search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poomarket"

    • கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.
    • கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    கோவை,

    உலகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (26-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவதற்கா கவும், வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்வதற்காகவும் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் பொரி-கடலை ஆகியவற்றை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் பூக்கள் விற்பனை க்காக கொண்டு வரப்படுகி ன்றன. மேலும் வெளி மாவட்டம் -மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் சரக்கு லாரிகளில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் ஒட்டுமொத்த மாக சுமார் 5 டன் பூக்கள் விற்ப னைக்காக கொண்டு வரப்படுகி ன்றன. அங்கு அவை உள்ளூர் வியாபா ரிகளுக்கு ஏலமுறையில் விற்கப்ப்ப ட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களும் குடும்பத்து டன் வந்திருந்து கிலோக்க ணக்கில் பூக்களை கொள்மு தல் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் வாடிக்கை யாளர்களின் கூட்டம் அலைமோதியது. அதேநே ரத்தில் வெளியூர்-வெளி மாவட்டங்களில் இருந்து பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து இருந்தது.

    எனவே கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    மேலும் பொரி மற்றும் கடலை வகைகளின் விலை களும் சற்று அதிகரித்து உள்ளன. கோவை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலை ரூ.400 அதிகரித்து இன்று ஒரு கிலோ மல்லி ரூ.1600-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல முல்லைப்பூவின் விலை தற்போது ரூ.800-க்கு விற்பனை செய்யப்ப டுகிறது. அரளிப்பூவின் விலை மட்டும் ரூ.40 குறைந்து தற்போது ரூ.160-க்கு விற்கப்பட்டு வருகிறது.

    கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பூக்களின் விலைவிவரம் (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):

    ெசவ்வந்தி-120, அரளி-160 (200), சம்பங்கி-80, தாமரை ஒரு பூ-20, ஜாதிமல்லி-800 (600), கோழிக்கொண்டை-50, துளசி-30, மரிக்கொழுந்து ஒரு கட்டு-50, ரோஜா-120, வெள்ளை செவ்வந்தி-280, கலர் செவ்வந்தி-200 (160).

    கோவை பலசரக்கு மட்டும் ஒட்டுமொத்த கடைகளில் தற்போது பொரிகடலை மற்றும் அவல்பொரியின் விலை சற்று அதிகரித்து உள்ளது. நாளை திருக்கார்த்திகை என்பதால் பொதுமக்கள் விலைஉயர்வு பற்றி கவலைப்படாமல் பூக்கள் மற்றும் பலசரக்கு பொரு ட்களை வாங்கி செல்கின்ற னர்.

    ×