search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
    X

    காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

    • ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    சாலை மறியல்

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து இன்று காலை ஓமலூரில் இருந்து மாட்டுக்காரன்புதூர் செல்லும் சாலையில் தும்பிப்பாடி ஊராட்சி ஒட்டதெரு பகுதியில் அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உப்பு தண்ணீரை குடிப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், எனவே சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ேபாக்குவரத்து பாதிப்பு

    உடனடியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×