search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடங்கி வைத்தார்"

    • வளர்ச்சி பணிகளுக்காக பொது நிதி யிலிருந்து சுமார் ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இரணியல்:

    நெய்யூர் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக பொது நிதி யிலிருந்து சுமார் ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா பேரூராட்சிக்குட்பட்ட அந்தந்த பகுதிகளில் நடந்தது. பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் ஷீலா, அஜின், ஆசிரியர் மேரி லில்லி புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பென் டேவிட் வரவேற்றார்.

    9-வது வார்டு பிலாபிளை செல்லும் சாலையில் அலங்கார கற்கள் பதிக்கும் பணிக்கு ரூ.2 லட்சமும், 8 மற்றும் 9-வது வார்டு குழிவிளையில் இருந்து எரிவிளாகம் பம்பு ரூம் செல்லும் சாலை வரை சாலை சீரமைப்பு ரூ. 9.75 லட்சத்திலும், 14-வது வார்டு இடையன்விளை கிணறு வடக்குபக்கம் முதல் குளம் வரை வடிகால் அமைப்பதற்கு ரூ.4 லட்சத்திலும், 3-வது வார்டு முரசன்கோடு ஆர்சி சர்ச் குறுக்குசாலையில் சிமெண்ட் தளம் அமைக்க ரூ. 6.50 லட்சத்திலும், 7-வது வார்டுக்குட்பட்ட பாதிரிகோடு முதல் முரசங்கோடு இணைப்பு சாலை சீரமைப்பு ரூ. 9.85 லட்சத்திலும் உள்ள பணிகளை குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற தொகுதி தி.மு.க. மேற்பார்வையாளர் உசிலம்பட்டி அருண், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 3000 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்திட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
    • ஒரு விவசாயிடமிருந்து 216 கிேலா கொப்பரை மட்டும் கொள்முதல் செய்யப்படும்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் முத்தூர் களத்தில் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் மையத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டம் வாவிபாளையத்திலும், கோவை மாவட்டம் சூலூரிலும், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் மற்றும் பட்டிவீரன்பட்டி ஆகிய இடங்களில் கூட்டுறவுத் துறை மூலம் 3000 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்திட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது.இவற்றுள் பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு அரவைக் கொப்பரை 1000 மெட்ரிக் டன்அளவுக்கு கொள்முதல் செய்திட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கொப்பரையை அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைத்திட்டத்தின்படி கிலோ ரூ.105.90 என்ற விலையில் 6 சதவிகிதத்திற்குள் ஈரப்பத்துடன் சீரான ,சராசரித் தரத்தில் உள்ள கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படும். ஒரு விவசாயிடமிருந்து மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.

    நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயிடமிருந்து 216 கிேலா கொப்பரை (50 கோணிகள்) மட்டும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக விவசாயிகள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சுய விவரங்களை சம்ரிதி என்ற போர்டலில் பதிவு செய்து கொள்ள ஏக்கர் மற்றும் விளைச்சல் விவரங்களுக்கான சான்றிதழுடன் வங்கி விவரங்களையும் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தை அணுகி பதிவு செய்து கொண்டு பின்னர் கொப்பரையைக் கொண்டு வந்து விற்பனை செய்திடலாம்.

    மேலும் திருப்பூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பொங்கலூர், உடுமலை, காங்கயம் மற்றும் பெதப்பம்பட்டி ஆகிய மையங்கள் மூலம் 1.2.2022 முதல் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் 31.7.2022 வரை 4284.700 மெட்ரிக் டன் கொப்பரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3498 விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சோ.சீனிவாசன், பல்லடம் வேளாண்மை உற்பத்தியர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாளர் சுரேஷ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் எஸ்.குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×