search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Group-1 Exam"

    • தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த்துறை தான்.
    • சுமார் 150 உயர்பதவிகள் காலியாக உள்ளது.

    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் (சப்-கலெக்டர்) பணியிடங்களும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இதனால் வருவாய் நிர்வாகம் சார்ந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

    டி.என்.பி.எஸ்.சி. முதல் தொகுதி தேர்வுகளை (குரூப்-1) ஆண்டுக்கு ஒருமுறை நடத்தாதது, வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியராகவும், துணை ஆட்சியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலராகவும் பதவி உயர்வு வழங்காதது ஆகியவை தான் இவ்வளவு காலியிடங்கள் ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.

    தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த்துறை தான். அத்துறையில் சுமார் 150 உயர்பதவிகள் காலியாக இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்.

    காலியிடங்களில் சுமார் 100 துணை ஆட்சியர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. முதல் தொகுதி தேர்வு மூலம் தான் நிரப்ப முடியும் என்பதால், உடனடியாக அத்தேர்வை அறிவிக்க வேண்டும். அதேபோல், தகுதியான வட்டாட்சியர், துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1,089 கள ஆய்வாளர், வரைவாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 6-ந்தேதி நடத்தப்பட்டது.
    • குரூப்-2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடத்தப்படும்.

    சென்னை :

    தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பல்வேறு இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டதோடு, அதற்கான தேர்வையும் நடத்தி முடித்தது. அந்த வகையில் குரூப்-1, குரூப்-4 உள்பட பல்வேறு பதவிகளில் வரும் ஏராளமான பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது.

    இந்த தேர்வின் முடிவுகள் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டு இருந்த மாதங்களில் வெளியாகும் என்று தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

    உதாரணமாக, 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதிய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவு, முதலில் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் மாதம் முடிவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிப்ரவரி மாதத்தில் தான் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.

    அதன்படி, 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற முழு விவரத்தை தேர்வை நடத்திய டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:-

    * 830 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் சேவைகள் பிரிவுக்கான தேர்வு முடிவு ஏற்கனவே ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும்.

    * 7,301 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவு, அக்டோபரில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு, தற்போது 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும்.

    * 1,089 கள ஆய்வாளர், வரைவாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 6-ந்தேதி நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ஜனவரி மாதம் வெளியிடப்படப்படும்.

    * 92 பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும்.

    இதேபோல், டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்பட்ட மேலும் 8 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த தகவலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, குரூப்-2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

    • குரூப்-1 தேர்வினை 2,228 பேர் எழுதினர்.
    • 1,178 பேர் தேர்வு எழுதவில்லை

    பெரம்பலூர்

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி-1-ல் (குரூப்-1) துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான முதல் நிலை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

    அதன்படி குரூப்-1 தேர்வினை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் 3,406 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து,12 மையங்களில் குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது.தேர்வு அறைக்குள் தேர்வாளர்களை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். சரியாக காலை 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது. 200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. 2,228 பேர் குரூப்-1 தேர்வினை எழுதினர். 1,178 பேர் தேர்வு எழுத வரவில்லை

    • 92 காலி பணியிடங்களுக்கான குரூப் -1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.
    • 9 மணி வரை வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் -1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

    குரூப்-1 தேர்வு

    நெல்லை மாவட்டத்தில் குரூப் -1 தேர்வானது நெல்லை மற்றும் பாளை தாலுகாவில் உள்ள 28 இடங்களில் 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நடைபெற்றது.

    இதனையொட்டி நேற்று அனைத்து தேர்வு மையங்களிலும் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் அதற்கு 30 நிமிடம் முன்னதாகவே அதாவது 9 மணி வரை வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    59 சதவீதம்

    அதன்பின்னர் வந்தவர்கள்தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் தேர்வர்கள் அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் ஒரு சில மையங்களில் நடந்தது. தேர்வானது மதியம் 12.30 மணிவரை நடைபெற்றது.

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 10 ஆயிரத்து 698 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை 6,288 பேர் மட்டுமே எழுதினர். 4,410 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதியவர்களின் சதவீதம் 59 ஆகும்.

    கடுமையான சோதனை

    தேர்வு எழுத வந்தவர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தேர்வறைக்குள் செல்லும்போது செல்போன், கால்குலேட்டர், டிஜிட்டல் வாட்ச் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. நுழைவுச்சீட்டு, பேனா, அடையாள அட்டை ஆகியவை மட்டுமே எடுத்துச்சென்றனர்.

    3 மணி நேரம் நடைபெற்ற இந்த தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்கள் உடன் வந்து தேர்வு எழுதினர். அவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டது. 12.30 மணிக்கு தேர்வு முடிவடைந்த பின்னர் அனைத்து தேர்வர்களுக்கும் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

    பாதுகாப்பு

    அந்த நேரத்தில் தேர்வர்கள் ஏ.பி, சி,டி என பிரிவு வாரியாக எத்தனை விடைகளை எழுதியுள்ளனர் என்பதை ஓ.எம்.ஆர்.விடைதாளில் குறிப்பிட்டனர். அதன்பின்னர் அனைத்து தேர்வர்களும் தேர்வறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

    இதனையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும்படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்தினர். இந்த தேர்வையொட்டி போக்குவரத்து கழகம் சார்பில் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த குரூப்-1 தேர்வுக்கு 8,349 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வை 5,267 பேர் எழுதினர். 3,082 பேர் எழுதவில்லை. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வை கண்காணிக்க 3 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டிருந்தது. 26 கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 10, 113 பேர் எழுதினர்
    • 5 நடமாடும் குழுக்கள் பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் சார்பில் குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.

    துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, துணைப்பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 மையங்க ளில் 3,883 பேர் தேர்வு எழுதினர்.

    இதேபோல் வேலூர் மாவட்டத்தில் 6,230 பேர் தேர்வு எழுதினர் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி, சத்துவாச்சாரி ேஹாலி கிராஸ் பள்ளி, ஊரீஸ் பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள 23 மையங்களில் நடந்தது.

    தேர்வு மையங்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் மின்சாரம் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் துணை ஆட்சியர் அளவிலான 2 பறக்கும் படை அலுவலர்கள் துணை வட்டாட்சியர்கள் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் போலீசார் அலுவலக உதவியாளர் ஆகியோர் சேர்ந்து 5 நடமாடும் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அனைத்து நிகழ்வு களையும் வீடியோவாக பதிவு செய்தனர். தேர்வு எழுத காலை 9 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு எழுத வந்தவர்கள் கொண்டு வந்த செல்போன், டிஜிட்டல் வாட்ச், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் போன்றவற்றை தேர்வு மையத்திற்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட வில்லை.

    • திருப்பூர் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வு எழுத 5856 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
    • மாவட்டம் முழுவதும் 13 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகள் என மொத்தம் 20 மையங்களில் தேர்வு நடந்தது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் உயர் பதவிகளுக்கான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) 26, வணிக வரித்துறை உதவி இயக்குனர் 25, கூட்டுறவுத்துறை பதிவாளர் 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் 7, மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி 3 பதவிகள் என 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி வெளியிட்டது. இதையடுத்து ஏராளமானவர்கள் போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வு எழுத 5856 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டம் முழுவதும் 13 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகள் என மொத்தம் 20 மையங்களில் தேர்வு நடந்தது. திருப்பூர் மாநகரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி உள்பட சில முக்கியமான பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 12.30 மணி வரை நடந்தது. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 5856பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 3,239 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 2,617 பேர் தேர்வு எழுத வரவில்லை. 45 சதவீதம் பேர் தேர்வு எழுத வராததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    • குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.
    • காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடக்கிறது.

    சென்னை :

    துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது.

    முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுதுவதற்காக 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், அதில் 2 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு, 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுத தகுதியுள்ளவர்களாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

    காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடக்கிறது. பொதுப்பாடம் பிரிவில் 175 வினாக்கள் திறனறிவு பிரிவில் 25 வினாக்கள் என 200 வினாக்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள் என்ன மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பது தொடர்பான முழு விவரங்களை ஹால்டிக்கெட்டில் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    • டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நாளை மறுநாள் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
    • குரூப்-1 தேர்வுகளை 10,698 பேர் எழுத உள்ளனர். குரூப்-1 தேர்வையொட்டி தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 12 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நாளை மறுநாள் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நெல்லை, பாளை வட்டங்களில் ராணி அண்ணா அரசு கல்லூரி, பேட்டை காமராஜர் மேல்நிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி, நெல்லை சட்டக்கல்லூரி, சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 28 இடங்களில் 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    குரூப்-1 தேர்வுகளை 10,698 பேர் எழுத உள்ளனர். குரூப்-1 தேர்வையொட்டி தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 12 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வுகளை பதிவு செய்ய 38 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தலை கண்காணிக்க 36 ஆய்வு அலுவலர்கள், சப்-கலெக்டர் நிலையில் 6 பறக்கும்படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்னர்.

    மேலும் 19-ந் தேதி தேர்வு நடைபெறும் போது தேர்வு மையங்களில் தடை இல்லா மின்சாரம், பேருந்து வசதி ஆகியவற்றை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்வு அறையினுள் தேர்வர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

    • அக்டோபர் 30ந் தேதிக்கு பதில் நவம்பர் 19ந் தேதி தேர்வு நடைபெறும்.
    • நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு தேதி மாற்றப் பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இந்த தேர்வு நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குரூப்-1 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 30ந் தேதிக்கு பதில் நவம்பர் 19ந் தேதி தேர்வு நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30-ந் தேதி நடைபெற இருக்கிறது.

    சென்னை :

    குரூப்-1 பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் 18 துணை கலெக்டர், 26 போலீஸ் துணை சூப்பிரண்டு, 25 வணிகவரித்துறை உதவி ஆணையர், 13 கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர், 7 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், 3 மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த மாதம் (ஜூலை) வெளியிட்டது.

    அதன்படி இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 92 காலிப் பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தப் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் 30-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள், அடுத்தகட்டமாக நடைபெற இருக்கும் முதன்மைத்தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    • 92 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • அலுவலக எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் -1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை 25-ந்தேதி தொடங்குகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் துணை கலெக்டர், துணைக் கண்காணிப்பாளா் (காவல் துறை), துணைப்பதிவாளா் (கூட்டுறவு துறை), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), உதவி ஆணையா் (வணிக வரித் துறை) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் போன்ற 92 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இத்தோ்வுக்கு இணையதள முகவரி மூலமாக வரும் ஆகஸ்ட் 22ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    எனவே திருப்பூா் மாவட்டத்தில் டி.என்பிஎஸ்சி .போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபா்கள் தங்களது பெயரை 94990-55944 அல்லது 0421-2999152 என்ற அலுவலக எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சியின் இறுதியில் மாதிரி தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் குரூப்- 1 தோ்வு எழுதும் நபா்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதன்மை தேர்வு மார்ச் மாதம் 4, 5, 6-ந் தேதிகளில் நடைபெற்றது.
    • 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர்.

    துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் 66 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி நடந்தது.

    இந்த தேர்வை 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

    அதன்படி, முதன்மை தேர்வுக்கு 3 ஆயிரத்து 800 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு மார்ச் மாதம் 4, 5, 6-ந் தேதிகளில் நடந்தது . இந்த நிலையில் 66 காலி பணியிடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 29-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    இதில் 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். அதன்படி இவர்களுக்கு நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிப்பட்டுள்ளது.

    ×