search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரூப்-1 தேர்வினை எழுதிய 2,228 பேர்
    X

    குரூப்-1 தேர்வினை எழுதிய 2,228 பேர்

    • குரூப்-1 தேர்வினை 2,228 பேர் எழுதினர்.
    • 1,178 பேர் தேர்வு எழுதவில்லை

    பெரம்பலூர்

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி-1-ல் (குரூப்-1) துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான முதல் நிலை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

    அதன்படி குரூப்-1 தேர்வினை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் 3,406 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து,12 மையங்களில் குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது.தேர்வு அறைக்குள் தேர்வாளர்களை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். சரியாக காலை 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது. 200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. 2,228 பேர் குரூப்-1 தேர்வினை எழுதினர். 1,178 பேர் தேர்வு எழுத வரவில்லை

    Next Story
    ×