search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karuppasamy Temple"

    • 2 நாட்கள் யாக பூஜையை தொடர்ந்து இன்று காலை கோவில் கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பட்டாளம்மன், கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2 நாட்கள் யாக பூஜையை தொடர்ந்து இன்று காலை கோவில் கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா, கடமலை-மயிலை ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா சுரேஷ், மாடசாமி, ராஜபட்டர் எஜமான் பாண்டி முனீஸ்வர், கடமலைக்குண்டு ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி வேல்முருகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கபாண்டியன், கடமலைக்குண்டு கிராம கமிட்டி தலைவர் கணேசன் உள்பட கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அருகே கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைக்குளம் கிராமத்தில் அயன் அனஞ்ச பெருமாள் கல்யாண கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. 116 இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாகசாலை பூஜையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாரதனை செய்யப்பட்டது. கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹெலிகாப்டரில் இருந்து 500 கிலோ பூக்கள் தூவப்பட்டது. பின்னர் அன்னதானம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.

    • திருவிளக்கு பூஜையை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பாரதி மதன் தொடங்கி வைத்தார்.
    • அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சண்முக புரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    கொடை விழாவை யொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடை பெற்றது. வியாழக்கிழமை அன்று இரவு மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பாரதி மதன் தொடங்கி வைத்தார். மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகிய வற்றிற்காக பஜனையுடன் திரு விளக்கு பூஜை நடை பெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளிக்கிழமை அன்று காலை தீர்க்கரை சென்று வந்து சிவனனைந்த பெருமாளுக்கு மதிய கொடை சிறப்பு பூஜை நடைபெற்று அன்ன தானத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். இரவு சாமக்கொடை கொடை விழா நடைபெறுகிறது.

    கோவில் கொடை விழாவை யொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள் மாதர் சங்கத்தினர் கோவில் கைங்கர்ய பக்தர்கள் சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×