search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே குண்டும் குழியுமான சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்
    X

    பாவூர்சத்திரம் அருகே குண்டும் குழியுமான சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்

    • ஆவுடையானூர் செல்லும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்களை தொற்று நோய் பாதிக்கும் நிலை உள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி சந்தை அருகே நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் இருந்து ஆவுடையானூர் கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சிய ளிப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலையில் பெய்த மழையின் காரணமாக மார்க்கெட் சாலை அருகே முகப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தவறி விழும் நிலை ஏற்பட்டது. தேங்கி நிற்கும் மழை நீரால் துர்நாற்றம் வீசி வருவதால் கொசுக்கள் கிருமிகள் மூலம் பொதுமக்களை தொற்று நோய்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட் அருகே குண்டும் குழியுமான சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்புவ தோடு, முறையாக புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×