என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொணவக்கரை ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி
- யூனியன் தலைவர் ராம்குமார் தொடங்கி வைத்தார்
- ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ஊட்டி,
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொணவக்கரை ஊராட்சி அட்டடி கிராமத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனைப்படி சாலைப்பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
இந்த பணியை கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி தலைவர் முருகன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராமன், முருகன், குராக்கரை சுப்பிரமணி, இளைஞரணியை சேர்ந்த சிவனேசன், அட்டடி வார்டு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






