search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜலகண்டாபுரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழா

    • ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு ெதாடங்கியது.
    • கணபதி வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு சாமிக்கு கண் திறப்பு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சின்னாகவுண்டம் பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சின்ன மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு ெதாடங்கியது. கணபதி வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு சாமிக்கு கண் திறப்பு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு மேல் 7.30. மணிக்குள் ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சாமி சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் வைத்து பூஜை செய்து பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கலசங்களுக்கு ஊற்றி தீபாராதனை செய்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×