search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரூப் -1 தோ்வுக்கான  இலவச பயிற்சி வகுப்பு நாளை  தொடங்குகிறது
    X

    கோப்புபடம். 

    குரூப் -1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது

    • 92 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • அலுவலக எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் -1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை 25-ந்தேதி தொடங்குகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் துணை கலெக்டர், துணைக் கண்காணிப்பாளா் (காவல் துறை), துணைப்பதிவாளா் (கூட்டுறவு துறை), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), உதவி ஆணையா் (வணிக வரித் துறை) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் போன்ற 92 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இத்தோ்வுக்கு இணையதள முகவரி மூலமாக வரும் ஆகஸ்ட் 22ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    எனவே திருப்பூா் மாவட்டத்தில் டி.என்பிஎஸ்சி .போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபா்கள் தங்களது பெயரை 94990-55944 அல்லது 0421-2999152 என்ற அலுவலக எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சியின் இறுதியில் மாதிரி தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் குரூப்- 1 தோ்வு எழுதும் நபா்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×