search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இன்று விழிப்புணர்வு வாக்கத்தான்-மாரத்தான் போட்டி
    X

    கோவையில் இன்று விழிப்புணர்வு வாக்கத்தான்-மாரத்தான் போட்டி

    • பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்
    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு செயற்கைகால் வழங்க நிதி திரட்டும் வகையில் நிர்வாகிகள் ஏற்பாடு

    கோவை,

    ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் சேக்புரோ சார்பில் மாரத்தான் போட்டி இன்று கோவை அவினாசி சாலையில் உள்ள பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

    8 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு செயற்கை கால் வழங்க நிதி திரட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இந்த மாரத்தான் ஓட்ட த்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகி ருஷ்ணன் தொடங்கி வைத்து, மக்களுடன் மார த்தான் ஓடினார். செல்லா கே.ராகவேந்தர் முன்னிலை வகித்தார். இதில் 200-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியானது 3 பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள், டி-சர்ட், சாக்ஸ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. திட்டத்த லைவர் லட்சுமி நாராய ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவையில் நீரிழிவு நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படு த்தும் வகையில் குழந்தை களை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற "கிட்ஸ் வாக்க த்தான் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கோவை ரேஸ்கோர்சில் நடந்த நிகழ்ச்சியை கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். பந்தய சாலை மீடியா டவரில் தொடங்கிய வாக்க த்தான் பந்தய சாலை முழுவதும் சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்தடை ந்தது. இதில் குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விழிப்பு ணர்வு பதாகை களை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.இதில் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் மற்றும் ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் தலைவர் ரேஷ்மா ரமேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×