search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேக விழா"

    • ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு ெதாடங்கியது.
    • கணபதி வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு சாமிக்கு கண் திறப்பு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சின்னாகவுண்டம் பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சின்ன மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு ெதாடங்கியது. கணபதி வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு சாமிக்கு கண் திறப்பு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு மேல் 7.30. மணிக்குள் ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சாமி சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் வைத்து பூஜை செய்து பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கலசங்களுக்கு ஊற்றி தீபாராதனை செய்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • இன்று மாலை யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து கோவில் அருகில் யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

    யாக சாைல பூஜை

    இன்று மாலை யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. ஆச்சார்ய அழைப்பு, இறைவனிடம் அனுமதி பெறுதல், வருண தீர்த்தம் புனிதப்படுத்தி வேள்வி சாலையை சுத்தப்படுத்துதல், திருமண் பரிசோதித்து எழுந்தருளல், திருமுலை இடுதல், பாலிகை தெளித்தல், அக்னி பகவானை கடைந்து எடுத்தல், ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி தொடங்கப்படுகிறது.

    கும்ப பூஜை (கலசபூஜை) திருமாண்பு ஈர்ப்பு செய்தல், கலசத்தில் இறைவனை அமரச்செய்தல், ஐப்பெரும் பூதங்களின் வேள்வி வளர்த்தல் ஆகியவை நடக்கிறது. பின்னர் அனுதின பெருவேள்வி, வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய ப்ரபந்த சமர்ப்பணம், செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்

    நாளை (31-ந்தேதி) காலை 8 மணி முதல் 12. 30 மணிக்குள் வருண தீர்த்தம் புனித படுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய ப்ரபந்த வேள்வி, அனுதின ெபருவிழா மற்றும் அஷ்ட பந்தன மருத்து சாற்றுதல் நடக்கிறது.

    தொடர்ந்து பிம்ப வாஸ்து, மகாசாந்தி வேள்வியை நிறைவு செய்தல் ஆகியவை நடக்கிறது.

    கும்பாபிேஷகம்

    நாளை மறுநாள் (1-ந்தேதி) காலை 7.15 மணிக்கு வருண தீர்த்தம், புனித படுத்துதல் ஆகியவை நடக்கிறது. பின்னர் காலை 10 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகமே மின்ஒளியில் ஜொலிக்கிறது. மேலும் கோவிலில் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ேபாடப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாமக்கல் நகரமே திருவிழா போல் களை கட்டியுள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், டாக்டர் மல்லிகை செல்வா, சீராளன், ரமேஷ் பாபு, அறநிலைய துறை உதவி ஆணையாளர் இளையராஜா, கண்காணிப்பாளர் அம்சா உள்ளிட்டோர் செய்து வருகின்றன.நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது.
    • தற்போது விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகளை ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி விழா ஏற்பாடுகளை ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆலோசனை

    அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் கும்பாபிஷேக விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், எம்.எல்.ஏ. ராமலிங்கம், கோவில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டி யன் நல்லுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி. பங்கேற்று பேசியதாவது:-

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை முதல் வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நாளை முதல் யாகசாலை தொடங்கப்பட்டு நாளை மறுநாள் மாலை வரை நடைபெறும். 1-ந்தேதி அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்கள் தடையின்றி செல்ல மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும்.

    குடிநீர் வசதி

    பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவம் மற்றும் தற்காலிக கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். விழா நடைபெறும் 1-ந்தேதி அன்று பக்தர்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவமனை ஒன்று கோவில் அருகில் அமைக்க வேண்டும்.

    அரங்கநாதர் கோவில் முன்பு 108 ஆன்புலன்ஸ் சேவை முதலுதவி வசதிகளுடன் அதிகாலை 3 மணி முதல் வைத்திருக்க வேண்டும்.

    கண்காணிப்பு கேமரா

    தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட வேண்டும். கோவில் வளாகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் சரவணன், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் பரஞ்சோதி, உதவி கமிஷனர் இளையராஜா, நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா ஸ்ரீநிவாசன், செல்வசீராளன், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி நவம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி நவம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நவம்பர் மாதம் 1-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் மட்டும் நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது.
    • கோவில் கும்பாபி ஷேக விழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி கோவில் வளாகத்தில் யாகசாலைக்கு முகூர்த்த கால் நடப்பட்டது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வழிபட்டு செல்கிறார்கள்.

    கும்பாபிேஷக விழா

    இந்த கோவில் கும்பாபி ஷேக விழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி கோவில் வளாகத்தில் யாகசாலைக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. நாளை (25-ந் தேதி) முதல் யாகசாலை பூஜை தொடங்குகிறது. தற்போது இறுதி கட்ட யாக சாலை பூைஜ பணிகள் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது-

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 60 அடி நீளம், 60 அடி அகலத்தில் பஞ்சாசன வேதிகை அமைத்து நவ குண்டத்துடன் அரண்மனை யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் கோட்டை மாரியம்மனுக்கு 9 யாக குண்டம், விநாயகருக்கு 5 யாககுண்டம் , வெள்ளையம்மன், பொம்மியம்மாள், மதுரை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு ஓட்டு மொத்தமாக 1 யாக குண்டம், துர்க்கை அம்மன், வைஷ்ணவி, மகேஸ்வரி உள்பட பரிவார மூர்த்திகளுக்கு ஒட்டு மொத்தமாக 1 யாக குண்டம், கோபுரத்திற்கு 5 யாக குண்டம், தங்கத்தேருக்கு தலா 1 யாக குண்டம் என மொத்தம் 23 யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது.

    ராஜகோபுரத்திற்கு 7 கலசம், மூலஸ்தான விமானம் 5 , விநாயகர் சன்னதி விமானம் 3, மதுரை வீரன் சன்னதி விமானம் 1 என ெமாத்தம் 16 கலசங்கள் வைக்கப்பட உள்ளது.யாகசாலை பூைஜக்கு சேலம், கோவை, தஞ்சை, கடலூர் உள்பட மாவட்டங்களில் இருந்து சிவாச்சாரியார்கள், தமிழ் ஓதுவார்கள் என மொத்தம் 45 பேர் பங்கேற்கிறார்கள். யாகத்திற்காக 108 வகையான மூலிகைகள், நெய் பழங்கள் பயன்படுத்தப்படும், கும்பாபிஷேகத்திற்கு பின் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.

    விநாயகர் வழிபாடு

    இன்று கணபதி வழிபாடு தொடங்கியது. தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்களும் புனித நீர் கலசம், முளைப்பாலிகையை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி, திசா ஹோமம், காப்பு கட்டுதல் நடக்கிறது.

    முதற்கால யாக பூஜை

    நாளை (25-ந் தேதி) காலை 8 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6 மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை நடக்கிறது.

    26-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜை, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா

    27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.

    • மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில், தியான மண்டபத்துடன் கூடிய சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.
    • ஆகம விதிப்படி துவாரகமாயி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவாரகமாயி சிலை கும்பா பிஷேக விழா நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில், தியான மண்டபத்துடன் கூடிய சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஆகம விதிப்படி துவாரகமாயி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவாரகமாயி சிலை கும்பா பிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை யொட்டி கணபதி ஹோமம், யாக கால சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் சீரடி சாய்பாபா, துவாரகமாயி சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பல்வேறு பகுதியை சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், பொது மக்கள் ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப் பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சாய்பாபா கோயில் அறக்கட்டளை நிர்வா கிகள் ஜவஹர், மாதேஸ்வரி, அரசவர்மன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • தேன்கனிக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • கும்பாபிஷேகம் விழாவில் தலைமேல் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பென்சபள்ளி கிராமத்தில் 16 அடி உயரத்தில் ஸ்ரீ ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேய சுவாமிக்கு புதிதாக விக்கிரகமும், ஆலயமும் கட்டப்பட்டது. இந்த கோவிலில் நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி முதல் கோவிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதற்கால யாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை வேதபாராயணம், மற்றும் மூன்றாம் கால யாக பூஜை ஆகியவை தொடர்ந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜை கோ பூஜை, லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட கோவிலில் மேளதாளங்கள் முழங்க வேத மந்திரங்கள் ஓதி, கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ஒய் பிரகாஷ், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்ல குமார் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் தலைமேல் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். திருவிழாவை ஒட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

    • விழாவில் அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ராஜன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி கலந்து கொள்கின்றனர்.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 1000-வது கும்பாபிஷேக விழா இந்து அறநிலையத்துறை சார்பில் விமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவில் அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ராஜன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு 4-வது கால யாகசாலை வழிபாடும், அதனைத் தொடர்ந்து, அனைத்து யாகசாலை சிறப்பு வேள்வியும் நிறைவு பெறுகிறது.

    காலை 7 மணிக்கு கலச புறப்பாடும், 7.30 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டும் நடைபெறும். பின்னர் அனைத்து பரிவாரங்கள், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு நன்னீராட்டும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • விழாவில் முதல் நாள் காலையில் பாபநாசத்தில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.
    • சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள கோதாண்ட ராமபுரம் சந்தன மாரியம்மன் கோவில் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.இதைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முதல் நாள் காலையில் பாபநாசத்தில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. மாலையில் மங்கள இசை, திருமுறை பாராயணத்துடன் விழா தொடங்கப்பட்டது.

    பின்னர் மகாகணபதி பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி , யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதையடுத்து 2-வது நாள் இரண்டாம் கால யாக பூஜை, மகாகணபதி பூஜை பின்னர் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • காலை 7 மணி அளவில் திருக்குடங்கள் திருக்கோவிலில் வளம் வந்தது.
    • 2 ந்தேதி காலை 8 மணி அளவில் விமான கலசம் நிறுவுதல் நிகழ்ச்சி நடந்தது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பழங்கரை ஊராட்சி நல்லி கவுண்டம்பாளையத்தில் கன்னிமார் சுவாமிகள் கருப்பராயன் திருக்கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் கடந்த ஆறு மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. இதையடுத்து நேற்று இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    முன்னதாக கடந்த 1 ந்தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வேள்வி ஆகியவை நடந்தன. அன்று காலை 10 மணியளவில் பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவிலில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துச் சென்று சுவாமி வழிபாடு செய்தனர். 2 ந்தேதி காலை 8 மணி அளவில் விமான கலசம் நிறுவுதல் நிகழ்ச்சி நடந்தது.

    மாலை 3 மணி முதல் 4 மணி வரை நிலத்தேர் வழிபாடு, என் திசை காவலர் வழிபாடு, காப்பு அணிதல், ஆகியவை நடந்தன. மாலை 6 மணிக்கு முதல் கால வேள்வி, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், அருளாளர் அமுதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. 3-ந் தேதி காலை 5 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 6 .45 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு திருமுறை விண்ணப்பம் நடந்தன.

    காலை 7 மணி அளவில் திருக்குடங்கள் திருக்கோவிலில் வளம் வந்தது. இதை அடுத்து 8 மணியளவில் வினாயகர் விமானம் மற்றும் மூல மூர்த்திகளாகிய, கருப்பண்ணசாமி, கன்னிமார் சாமிகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் அவினாசி, நல்லி கவுண்டம்பாளையம், பழங்கரை,திருப்பூர், மேட்டுப்பாளையம், சந்தியங்கலம், மைசூரு, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பணிகள் நிறைவற்ற நிலையில் நாளை 3.9.2023 ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
    • காலை 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் சித்திவிநாயகர், சக்தி வாராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள சின்ன வீரம்பட்டியில் வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. சப்த கன்னிகளில் ஒருவராக உள்ள வாராஹி அம்மனுக்கு கோவில் அமைத்து வழிபடுவதென சின்னவீரம்பட்டி ஊர்ப்பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து கோவில் கட்டுமான பணி தொடங்கி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.பணிகள் நிறைவற்ற நிலையில் நாளை 3.9.2023 ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.விழாவின் முதல் நிகழ்வாக நேற்று மங்கல இசை,கணபதி,லட்சுமி,நவகிரக ஹோமம் பூர்ணாஹுதி நடைபெற்றது. 2 ம் நாள் நிகழ்வாக இன்று மாலை 4.30 மணியளவில் பஞ்சகவ்யம், வாஸ்துசாந்தி,கோபுரகலசம் வைத்தல், மூலவருக்கு யந்திர ஸ்தாபனம்,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட முதல் கால பூஜையும் நடைபெற உள்ளது.

    அதைத் தொடர்ந்து நாளை காலை 5 மணியளவில் 2-ம் கால பூஜையும் இதையடுத்து யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.பின்னர் காலை 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் சித்திவிநாயகர், சக்தி வாராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்துக்கு தேவையான பால்,தயிர், இளநீர்,நெய்,நல்லெண்ணெய் ஹோமதிரவியம் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • திருமங்கலம் அருகே கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைக்குளம் கிராமத்தில் அயன் அனஞ்ச பெருமாள் கல்யாண கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. 116 இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாகசாலை பூஜையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாரதனை செய்யப்பட்டது. கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹெலிகாப்டரில் இருந்து 500 கிலோ பூக்கள் தூவப்பட்டது. பின்னர் அன்னதானம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.

    ×