search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    • பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • சரவணம்பட்டி, பச்சாபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது

    ரத்தினபுரி, 

    கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்து உள்ளது சின்னவேடம்பட்டி. ஒரு காலத்தில் இந்த ஊரை சுற்றி எங்கு பார்த்தாலும் விவசாய நிலங்கள் செழித்து காணப்பட்டன. சோளம், பருத்தி, கீரை வகைகள் உள்பட பல்வேறு பயிர்களையும் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர்.

    விவசாயம் செய்து வந்தாலும் அங்கு ஒரு குளம் என்பது கிடையாது. மேலும் மாங்கரை, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் போது, வெள்ளம் பெருக்கெடுத்து சங்கனூர் ஓடையில் ஓடும். அப்போது கடும் வெள்ளம் காரணமாக குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

    இதனை தடுக்கவும், விவசாயத்திற்கு தண்ணீர் தேக்கி வைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதே சின்னவேடம் பட்டி ஏரி.

    இந்த ஏரி அமைவதற்கு முதன் முதலாக முன்னெடுப்பு எடுத்தவர் 1959-ம் ஆண்டு ஊராட்சி தலைவராக இருந்த வெங்கிடு. இவர் தான் அப்பகுதி மக்களிடம் பேசி, தங்கள் பகுதியில் ஒரு ஏரியை உருவாக்கும் எண்ணத்தை எடுத்து கூறினார். மக்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து 1962-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த காமராஜரை சந்தித்து கோரிக்ைக மனு கொடுத்தார்.பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும், சின்ன வேடம்பட்டியில் ஏரி உருவாக்கியே தீருவேன் என வெங்கிடு முடிவாக இருந்தார்.

    இதற்காக அவர் எம்.எல்.ஏ.தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வும் ஆனார். எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் தனது முதல் கோரிக்கையாக சட்டமன்றத்தில் சின்ன வேடம்பட்டியில் ஏரி அமைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்தார்.

    அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர், மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த குழந்தை வேலுவையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். தொடர் முயற்சிகள் காரணமாக கடந்த 1984-ம் ஆண்டு சின்னவேடம்பட்டி ஏரி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

    இதை கேட்டதும் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிதி ஒதுக்கப்பட்டு ஏரி உருவாவதற்கான பணிகள் தொடங்கின. அங்குள்ள விவசாயிகள் பலரும் தங்கள் விவசாய நிலங்களை ஏரி உருவாவதற்காக கொடுத்தனர். பின்னர் 200 ஏக்கர் பரப்பளவில், ஏரி அமைந்தது. ஏரி அமைந்து 2 முறை மட்டுமே தண்ணீர் வந்துள்ளது.

    இந்த ஏரிக்கு கணுவாயில் இருந்து பன்னீர்மடை ஆஞ்சநேயர் கோவில், துடியலூர், வெள்ளகிணர் பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் வழியாக சின்னவேடம்பட்டிக்கு தண்ணீர் வருகிறது.

    கடைசியாக 1992-ம் ஆண்டு தண்ணீர் வந்தது. அதன்பிறகு 32 ஆண்டுகளாக ஏரிக்கு தண்ணீர் வரவே இல்லை. இதற்கு பல்வேறு காரண ங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள், தண்ணீர் வராததால் ஏரி தூர்வாரப்படாமல் அப்படியே விடப்பட்டு விட்டது.

    இதனை சீரமைக்க வெங்கிடுவின் மகனான ராமமூர்த்தியும் கடந்த 2003-ம் ஆண்டு சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார். ஆனாலும் எதுவும் நடந்தபாடில்லை. பல ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாமல் அப்படியே கிடந்தது.

    இதனை பாதுகாக்க வேண்டும் என கவுசிகா நீர்க் கரங்கள் என்ற தன்னார்வ அமைப்பினர் உறுதியேற்றனர். அவர்க ளுடன் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பினரும் சேர்ந்து கொண்டனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரியை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வாரந்தோறும் ஏரி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உதவியோடு ஏரியை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.

    மேலும் ஏரிக்கு தண்ணீர் வரும் ராஜ வாய்க்காலிலும் தூர்வாரும் பணி மேற்கொ ண்டனர். தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடிந்து என்றைக்காவது ஒருநாள் தண்ணீர் வரும் என காத்திருந்தனர். அவர்களின் காத்திரு ப்பும், கனவும் வீண் போகவில்லை. இந்த மாதம் பெய்த 2 மழையால் வெள்ளம் ஆறாய் பெருக்கெடுத்தது.

    புகலிடம் தேடிய மழை வெள்ளத்துக்கு அடைக்கலம் கொடுத்தது சின்னவேடம்பட்டி ஏரி. 16 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 8 அடி தண்ணீர் வந்துள்ளது. ஏரிக்கு தண்ணீர் வந்ததை பார்த்ததும் கவுசிகா நீர்கரங்கள் அமைப்பினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

    தொடர்ந்து மழை பெய்தால் ஏரி தனது முழு கொள்ளளவையும் எட்டிவிடும் என கவுசிகா நீர்கரங்கள் அமைப்பினர் தெரிவித்தனர். 32 ஆண்டுகளுக்கு பிறகு சின்னவேடம் பட்டி ஏரி நிரம்பியிருப்பது, விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் சின்னவேடம்பட்டி நிரம்பினால், சரவணம்பட்டி, பச்சாபாளையம், அன்னூர், மனியகாரம்பாளையம், கணபதி, அத்திப்பாளையம், பீளமேடு, விளாங்குறிச்சி, காளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயமும் செழிக்கும். 

    • வால்பாறை நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி முன்னிலையில் பேரணி நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்

    வால்பாறை, 

    நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு அமைப்பினர் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை கடைபிடித்து வருகிறார்கள். வால்பாறையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    அமைப்பு சார்பில் ஜூலியா ஜெரோசா மற்றும் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வால்பாறை நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி முன்னிலையில் பேரணி நடந்தது. பேரணியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    மகளிர் அமைப்பினர் ராதா மற்றும் ஸ்ரீவித்யா திசையாலினி, தமிழழகி, சசிகலா ஒருங்கிணைந்தார்கள். ஊர்வலம் நகராட்சி அலுவலகம் வரை திரும்பியது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் எனவும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.  

    • நான் மக்கள் பிரச்சினைகளுக்காக பிரதமருக்கு கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளேன்.
    • பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பி வரும் கிருத்திகாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

    கோவை:

    மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்து, கடிதம் எழுதுவதும், மனு அனுப்புவதும் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்று.

    கோவையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தினமும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் எழுதி அனுப்பி வருகிறார்.

    கோவை காந்தி மாநகரை சேர்ந்தவர் பழனிசாமி. அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா. இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இவர் கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று பிரதமர் மோடிக்கு முதல் கடிதம் எழுதினார். அதில் சமையல் எரிவாயு விலை அதிகமாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அனுப்பினார்.

    2-வதாக பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் கோரி மனு எழுதியிருந்தார்.

    தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தல், நிர்பயா அமைப்பு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு அதிகமாகதருவது, பி.எஸ்.என்.எல் 5 ஜி சேவை நிறுவுவது, தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்துவது தொடங்கி தற்போது நடந்த இஸ்ரேல்-காசா போர் வரை கிருத்திகா கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

    கடந்த மார்ச் 8-ந் தேதியில் இருந்து இதுவரை 264 கோரிக்கை மனுக்களை எழுதி பிரதமருக்கு அனுப்பியுள்ளார். சட்டநாளான நேற்று தனது 264-வது கடிதத்தை எழுதினார்.

    இதில் இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அடிப்படையில் கடமைகள் தெரியப்படுத்தி, அதற்கான விழிப்புணர்வவை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை மனுவை கடிதமாக எழுதி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ளார்.

    நாட்டு மக்களின் பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி தொடர்ந்து இவர் எழுதி வரும் கடிதத்திற்கு பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து அக்னாலேஜ்மண்டு தருகின்றனர். தினமும் காலை 10 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து போனில் அழைத்து, அவரது மனு குறித்து விவாதிக்கின்றனர்.

    என் கணவர் உள்பட குடும்பத்தார் அனைவரும் எனக்கு இதற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். அவர்களின் ஆதரவு காரணமாக நான் மக்கள் பிரச்சினைகளுக்காக பிரதமருக்கு கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளேன்.

    அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் அதே கோரிக்கையை நான் தெரிவித்தாலும், அக்கோரிக்கையானது நிறைவேறும் போது, அதில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதாக நினைத்து மன நிறைவடைகிறேன்.

    பெரியார், அம்பேத்கர், மார்கஸ் போன்ற தலைவர்களின் சித்தாந்தங்களை படித்து அறிந்து இருப்பதால், பொதுமக்களின் நலன் சார்ந்து நாள்தோறும் இந்த கடித போக்குவரத்து பணியை தொடர இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பி வரும் கிருத்திகாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    • சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் தகவல்
    • மலையேற்றத்தின்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு

    கோவை, 

    சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ மருத்துவ மையங்கள், அவசர தேவைக்கான முதலுதவி சிகிச்சை மைய ங்கள் அமைக்கப்பட்டு ள்ளன.

    இதுதொடர்பாக சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் அருணா கூறியதாவது:-

    மத்திய அரசின் சுகாதா ரம், குடும்ப நலத்து றையின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு, கேரள அரசின் சுகாதாரம், குடும்ப நலத்துறையின் மூலம் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான சிகிச்சை வசதிகள், மருத்துவ சேவைகள் வழங்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மருத்துவ வசதியை கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி போன்ற அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தவும் திட்டமி டப்பட்டுள்ளது.

    மலையேற்ற பாதைகளில் போதுமான மருத்துவ மையங்கள், அவசர தேவைக்கான முதலுதவி வழங்க ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. மேலும் சபரிம லையில், நிலக்கல், பம்பா, அப்பாச்சி மேடு, நீலிமலை, சாரல்மேடு, சந்நிதானம் ஆகிய இடங்களில் மருத்து வமனைகள் உள்ளன.

    கூடுதலான அவசர மருத்துவ உதவிக்காக மலையேற்றப் பாதையில் பல இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் முதலு தவி ரத்த அழுத்தப் பரிசோதனை, ஆக்சிஜன், டிபிபிரிலேட்டர் போன்ற வசதிகளும் செய்யப்ப ட்டுள்ளது.

    பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் சம்பிராதய விரதம் தொடங்கிய பிறகும் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

    மேலும் தங்களின் சிகிச்சை பதிவுகள், மருந்து களை உடன் கொண்டு வர வேண்டும். மலையேற்ற த்தின் போது பக்தர்களுக்கு நெஞ்சுவலி அல்லது மூச்சு த்திணறல் ஏற்பட்டால் அவ ர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் விழா கோலாகலம்
    • இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

    குனியமுத்தூர், 

    கோவை- பாலக்காடு ரோடு, குனியமுத்தூருக்கு அருகே உள்ள மதுக்கரையில் பிரசித்திபெற்ற தர்மலிங்கே ஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. கோவில், தரைமட்ட த்தில் இருந்து 1600 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 960 படிகள் ஏறி சென்று, சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.

    மதுக்கரை தர்மலிங்கே ஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்தி ருவிழா மற்றும் கிரிவலம் ஆகியவை வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அப்போது கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்தி ருந்து கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து மனநிறைவுடன் வீடு திரும்புவர்.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடப்பாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

    மதுக்கரை தர்மலிங்கே ஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழாவை கண்டுக ளிப்பதற்காக திருமலை பாளையம், சாவடி, சீரப்பாளையம், அரிசிபாளை யம், எட்டிமடை, கோ வைப்புதூர், சுண்ட க்காமுத்தூர், ராமசெட்டி பாளையம், பி.கே.புதூர், குனியமுத்தூர், குரும்பபா ளையம், ஈச்சனாரி, அறிவொ ளி நகர், எம்ஜிஆர் நகர், மதுக்கரை மார்க்கெட், சுகுணாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்திரு ந்தனர்.

    அப்போது அவர்கள் கோவில் கருவறையில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய சுவாமியை மனமுருக வழிபட்டு வருகின்றனர். மேலும் இந்த கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரடியாக கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இந்த கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதில் முதல் நாள் திருவிழாவை மதுக்கரை ஊர்மக்களும், 2-வது நாள் திருவிழாவை திருமலை யாம்பாளையம் பொது மக்களும், 3-வது நாள் திருவிழாவை எட்டிமலை ஊர்மக்களும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.

    தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) கிரிவலம் நடைபெற உள்ளது. மேற்கண்ட 3 நாட்களிலும் சேர்த்து கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுக்கரை தர்மலிங் கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபம் முடிந்து கீழே இறங்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். மேலும் நாளை கிரிவலத்தின்போது காலை முதல் மாலைவரை அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வர உள்ளனர். மேலும் தர்மலிங்கேஸ்வரரை மனதார வேண்டி கிரிவலம் சென்று வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும், கோர்ட் வழக்குகளில் வெற்றி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த கோவிலில் மாதாமாதம் பவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். அப்போதும் இங்கு பவுர்ணமி கிரிவலம் நடத்தப்படும்.

    மதுக்கரை தர்மலிங்கே ஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் மட்டுமின்றி பிரதோஷம், கிருத்திகை, பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை நடைபெறும். ஐப்பசி பவுர்ணமி மற்றும் தைப்பூசம் அன்று அன்னா பிஷேகம் நடைபெறுவது வழக்கம்.மேலும் பௌர்ணமி தவிர மாத நாட்களில் தினமும் முக்கால பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் முக்கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விசேஷ நாட்களில் மாலை 6.30 மணிவரை கோவிலின் நடை திறந்திருக்கும்.

    பழம்பெருமைவாய்ந்த மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், 150 ஆண்டுகளுக்கும் மேல் கார்த்திகை தீபம் தொடர்ந்து ஏற்றப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    • வீட்டுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை சேதப்படுத்துகிறது
    • குடியிருப்புக்குள் வராமல் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    வால்பாறை, 

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் புதுத்தோட்டம் பி.ஏ.பி.நகர், காமராஜர் நகர், துளசிங்க நகர், கூட்டுறவு காலனி, அண்ணா நகர், வால்பாறை டவுன் பகுதி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக 100க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் சுற்றி வருகிறது.

    இந்த சிங்கவால் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதோடு அங்குள்ள வீடுகளின் ஜன்னல் வழியாக சமையலறைக்குள் நுழைந்து, அங்கு வைத்திருக்க கூடிய உணவுப் பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது.

    சிங்கவால் குரங்குகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிங்கவால் குரங்குகளை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூட்டுறவு காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வந்தது.

    இதில் ஜெபா என்பவர் வீட்டில் நுழைந்த குரங்குகள் கூட்டம் வீட்டிற்குள் இருந்த உணவு பொருட்கள் சாப்பிட்டு கண்ணாடி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது. நீண்ட நேரம் போராட் டத்திற்கு பின்பு சிங்கவால் குரங்குகளை அப்பகுதியில் இருந்து சென்றது. குரங்குகள் குடியிருப்பு பகுதியில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்

    • பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்
    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு செயற்கைகால் வழங்க நிதி திரட்டும் வகையில் நிர்வாகிகள் ஏற்பாடு

    கோவை, 

    ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் சேக்புரோ சார்பில் மாரத்தான் போட்டி இன்று கோவை அவினாசி சாலையில் உள்ள பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

    8 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு செயற்கை கால் வழங்க நிதி திரட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இந்த மாரத்தான் ஓட்ட த்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகி ருஷ்ணன் தொடங்கி வைத்து, மக்களுடன் மார த்தான் ஓடினார். செல்லா கே.ராகவேந்தர் முன்னிலை வகித்தார். இதில் 200-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியானது 3 பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள், டி-சர்ட், சாக்ஸ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. திட்டத்த லைவர் லட்சுமி நாராய ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவையில் நீரிழிவு நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படு த்தும் வகையில் குழந்தை களை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற "கிட்ஸ் வாக்க த்தான் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கோவை ரேஸ்கோர்சில் நடந்த நிகழ்ச்சியை கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். பந்தய சாலை மீடியா டவரில் தொடங்கிய வாக்க த்தான் பந்தய சாலை முழுவதும் சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்தடை ந்தது. இதில் குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விழிப்பு ணர்வு பதாகை களை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.இதில் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் மற்றும் ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் தலைவர் ரேஷ்மா ரமேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • கோவை உள்பட 3 மாவட்டங்களில் அதிகாரிகள் தணிக்கை சோதனை
    • போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை

    கோவை, 

    கோவை, திருப்பூர், நீலகிரியில் உள்ள 11 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 5 பகுதி அலுவலகங்களை சேர்ந்த போக்குவரத்து துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு தணிக்கை குழுவி னர் நேற்று காலை முதல் மாலை வரை தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொ ண்டனர்.

    இதில் மொத்தம் 296 வாகனங்களுக்கு அபராத மாக ரூ.25.22 லட்சம் விதிக்கப்பட்டு ள்ளது.

    இது தொடர்பாக கோவை மண்டல போக்கு வரத்து இணை ஆணையர் சிவகுமரன் கூறியதாவது:-

    அதிகம் பாரம் ஏற்றிய 53 வாகனங்கள், அதிக ஆட்களை ஏற்றிய 38 வாகனங்கள், வாகன காப்பீடு இல்லாத 45 வாகனங்கள், தகுதிச்சா ன்று இல்லாத 49 வாகனங்கள், புகை பரிசோதனை சான்று இல்லாத 13 வாகனங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாத 41 வாகனங்கள், அனுமதி ச்சீட்டு இல்லாத 2 வாக னங்கள் என மொத்தம் 296 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்ப ட்டுள்ளது.

    இதில் பெரும்பாலா னவை லாரி, மேக்சி கேப், ஆட்டோ, சரக்கு ஆட்டோ, சுற்றுலா வேன் ஆகியவை ஆகும். தகுதிச்சான்று இல்லா மல் வாகனத்தை இயக்கி, வித்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு கிடை க்காது. அதோடு உரிய ஓட்டுநர் உரிமம் பெற்ற வர்கள் தான் வாகனத்தை இயக்க வேண்டும்.

    அதிக பாரம் ஏற்றி சென் றால் அபராத தொகை விதிக்கப்படும். எனவே அனுமதிக்கப்பட்ட எடையோடு தான் வாக னத்தை இயக்க வேண்டும்.

    இவ்வாறு இயக்குவது வாகனத்துக்கும், சாலை க்கும் பாதுகாப்பாக இரு க்கும்.

    விபத்துக்களையும் தவிர்க்க முடியும். இதுபோ ன்று தொடர்ச்சி யாக சோதனைகள் நடைபெறும் என்பதால், வாகன ஓட்டி கள் உரிய அனைத்து ஆவணங்களையும் வைத்தி ருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காரமடை-மஞ்சூர் சாலையில் கூட்டமாக சுற்றி திரிகிறது

    மேட்டுப்பாளையம், 

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மேட்டுப்பா ளையம் காரமடை சிறுமுகை பகுதியில் எண்ணற்ற வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக காட்டுயானை, மான், கரடி, சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சாலை யை கடக்கும் யானைகள் விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் காரமடை- வெள்ளியங்காடு சாலையில் ஓரமாக யானை கூட்டம் ஒன்று குட்டியுடன் உலா வந்தது.

    இதனை வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ க்கள் சமூக வலைத்த ளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.
    • கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    கோவை,

    உலகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (26-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவதற்கா கவும், வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்வதற்காகவும் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் பொரி-கடலை ஆகியவற்றை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் பூக்கள் விற்பனை க்காக கொண்டு வரப்படுகி ன்றன. மேலும் வெளி மாவட்டம் -மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் சரக்கு லாரிகளில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் ஒட்டுமொத்த மாக சுமார் 5 டன் பூக்கள் விற்ப னைக்காக கொண்டு வரப்படுகி ன்றன. அங்கு அவை உள்ளூர் வியாபா ரிகளுக்கு ஏலமுறையில் விற்கப்ப்ப ட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களும் குடும்பத்து டன் வந்திருந்து கிலோக்க ணக்கில் பூக்களை கொள்மு தல் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் வாடிக்கை யாளர்களின் கூட்டம் அலைமோதியது. அதேநே ரத்தில் வெளியூர்-வெளி மாவட்டங்களில் இருந்து பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து இருந்தது.

    எனவே கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    மேலும் பொரி மற்றும் கடலை வகைகளின் விலை களும் சற்று அதிகரித்து உள்ளன. கோவை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலை ரூ.400 அதிகரித்து இன்று ஒரு கிலோ மல்லி ரூ.1600-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல முல்லைப்பூவின் விலை தற்போது ரூ.800-க்கு விற்பனை செய்யப்ப டுகிறது. அரளிப்பூவின் விலை மட்டும் ரூ.40 குறைந்து தற்போது ரூ.160-க்கு விற்கப்பட்டு வருகிறது.

    கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பூக்களின் விலைவிவரம் (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):

    ெசவ்வந்தி-120, அரளி-160 (200), சம்பங்கி-80, தாமரை ஒரு பூ-20, ஜாதிமல்லி-800 (600), கோழிக்கொண்டை-50, துளசி-30, மரிக்கொழுந்து ஒரு கட்டு-50, ரோஜா-120, வெள்ளை செவ்வந்தி-280, கலர் செவ்வந்தி-200 (160).

    கோவை பலசரக்கு மட்டும் ஒட்டுமொத்த கடைகளில் தற்போது பொரிகடலை மற்றும் அவல்பொரியின் விலை சற்று அதிகரித்து உள்ளது. நாளை திருக்கார்த்திகை என்பதால் பொதுமக்கள் விலைஉயர்வு பற்றி கவலைப்படாமல் பூக்கள் மற்றும் பலசரக்கு பொரு ட்களை வாங்கி செல்கின்ற னர்.

    • கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் குறித்து ஆய்வு
    • படித்த பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

    கோவை,

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால், மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதிலும், வேலை வாய்ப்பு பெறுவதிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    இந்நிலையில், தற்போது பிளஸ்-2 படிக்கும் மாண வர்கள் அடுத்த ஆண்டு கல்லூரிக்கு சேரும் ஆர்வத்தை தூண்டும் வகை யில் களப்பயணம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு தலா 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் 113 மேல்நி லைப்பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 4 ஆயிரத்து 45 மாணவர்கள் கல்லூரி களப்பயணத்திற்கு தேர்வாகியுள்ளனர். இந்த மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த பாடப்பிரிவுகளின் அடிப்படையில் அந்தந்த பாடப்பிரிவு உள்ள கல்லூரிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    இதற்காக, பாரதியார் பல்கலைக்கழகம் வேளாண் பல்கலைக்கழகம், கோவை, மேட்டுப்பாளையம், வால்பாறை அரசு கலைக்கல்லூரிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 24 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த களப்பயணத்தின் போது மாணவர்கள் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், நூலகம், ஆய்வகங்கள், உபகரணங்கள், விளையாட்டு மைதானங்கள், விடுதி அறைகள், உணவுகூடம், வகுப்பறைகள், அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் குறித்து பார்வையிட உள்ளனர்.

    மேலும், கல்லூரியில் உள்ள இளங்கலை படிப்புகள், உதவித் தொகை திட்டங்கள், போட்டி தேர்வுகள், வேலைவாய்ப்புகள், பயிற்சி வகுப்புகள், சான்றிதழ் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், படித்த பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ்கள் ஏற்பாடு செய்யபடவுள்ளது.

    மேலும், களப்பயணத்தின் போது மாணவர்கள் சீருடையில் தான் வர வேண்டும். மாணவர்களுக்கு மதிய உணவு, தேநீர் உள்ளிட்டவையும் வழங்கப்படும். இந்த கல்லூரி களப்பயணத்திற்கு மாணவர்களை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குழந்தைகளுக்கு சத்துணவு நல்ல முறையில் வழங்குகிறார்களா என்று சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.


    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளது. வால்பாறை அருகே 11 வது வார்டு உட்பட்ட பச்சமலை எஸ்டேட் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2ஆசிரியர்களும், 23 பள்ளி குழந்தைகளும் படித்து வருகின்றனர்.

    இதில் வட மாநில மாணவர்களும் படித்து வருகின்றனர். 11-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் அப்பகுதிக்கு சென்று பழமையான பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி குழந்தைகளின் சத்துணவு மையத்தை ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு சத்துணவு நல்ல முறையில் வழங்குகிறார்களா என்று சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

    ×