரத்தை தெரிவித்து நீர் திறக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.

    குறுவைக்கு காப்பீடு திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு கூறியதாக மத்திய அரசு கூறுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒருவேளை கூறினால் அந்த போக்கை மாற்றி குறுவைக்கு காப்பீடு அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் பேசும்போது :-

    தஞ்சை அருகே உள்ள உய்யக்கொண்டான் , புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது . எனவே தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெல்டா விவசாயிகள் கேட்டது வினாடிக்கு 15000 கன அடி தண்ணீர். தற்போது உத்தரவிட்டதோ அதனைவிட மிக மிக குறைவாகும். எனவே 5000 கன அடி தண்ணீரையாவது முறையாக தொடர்ந்து வழங்க வேண்டும் என்றார்.

    பாசனதாரர் சங்கத் தலைவர் தங்கவேல் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    ஆம்பலாப்பட்டு தெற்கு- கீழக்கோட்டையில் இருந்து மேல் கிழக்காக ஆலத்தூருக்கு செல்லும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தார் சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த தார் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். என்னை தார் சாலையை உடனே சீரமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் கரும்பு விவசாயிகள் சங்கம் கோவிந்தராஜ் உள்பட பலர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் மல்லிப்பட்டினம் மனோரா அமைந்துள்ளது.

    சுற்றுலா தளம் என்பதால் மனோராவுக்கு தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடல் பகுதியில் நடைமேடை அமைக்கப்பட்டு படகில் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இருந்தும் கடல் பகுதியில் அதிகமாக சேர் உள்ளதால் யாரும் இறங்க முடியாத நிலை உள்ளது. இதனால் இங்கு வருவதற்கு பலரும் அச்சப்படுகின்றனர்.

    மேலும், மல்லிப்பட்டினம்- மனோரா சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

    எனவே, சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏதுவாக மல்லிப்பட்டினம்- மனோரா சாலையை சீரமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அரசியல் ஆலோ சனை குழு உறுப்பினர் முகமது காசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • இருப்பினும் ஆபத்தான அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர்.
    • சர்வீஸ் சாலையில் உடனடியாக தார் சாலையை அமைத்து தர வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.

    மாங்காடு:

    தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் வரை செல்வதற்கு பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. அதன் அருகிலேயே சில பகுதிகளில் சர்வீஸ் சாலையும் உள்ளது. குறிப்பாக இரண்டாம் கட்டளையில் இருந்து மவுலிவாக்கம் வரை இந்த சர்வீஸ் சாலையை பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மழை காலங்களில் பரணிபுத்தூர், அய்யப்பன்தாங்கல், கொளுத்துவான்சேரி, மவுலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காக தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை உடைக்காமல் அதற்கு அடியிலேயே புஷ் அண்ட் துரோ முறையில் 2 இடங்களில் கல்வெட்டுகள் அமைக்கப்பட்டது.

    இதற்காக பரணிபுத்தூர் சர்வீஸ் சாலை முழுவதுமாக தோண்டப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் இருந்து வந்தது.

    தற்போது அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த கல்வெட்டின் மீது தற்காலிகமாக மண்ணை கொட்டி மூடி வைத்துள்ளனர்.

    இருப்பினும் ஆபத்தான அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் அந்த பகுதியில் மண் முழுவதும் உள்ளே இறங்கினால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு விடும். எனவே இந்த பகுதியில் மீண்டும் தார் சாலை அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வர வேண்டும் எனவும் ஆபத்தான முறையில் பொதுமக்கள் செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெடுஞ்சாலைதுறையினர் இந்த சர்வீஸ் சாலையில் உடனடியாக தார் சாலையை அமைத்து தர வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.

    ×