search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓலா எஸ்1 ப்ரோ"

    குரூப் 1 தேர்வுகள் எழுதி வெற்றி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் முதல் முறையாக நேர்முக தேர்வில் கலந்து கொண்டு டிஎஸ்பியாக தேர்வு பெற்றுள்ளார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஆர்.வடிவேல் (வயது 37).இவரது தந்தை பெயர் ராமன், தாயின் பெயர் சிந்தாமணி இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வளையகாரன் வலசு.

    இவர் பிஎஸ்ஸி (கணிதம்)எம்.ஏ.பிஎட். (வரலாறு) பட்ட படிப்பு முடித்து, அம்மா பேட்டை அருகே உள்ள மறவபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

    கடந்த 17.01.2002 முதல் இன்று வரை 17 வருடங்களாக அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார் இவர் ஐ.ஏ.எஸ். கனவுடன் இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வுகளும் எழுதியுள்ளார்.

    கடந்த 2013 முதல் 3 முறை குரூப் 1 தேர்வுகள் எழுதப்பெற்று முதல் முறையாக நேர்முக தேர்வில் கலந்து கொண்டு டிஎஸ்பியாக தேர்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவியின் பெயர் பிளாரன்ஸ் இவரும் அரசு பள்ளி ஆசிரியையாக பணி புரிகிறார். இவருக்கு அறிவமுது (11) என்ற மகளும் அமுதப் பிரியன் ( 9) என்ற மகனும் உள்ளனர்.

    டி.எஸ்.பி.யாக தேர்வு பெற்ற இவரை சக ஆசிரியர்களும் அப்பகுதி பொதுமக்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். #tamilnews

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பட்ஜெட் விலையில் மூன்று புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 # #Nokiamobile



    பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. 

    நோக்கியாவின் புதிய மொபைல்களான நோக்கியா 1 பிளஸ், நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 210 மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கிறன.



    நோக்கியா 1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் FWVGA+ IPS டிஸ்ப்ளே
    - குவாட்கோர் மீடியாடெக் MT6739WW பிராசஸர்
    - 1 ஜி.பி. ரேம்
    - 8 ஜி.பி. மெமரி
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்)
    - 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - மைக்ரோ யு.எஸ்.பி.

    நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரெட், புளு மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,030) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 3.2 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், செல்ஃபி நாட்ச்
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.2/1.12µm
    - பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - மைக்ரோ யு.எஸ்.பி. 
    - ஃபேஸ் அன்லாக்
    - கைரேகை சென்சார் (32 ஜி.பி. மெமரி மாடலில் மட்டும்)

    நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 139 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,873) என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 210 சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே
    - மீடியாடெக் MT6260A பிராசஸர்
    - வி.ஜி.ஏ. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 16 எம்.பி. இன்டெர்னல் மெமரி
    - எஃப்.எம். ரேடியோ
    - எம்.பி.3 பிளேயர்
    - ஃபேஸ்புக், ஸ்நேக் கேம்
    - செயலிகளை டவுன்லோடு செய்ய ஆப் ஸ்டோர்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 1020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்

    நோக்கியா 210 மொபைல் போன் சார்கோல், ரெட் மற்றும் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 35 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,480) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கூத்தாநல்லூரில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 48). இவரது 17 வயது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் திடீரென மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

    இதுபற்றி திருவாரூர் மகளிர் போலீசில் அவர் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற வாலிபர் , மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    வாலிபர் விக்னேஷ், மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கு இருந்து வந்தது.

    இதுசம்பந்தமாக கடந்த 13-ந் தேதி போலீசார், வாலிபர் விக்னேசை கைது செய்தனர். பின்னர் அவரை நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே மாயமான மாணவியை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் வாலிபர் விக்னேஷ், வீட்டில் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

    மார்த்தாண்டம் பிளஸ்-1 மாணவியை பெங்களூருக்கு கடத்தி சென்ற என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மாணவியை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை அமைத்து போலீசார் மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    அப்போது பள்ளியாடி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் மாஸ்கஸ் மெல்பு‌ஷன் (வயது 21) என்பவர் அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து பேசி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார், மாஸ்கஸ் மெல்பு‌ஷன் பற்றி விசாரித்தனர். அப்போது அவரும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது செல்போன் டவர் மூலம் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். இதில் பெங்க ளூருவில் அவர் இருப்பதாக செல்போன் டவர் காட்டியது. 

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூருக்கு விரைந்து சென்று தேடுதல்வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் மாஸ்கஸ் மெல்பு‌ஷன் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் மாயமான மாணவியும் மாஸ்கஸ் மெல்பு‌ஷனின் நண்பரான பள்ளியாடி பகுதியை சேர்ந்த சுபின் என்பவரும் அவர்களுடன் இருந்தார். போலீஸ் விசாரணையில் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை மாஸ்கஸ் மெல்பு‌ஷன் பெங்களூருக்கு கடத்திச் சென்றதும், அங்கு வாடகை வீட்டில் அவரை அடைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு மார்த்தாண்டம் கொண்டுவந்து விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு மாஸ்கஸ் மெல்பு‌ஷன் மற்றும் அவரது நண்பர் சுபின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    மாணவி குறித்து அவதூறு கருத்து பரப்பி கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மதுசூடியான். இவரது மகன் ரேனியல் (வயது19). இவர் நெல்லையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவிக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் ரேனியலின் பழக்க வழக்கம் பிடிக்காததால் அந்த மாணவி பேஸ்புக்கில் இருந்து அவரை நீக்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரேனியல் அந்த மாணவி குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியும், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவியின் தாய் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ரேனியலை கைது செய்தனர்.

    அரசு பள்ளி மாணவர்கள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சக மாணவனை கடத்தி கொத்தடிமையாக அனுப்பிய சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கோடியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தஞ்சையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான்.

    அதேபள்ளியில் திருக்கருக்காவூரை சேர்ந்த ராஜா (17), வளையபேட்டையை சேர்ந்த சரவணன், மாத்தூரை சேர்ந்த சந்திரன், கரந்தட்டான் குடியை சேர்ந்த சுந்தர் (மேலே உள்ள 4 மாணவர்களின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) இவர்கள் 4 பேரும் அதே அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த டிசம்பர் 4-ந் தேதி தினேஷ் காலை வழக்கம் போல்பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். மீண்டும் மாலை வீடு திரும்பவில்லை. தினேசின் தந்தை வெளியூரில் வேலை பார்த்து வந்ததால் அவரது தாய் மகனை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. இதையடுத்து தன்னுடைய கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து ஊருக்கு வந்த தினேசின் தந்தை மாயமான மகனை சில நாட்கள் தேடி அலைந்துள்ளார். ஆனால் மகன் எங்கு சென்றான் என்ற தகவல் கிடைக்காததால் தஞ்சையில் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் போலீசில் புகார் அளித்து நீண்ட நாட்கள் ஆகியும் போலீசார் தினேசை கண்டு பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இனி போலீசாரை நம்பி பயன் இல்லை என தன்னுடய மகனை கண்டுபிடிக்க தானே களத்தில் இறங்கி விசாரணையில் இறங்கினார்.

    அதன்படி தினேஷ் படித்த அரசு பள்ளிக்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தியபோது டிசம்பர் 4-ந் தேதி பள்ளிக்கு வந்த தினேஷ் அதேபள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் ராஜா, சரவணன், சந்திரன், சுந்தர் ஆகிய 4 மாணவர்களுடன் பள்ளியை விட்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 4 மாணவர்களது வீடுகளுக்கும் சென்று தன்னுடைய மகனை எங்கு அழைத்து சென்றீர்கள் என கேட்டுள்ளார். அப்போது தாங்கள் அழைத்து செல்லவில்லை என அடித்து கூறினர்.

    அதனை தொடர்ந்து அந்த 4 மாணவர்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது அவர்கள் 4 பேரும் அடிக்கடி பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றுபவர்கள் அவர்கள் தீய பழக்கங்கள் உள்ளவர்கள் என தெரிவித்தார்.

    இதற்கிடையே தினேசின் தந்தைக்கு, 4 மாணவர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் கடந்த மாதம் 14-ந் தேதி மாணவர் சந்திரனின் வீட்டிற்கு சென்ற தினேசின் தந்தை உங்களுடைய மகனும் அவனது நண்பர்களும் சேர்ந்து எனது மகனைகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன். எனவே நிதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளேன் என கூறி விட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த 18-ந்தேதி காலையில் தினேசின் தந்தை செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட அந்த 4 மாணவர்களில் ஒருவரான ராஜா உங்களுடைய மகன் கரம்பத்தூர் பகுதியில் பார்த்ததாக கூறிவிட்டு போனை கட் செய்துள்ளான்.

    இதையடுத்து அங்கு சென்று தேடி பார்த்த போது தினேஷ் ஆவூர் சாலையில் உள்ள பாலத்தில் சுய நினைவை இழந்தபடி மயக்கத்தில் இருந்தான். அவனது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.

    தினேசை மீட்டு அவனுடைய தந்தை விசாரித்தார். அப்போது சம்பவத்தன்று தனது நண்பர்கள் 4 பேரும் தன்னை பள்ளியை விட்டு வெளியே வா. முக்கியமான இடத்திற்கு அழைத்து செல்கிறோம் என வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.

    பின்னர் 4 பேரும் என்னை கொடிமரத்து மூலை அருகே உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவர்கள் கும்பகோணத்தை சேர்ந்த மணி என்பவரிடம் தன்னை அறிமுகம் செய்தனர். அவர்கள் தனியாக சென்று பேசினர். மணி அவர்கள் 4 பேருக்கும் பணம் கொடுத்தார். அதன்பின்னர் தனக்கு டீ வாங்கி கொடுத்தனர். அதன்பிறகு நான் மயக்கம் அடைந்துவிட்டேன். முழித்து பார்த்த போது திருப்பூரில் ஒரு அறையில் கிடந்தேன்.

    அங்கிருந்த சிலர் தனக்கு சாப்பாடு போட்டு அடித்து துன்புறுத்தி கொத்தடிமையாக வேலை வாங்கியதாக கூறியுள்ளான்.

    இதையடுத்த தினேசின் தந்தை அந்த 4 மாணவர்களிடமும் சென்று இதுகுறித்து மிரட்டி விசாரித்த போது தங்களுக்கும் இதுபோன்ற மாணவர்களை கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் நாங்கள் அழைத்து விடும் மாணவர்களுக்கு ஏற்றாற்போல் பணம் தருவார்கள் என கூறியுள்ளனர். நாங்கள் இதுபோன்று இனிமேல் செய்யமாட்டோம். தங்களை போலீசில் மாட்டி விட வேண்டாம் என கெஞ்சியுள்ளனர்.

    பள்ளி மாணவர்கள் என்பதால் தினேசின் தந்தை அவர்களை கண்டித்து விட்டு சென்றுவிட்டார்.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனனத்தின் நோக்கியா 9 பியூர்வியூ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், நோக்கியா 1 பிளஸ் சிறப்பம்சங்கள் லீக் ஆகியுள்ளது. #nokiamobile #smartphone



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பிப்ரவரி 24 ஆம் தேதி பார்சிலோனாவில் தனது புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவ்விழாவில் அந்நிறுவனத்தின் நோக்கியா 9 பியூர்வியூ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், உயர் ரக ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் தவிர என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது நோக்கியா 1 பிளஸ் என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் அதன் சிறப்பம்சங்களுடன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. 


    புகைப்படம் நன்றி: TigerMobiles

    அதன்படி நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 1 ஜி.பி. ரேம், மீடியாடெக் சிப்செட், ஆண்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்) இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. டைகர் மொபைல் வெளியிட்டிருக்கும் ரென்டர்களின் படி நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 

    நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 480x960 பிக்சல் டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739WW சிப்செட், பவர் வி.ஆர். GE8100 GPU கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க கேமரா அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. 

    கனெக்டிவிட்டியை பொருத்த வரை நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், ஜி.பி.எஸ்., வைபை, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகிறது. புதிய நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீடு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மொபிஸ்டார் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் நாட்ச் டிஸ்ப்ளே, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. #Mobiistar #smartphone



    மொபிஸ்டார் நிறுவம் இந்தியாவில் எக்ஸ்1 நாட்ச் எனும் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

    மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், ஃபேஸ் அன்லாக் வசதி, டூயல் 4ஜி வோல்ட்இ வசதி, 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1498x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்
    - IMG பவர் விஆர் ரோக் GE8300
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் ஷைன், மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.8,499 என்றும், 3 ஜி.பி. ரேம் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
    ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு சென்ற பிளஸ்-1 மாணவி மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கல்கோவில் கிராமத்தை சேர்ந்த கங்கைஅமரன் மகள் மகாலெட்சுமி (வயது15). ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    அரையாண்டு தேர்வு விடுமுறை தினத்தையொட்டி பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    மாணவி மகாலெட்சுமி இன்று காலை சிறப்பு வகுப்பில் பங்கேற்க பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். 2-வது மாடியில் உள்ள அவரது வகுப்பறைக்கு சென்றார் காலை 9.30 மணிக்கு மாணவி திடீரென 3-வது மாடிக்கு சென்றார்.

    அங்கு சென்ற அவர் மாடியில் இருந்து திடீரென விழுந்தார். இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் ஓடிவந்தனர். அவர்கள் மாணவி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    மாணவியின் பெற்றோர் ஆலங்காயம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியின் பெற்றோர் உறவினர்கள் பள்ளியில் குவிந்தனர். அவர்கள் மாணவியின் உடலை கண்டு கதறி அழுதனர்.

    ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து போலீசார், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சியோமி நிறுவனத்தின் போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. #POCOF1 #smartphone



    சியோமியின் போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை நாளை (டிசம்பர் 26 ஆம் தேதி) துவங்குகிறது. போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் ஸ்மார்ட்போனில் முன்னதாக 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருந்தது. 

    போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷனின் பின்புறம் கெவ்லர் பேக் பேனல் மற்றும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு, விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகும் என சியோமி தெரிவித்திருந்தது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.



    போகோ எஃப்1 சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் 
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போகோ எஃப்1 ஆர்மர்டு எடிஷன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ஏற்கனவே ரூ.29,999 விலையில் வெளியிடப்பட்டது. 

    போகோ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் படி புதிய ஆர்மர்டு எடிஷன் போகோ எஃப்1 விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை 00.01 மணிக்கு நடைபெறும் என துவங்கப்பட்டுள்ளது.
    சேலம் அருகே பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குறித்த பிளஸ்-1 மாணவி ஒரு மாத சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சேலம்:

    சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகள் ரவீணாஸ்ரீ (வயது 17).

    இவர் வேம்படிதாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் ரவீணாஸ்ரீ வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் அவர் வகுப்பறையில் அமர்ந்து தனது சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.

    காலை 9.45 மணியளவில் தோழிகள் அனைவரும் இறைவணக்கம் வழிபாடு செலுத்த பள்ளி மைதானத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் இறைவணக்கம் செலுத்தவா? என கூறி ரவீணாஸ்ரீயை அழைத்தனர். அதற்கு அவர் முதலில் நீங்கள் செல்லுங்கள். பிறகு நான் வருகிறேன் என்று கூறிவிட்டு வகுப்பறையிலேயே இருந்தார்.

    வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் திடீரென பிளேடால் தனது இடது கையை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட பள்ளி கட்டிடத்தின் படி வழியாக 3-வது மாடிக்கு ஏறினார்.

    பின்னர் பள்ளியின் 3-வது மாடி மொட்டை தளத்தில் இருந்து அவர் கீழே குதித்தார். இதில் அவரது 2 கால்களும் முறிந்து போனது. மேலும் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    யாரும் எதிர்பாராத நிலையில் நடந்த இந்த சம்பவத்தால் இறைவணக்கம் வழிபாடு நிகழ்ச்சியில் இருந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரவீணாஸ்ரீயை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவியை குணப்படுத்த தொடர்ந்து குளுக்கோஸ், ஊசி மருந்துகள் செலுத்தி தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு டாக்டர்களும் மாணவியின் கால்களை சரி செய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

    தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த அடிப்பட்டிருந்ததால் மூளை அறுவை சிகிச்சை டாக்டர்களும் மாணவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என போராடினார்கள். இதற்காக ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுத்து பார்க்கப்பட்டது. இருப்பினும் மாணவியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    மேலும் நாளுக்குள் நாள் மாணவியின் நிலைமை கவலைக்கிடமானது. இதனால் மாணவி மயக்க நிலைக்கு சென்றார். கடந்த ஒரு மாதகாலமாக சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மகள் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்த சம்பவம் குறித்து அவரது தோழிகள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    ரவீணாஸ்ரீ சில நாட்களாக தனக்கு உயிர் வாழபிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டே இருந்தாள். அப்போது நாங்கள் அவளுக்கு தைரியம் சொன்னோம். 27-ந்தேதி காலையில் பள்ளிக்கு வந்ததில் இருந்தே அவள் சோகமாக இருந்தாள். நாங்கள் அவரிடம் ஏன்? இவ்வாறு சோகமாக இருக்கிறாய் ? இறைவணக்கத்திற்கு செல்வோம் எழுந்து வா? என்று கூறினோம்.

    அப்போது அவள் எங்களுடன் வர மறுத்து விட்டாள். நாங்கள் அவளுக்கு மீண்டும் தைரியம் சொல்லிவிட்டு இறைவணக்கம் செலுத்த வந்து விட்டோம். பின்னர் சிறிது நேரத்தில் இந்த துயரம் சம்பவம் நடந்து விட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஒரு மாத காலமாக சிகிச்சையில் இருந்தும் எங்களது ரவீணாஸ்ரீயை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என தோழிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    மாணவி தற்கொலை சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் கூறுகையில், மாணவி ரவீணாஸ்ரீக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள பள்ளி கட்டிட 3- வது மாடியில் இருந்து குதித்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
    மொபிஸ்டார் நிறுவனம் இந்தியாவில் சி1 ஸ்மார்ட்போனினை ஃபேஸ் அன்லாக் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. #smartphone



    மொபிஸ்டார் நிறுவனம் இந்தியாவில் சி1 என்ற பெயரில் புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 5.34 இன்ச் FWVGA+ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் மொபிஸ்டார் சி1 ஸ்மார்ட்போன் குவாட்கோர் மீடியாடெக் MT6739 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் கொண்டுள்ளது. புது ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படாமல், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    மொபிஸ்டார் சி1 ஷைன் சிறப்பம்சங்கள்:

    - 5.34 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே
    - 1.28 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
    - பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மொபிஸ்டார் சி1 ஷைன் ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.6,100 விலையில் கிடைக்கும் மொபிஸ்டார் சி1 ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 முதல் நாடு முழுக்க சுமார் 500க்கும் அதிக விற்பனையாளர்களிடம் கிடைக்கும். #smartphone
    ×