search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1600 அடிஉயர மலைஉச்சியில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம்
    X

    1600 அடிஉயர மலைஉச்சியில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம்

    • மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் விழா கோலாகலம்
    • இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

    குனியமுத்தூர்,

    கோவை- பாலக்காடு ரோடு, குனியமுத்தூருக்கு அருகே உள்ள மதுக்கரையில் பிரசித்திபெற்ற தர்மலிங்கே ஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. கோவில், தரைமட்ட த்தில் இருந்து 1600 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 960 படிகள் ஏறி சென்று, சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.

    மதுக்கரை தர்மலிங்கே ஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்தி ருவிழா மற்றும் கிரிவலம் ஆகியவை வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அப்போது கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்தி ருந்து கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து மனநிறைவுடன் வீடு திரும்புவர்.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடப்பாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

    மதுக்கரை தர்மலிங்கே ஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழாவை கண்டுக ளிப்பதற்காக திருமலை பாளையம், சாவடி, சீரப்பாளையம், அரிசிபாளை யம், எட்டிமடை, கோ வைப்புதூர், சுண்ட க்காமுத்தூர், ராமசெட்டி பாளையம், பி.கே.புதூர், குனியமுத்தூர், குரும்பபா ளையம், ஈச்சனாரி, அறிவொ ளி நகர், எம்ஜிஆர் நகர், மதுக்கரை மார்க்கெட், சுகுணாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்திரு ந்தனர்.

    அப்போது அவர்கள் கோவில் கருவறையில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய சுவாமியை மனமுருக வழிபட்டு வருகின்றனர். மேலும் இந்த கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரடியாக கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இந்த கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதில் முதல் நாள் திருவிழாவை மதுக்கரை ஊர்மக்களும், 2-வது நாள் திருவிழாவை திருமலை யாம்பாளையம் பொது மக்களும், 3-வது நாள் திருவிழாவை எட்டிமலை ஊர்மக்களும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.

    தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) கிரிவலம் நடைபெற உள்ளது. மேற்கண்ட 3 நாட்களிலும் சேர்த்து கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுக்கரை தர்மலிங் கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபம் முடிந்து கீழே இறங்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். மேலும் நாளை கிரிவலத்தின்போது காலை முதல் மாலைவரை அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வர உள்ளனர். மேலும் தர்மலிங்கேஸ்வரரை மனதார வேண்டி கிரிவலம் சென்று வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும், கோர்ட் வழக்குகளில் வெற்றி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த கோவிலில் மாதாமாதம் பவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். அப்போதும் இங்கு பவுர்ணமி கிரிவலம் நடத்தப்படும்.

    மதுக்கரை தர்மலிங்கே ஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் மட்டுமின்றி பிரதோஷம், கிருத்திகை, பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை நடைபெறும். ஐப்பசி பவுர்ணமி மற்றும் தைப்பூசம் அன்று அன்னா பிஷேகம் நடைபெறுவது வழக்கம்.மேலும் பௌர்ணமி தவிர மாத நாட்களில் தினமும் முக்கால பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் முக்கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விசேஷ நாட்களில் மாலை 6.30 மணிவரை கோவிலின் நடை திறந்திருக்கும்.

    பழம்பெருமைவாய்ந்த மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், 150 ஆண்டுகளுக்கும் மேல் கார்த்திகை தீபம் தொடர்ந்து ஏற்றப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×