search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டியானை மீது புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது.
    • கோவில் கும்பாபி ஷேக விழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி கோவில் வளாகத்தில் யாகசாலைக்கு முகூர்த்த கால் நடப்பட்டது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வழிபட்டு செல்கிறார்கள்.

    கும்பாபிேஷக விழா

    இந்த கோவில் கும்பாபி ஷேக விழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி கோவில் வளாகத்தில் யாகசாலைக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. நாளை (25-ந் தேதி) முதல் யாகசாலை பூஜை தொடங்குகிறது. தற்போது இறுதி கட்ட யாக சாலை பூைஜ பணிகள் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது-

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 60 அடி நீளம், 60 அடி அகலத்தில் பஞ்சாசன வேதிகை அமைத்து நவ குண்டத்துடன் அரண்மனை யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் கோட்டை மாரியம்மனுக்கு 9 யாக குண்டம், விநாயகருக்கு 5 யாககுண்டம் , வெள்ளையம்மன், பொம்மியம்மாள், மதுரை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு ஓட்டு மொத்தமாக 1 யாக குண்டம், துர்க்கை அம்மன், வைஷ்ணவி, மகேஸ்வரி உள்பட பரிவார மூர்த்திகளுக்கு ஒட்டு மொத்தமாக 1 யாக குண்டம், கோபுரத்திற்கு 5 யாக குண்டம், தங்கத்தேருக்கு தலா 1 யாக குண்டம் என மொத்தம் 23 யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது.

    ராஜகோபுரத்திற்கு 7 கலசம், மூலஸ்தான விமானம் 5 , விநாயகர் சன்னதி விமானம் 3, மதுரை வீரன் சன்னதி விமானம் 1 என ெமாத்தம் 16 கலசங்கள் வைக்கப்பட உள்ளது.யாகசாலை பூைஜக்கு சேலம், கோவை, தஞ்சை, கடலூர் உள்பட மாவட்டங்களில் இருந்து சிவாச்சாரியார்கள், தமிழ் ஓதுவார்கள் என மொத்தம் 45 பேர் பங்கேற்கிறார்கள். யாகத்திற்காக 108 வகையான மூலிகைகள், நெய் பழங்கள் பயன்படுத்தப்படும், கும்பாபிஷேகத்திற்கு பின் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.

    விநாயகர் வழிபாடு

    இன்று கணபதி வழிபாடு தொடங்கியது. தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்களும் புனித நீர் கலசம், முளைப்பாலிகையை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி, திசா ஹோமம், காப்பு கட்டுதல் நடக்கிறது.

    முதற்கால யாக பூஜை

    நாளை (25-ந் தேதி) காலை 8 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6 மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை நடக்கிறது.

    26-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜை, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா

    27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×