பொதுமக்கள் சாலை மறியல்

மாற்றுபாதை சேரும், சகதியுமாக இருப்பதாக புகார் ேபாக்குவரத்து பாதிப்பு
பொதுமக்கள் சாலை மறியல்
Published on

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் சிறு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறு பாலம் அருகே மாற்று ப்பாதை அமைக்கப்பட்டு பொதுமக்கள் அந்த வழியாக சென்று வந்தனர்.

தற்போது பெய்த மழையால் மாற்றுப்பாதை முழுவதும் சேரும் சகதியமாக மாறி உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் செல்லும்போது சேற்றில் சிக்கி கீழே விழுகின்றனர். மேலும் பைக்கில் செல்லும்போது வழுக்கி கீழே விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சரியான முறையில் மாற்றுப்பாதை அமைக்காததால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் இன்று காலை புதிய பஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com