search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை மறியல்"

    • பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.
    • மேம்பால பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்கநடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடை மேம்பாலம் இல்லை.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர். தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்கநடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதற்கிடையே நேற்று மதியம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மனோகரன், அவரது மகள்கள் தாரணி, தேவதர்ஷினி ஆகியோர் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து சென்றபோது மின்சார ரெயில் மோதி பலியானர்கள். இவர்களில் தாரணி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், தேவதர்ஷினி 12-ம் வகுப்பும் படித்து வந்தனர். பல்வேறு எதிர்கால கனவுகளுடன் இருந்த மாணவிகள் 2 பேரின் வாழ்க்கையும் நொடிப்பொழுதில் முடிந்து போனது.

    ஒரே குடும்பத்தில் 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிக்கு ரெயில்வே ரூ.1.54 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ.38 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது.


    ஆனால் அந்த சுரங்கப்பாதை பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த இடம் தண்ணீர் நிறைந்து குப்பைகளால் சுரங்கப்பாதை இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு உள்ளது. பணிகள் நடைபெற்றதற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. ரெயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் சுரங்கநடைபாதை மற்றும் மேம்பாலம் இல்லாததால் வேப்பம்பட்டு ரெயில் நிலைத்தில் தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் ரெயிலில் அடிபட்டு பலியாகும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? என்பதே பொதுமக்களின் ஆவேசமாக உள்ளது.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ரூ.29.50 கோடி மதிப்பிலான இந்த மேம்பால பணிக்காக அங்கிருந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியின் பெரும்பகுதியை கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு முடித்துள்ளது.

    ஆனால், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியில் முதல் கட்டமாக ரெயில்வே கேட்டின் ஒரு புறமான பெருமாள்பட்டு பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலப் பணிகள் நடந்தன. மற்றொரு புறமான வேப்பம்பட்டு, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை தொடர்ந்தது. இதற்காக 5-க்கும் மேற்பட்ட தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோர்ட்டில் நடைபெற்ற வழக்குகளில் சாதகமான உத்தரவு வந்த பின்னரும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடராமல் உள்ளது. இப்படி 10 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரெயில் பயணி தியாகராஜன் கூறியதாவது:-

    வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணிக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட்டு நீக்கியும் மேம்பால பணி கிடப்பில் உள்ளது.

    தியாகராஜன்

    தியாகராஜன்

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானது மிகவும் சோகமானது. ரெயில் நிலையத்தில் பயணிகளின் தேவையை அறிந்த அதற்கேற்ப வசதிகள் செய்துதர வேண்டும். ரெயில் நிலையத்தில் நடை மேம்பாலம், சுரங்கப்பாதை இல்லை என்று பல ஆண்டுகளாக ரெயில் பயணிகள் கூறிவருகிறார்கள்.

    ஆனால் இதுபற்றி எந்த நடவடிக்கையும் ரெயில்வே நிர்வாகம் எடுக்கவில்லை. இப்போது ஒரே விபத்தில் 3 பேர் தங்களது வாழ்க்கையை இழந்து விட்டனர். இதற்கு யார் பொறுப்பு? அதிகாரிகள் தான் இதற்கு முழுகாரணம் ஆகும்.

    வேப்பம்பட்டு ரெயில்வே கேட்டை தாண்டி பெருமாள்பட்டு மற்றும் வேப்பம்பட்டு பகுதிகளுக்கு மட்டும் இல்லாமல், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருமழிசை, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழியாக இருக்கின்றன. ரெயில்வே மேம்பால பணி கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை பணியை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் இது போன்ற விபத்து பலிகள் தொடரத்தான் செய்யும் என்றார்.

    ஜோதி விஸ்வநாதன்(வேப்பம்பட்டு):-

    தினமுன் ஏராளமானோர் பயன்படுத்தும் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் சுரங்கநடைபாதை இதுவரை அமைக்காதது மிகப்பெரிய தவறு. வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பிற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 100 கி.மீட்டருக்கும் மேல் வேகத்தில் செல்கின்றன. ஆனால் தண்டவாளத்தை கடந்து செல்ல எந்த முன்எச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல் பல ரெயில் நிலையங்களில் ரெயில்வே நடை மேம்பாலம், சுரங்கநடைபாதை இல்லாத நிலையே காணப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இனியாவது ரெயில்வே வாரியம் விரைந்து எடுக்க வேண்டும்.

    ஜோதி விஸ்வநாதன்

    ஜோதி விஸ்வநாதன்

    இதேபோல் இந்த பகுதியில் ரெயில்வே மேம்பால பணி 10 ஆண்டுக்கு மேல் கிடப்பில் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், ஆபத்தான முறையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    மருத்துவ மனைக்கு உடனடியாக அழைத்து செல்லவேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சுமார் ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மற்றொரு ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டி இருக்கிறது. மேம்பால பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாயில் சீரான தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது.
    • குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சதுமுகை ஊராட்சிக்கு உட்பட்ட ஆலத்துகோம்பை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாயில் சீரான தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சதுமுகை ஊராட்சி அலுவலகத்தில் சென்று புகார் அளித்தனர்.

    ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் முதியவர்கள், குழந்தைகளை வைத்துள்ளவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஆலத்து கோம்பை பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சதுமுகை ஊராட்சி மன்ற தலைவி சத்யாவின் கணவர் சிவராஜ் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சிவராஜை சூழ்ந்து கொண்டு அப்பகுதி மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் இன்று மாலைக்குள் சீரான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    • அரியலூர் மாவட்டம், ராயம்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதியில் கடந்த சில வாரங்களாக சீரான குடிநீர் விநியோகிக்க ப்படவில்லை.
    • இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ராயம்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதியில் கடந்த சில வாரங்களாக சீரான குடிநீர் விநியோகிக்க ப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்த ப்பட்ட ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செந்துறை காவல் துறையினர் மற்றும் ஊராட்சித் தலைவர் ஆகியோர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போ க்கு வரத்துபா திக்கப்பட்டது.

    • அரசு பஸ்சை சிறை பிடித்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் கத்தரியில் இருந்து நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் குவிந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • சாயல்குடி அருகே வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர், கடலாடி தாசில்தார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே ஒப்பிலான் கிராமத்தில் வனத்துறை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கட்டிடங்களை கட்டி பல வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். வனத்துறை பகுதியில் உள்ள பொது மக்களை காலி செய்ய வலியுறுத்தி ஆக்கிரமிப்பு களை அகற்றுவதற்காக இன்று அதிகாலை வந்த வனத்துறை அதிகாரிகளை கண்டித்து சாயல்குடியில் இருந்து செல்லும் ஒப்பி லான்-வாலிநோக்கம் சாலையில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்தும் வனத்துறையினரை முற்று கையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, கடலாடி தாசில்தார் ரெங்கராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த நபர்கள் இருவர் பெட்ரோல் கேனை தலையில் ஊற்றி தீயை பற்ற வைக்க முற்பட்டனர். அவர்களை காவல் துறை யினர் தடுத்து நிறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆக்கிர மிப்புகளை அகற்றக் கூடாது எனவும், வீடு கட்டி இருக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி இருந்தனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    முடிவில் தாசில்தார் தற்போது வனத்துறையினர் ஆக்கிரப்புகளை அகற்ற மாட்டார்கள் எனவும், பின்பு ஒரு நாளில் பொது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு அதன் மூலம் நட வடிக்கை எடுத்துக்கொள்வோம் என உத்திர வாதம் அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    சாலை மறியல்

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து இன்று காலை ஓமலூரில் இருந்து மாட்டுக்காரன்புதூர் செல்லும் சாலையில் தும்பிப்பாடி ஊராட்சி ஒட்டதெரு பகுதியில் அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உப்பு தண்ணீரை குடிப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், எனவே சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ேபாக்குவரத்து பாதிப்பு

    உடனடியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மது போதையில் இளைஞர்களுக்கிடையே மோதல்-சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் வடபுறம் சர்ச் தெரு, எதிர்புறம் 7 தெருக்களும் உள்ளன. இதில் இரு சமுதாயத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

    நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்ச் தெரு பகுதியில் சில இளை ஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அந்த பகுதியில் 7-வது தெருவை சேர்ந்த இளை ஞர்கள் சென்று கொண்டி ருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு மதுபாட்டில் களை தட்டி விட்டதாக கூறப்படுகிறது.

    இதில் இருதரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சர்ச் தெருவை சேர்ந்த ஏசா. மணிகண்டன், மணி உள்ளிட்ட 4 இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப் பட்டது. இதை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் பழைய பஸ் நிலையம் அருகே மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்பொழுது விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அந்த வழியாக வந்த பொழுது அவர் வாகனத்தை மறித்து தங்கள் பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட னர். உடனடியாக போலீசார் அவர்களை அப்புற படுத்தினர்.

    பின்னர் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த மறியல் போ ராட்டத்தால் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    • மப்பேடு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • கிராம மக்கள் நோய் தொற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் மப்பேடு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குடிநீருடன் கலந்து மாசுபட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் இந்த கிராம மக்கள் நோய் தொற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீருடன் கழிவுநீர் திறந்து விடப்படுவதை கண்டித்து அரக்கோணம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மப்பேடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பின்னர் பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அரக்கோணம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மாற்றுபாதை சேரும், சகதியுமாக இருப்பதாக புகார்
    • ேபாக்குவரத்து பாதிப்பு

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் சிறு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறு பாலம் அருகே மாற்று ப்பாதை அமைக்கப்பட்டு பொதுமக்கள் அந்த வழியாக சென்று வந்தனர்.

    தற்போது பெய்த மழையால் மாற்றுப்பாதை முழுவதும் சேரும் சகதியமாக மாறி உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் செல்லும்போது சேற்றில் சிக்கி கீழே விழுகின்றனர். மேலும் பைக்கில் செல்லும்போது வழுக்கி கீழே விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    சரியான முறையில் மாற்றுப்பாதை அமைக்காததால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் இன்று காலை புதிய பஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • உயிரிழந்த மீனாவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவித்து உடனடியாக காசோலை வழங்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    சிக்கமகளூரு:

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் ஆல்தூர் அருகே உள்ள ஹெடதால் கிராமத்தை சேர்ந்தவர் மீனா (25). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை 7 மணியளவில் ஹெடதால் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றை யானை மீனாவை தாக்கி மிதித்து கொன்றது. அவரை காப்பாற்ற சென்ற மற்றொரு பெண்ணையும் தாக்கி காயப்படுத்தியது.

    மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் இது 2-வது சம்பவம் என்பதால் ஆத்திரமடைந்த ஹெடதால் கிராம மக்கள் அங்கு முகாமிட்டு யானைக் கூட்டத்தை மீண்டும் ஆல்தூர் வனப்பகுதிக்கு விரட்டக் கோரி பலேஹொன்னூர்-சிக்கமகளூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்ததால் இதுகுறித்து தகவல் அறிந்த முடிகெரே எம்.எல்.ஏ., நயனா மோட்டம்மா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்கவில்லை.

    இதனிடையே மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்-மந்திரி சித்தராமையா இந்த விவகாரத்தில் தலையிட்டு போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொண்டார். மனித-விலங்கு மோதலைத் தடுக்க விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தார். மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்த மீனாவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவித்து உடனடியாக காசோலை வழங்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் கிராம மக்கள் மறியலை கைவிட்டனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் உடனடி கூட்டம் நடத்தப்பட்டது. அதில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கூறுகையில், யானைகள் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கும், காடுகளை ஒட்டிய காபி எஸ்டேட்டுகளுக்கும் வழி தவறி வருகின்றன என்றார்.

    • அருள்ராஜ் தன்னை வக்கீல் என்று கூறியதும் பிபினுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • வக்கீலிடம் கடுமையாக நடந்து கொண்ட ஏட்டு பிபின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கே.டி.சி. நகரில் உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு பணியில், பாளை போலீஸ் ஏட்டு அல்டஸ் பிபின்(வயது 44) என்பவர் இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வக்கீல் அருள்ராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் வேகமாக வந்ததாக கூறி ஏட்டு பிபின், அவரை தடுத்து நிறுத்தி உள்ளார். உடனே அருள்ராஜ் தன்னை வக்கீல் என்று கூறியதும் பிபினுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வக்கீல்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் வக்கீலை, போலீஸ் ஏட்டு பிபின் தாக்கியதாகவும், அவருடைய செல்போனை பறித்துக் கொண்டதாகவும் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடனடியாக அங்கு போலீஸ் உதவி கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் விரைந்து வந்து வக்கீல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பின்னர் வக்கீல்கள் சார்பில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து வக்கீல்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இதற்கிடையே சம்பவத்தில் இரவு பணியில் இருந்த ஏட்டு பிபின் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று அதிகாலை சிகிச்சைக்காக சேர்ந்தார். அவர் வக்கீல்கள் தன்னை தாக்கியதாக கூறி புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்ட வக்கீல்கள், வாகன சோதனையின் போது வக்கீலிடம் கடுமையாக நடந்து கொண்ட ஏட்டு பிபின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறி வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியை நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    அதில் வக்கீலை அவதூறாக பேசி தாக்குதல் நடத்திய தலைமை காவலர் பிபின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நள்ளிரவில் புகார் மனு அளித்தோம். அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது வக்கீல் மீது பொய் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஏட்டு பிபின் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். எனவே இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்தோஷ் கவுதம் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டது.
    • தி.மு.க., அ.தி.மு.க.வினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு அ.தி.மு.க. மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் உடுமலை சாலையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது தி.மு.க.வை சேர்ந்த சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகாவின் கணவர் கருப்புசாமி மற்றும் தி.மு.க.வினர் பேச்சு வார்த்தை நடத்த வந்தனர்.

    பேச்சுவார்த்தையின் போது அ.தி.மு.க.- தி.மு.க.வினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில், தி.மு.க. பேரூர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரனின் மண்டை உடைந்தது.

    அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்தோஷ் கவுதம் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தி.மு.க.வை சேர்ந்த பிரகதீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க.வை சேர்ந்த சந்தோஷ் கவுதம், கருப்புசாமி ஆகியோர் மீது குமரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடுமலை அருகே தி.மு.க., அ.தி.மு.க.வினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×