search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhishekam Ceremony"

    • மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் கோவில் பதினெட்டாம்படி ராஜகோபுர மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பதினெட்டாம்படி ராஜகோபுரத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் கோவி லில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 வேத விற்பன்னர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜை கள் நடத்தினர்.

    இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபி ஷேக விழா இன்று காலை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபி ஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு கள்ளழகர் கோவில் பதி னெட்டாம்படி 7 நிலை கொண்ட ராஜகோபுரம், முழுக்க முழுக்க வண்ண விளக்குகளால், அலங்க ரிக்கப்பட்டிருந்தது.

    பக்தர்கள் பாதுகாப்புடன் நின்று கும்பாபிஷேக விழாவை காண, தனித்தனியாக, இரும்பு கம்பிகளான தடுப்புகள் மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவில் முன்பு மிகப் பழமையான திருப்பவுத்திர புஷ்கரணி தெப்பக்குளத்திற்கு அழகர் மலையில் இருந்து வழிந்து நூபுர கங்கை தீர்த்த தண் ணீர், மற்றும் தற்போது பெய்யும்மழை நீர் சேர்ந்து தெப்பக்குளம் நிரம்பி வழி யும் நிலையில் உள்ளது. இந்த கும்பாபிஷேக நேரத் தில் இந்த தெப்பக்குளம் நிரம்பி உள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நூபுர கங்கை புனித தீர்த்தக் குடங்களிலுருந்து, கும்ப கலசங்களில் குடம் குடமாக ஊற்றி பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க வானத் தில் கருடன் வட்டமிட கும்பாபிஷேக விழா நடை பெற்றது. அப்போது ஹெலிகாப்ட ரில் இருந்து பூ மழை தூவியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

    விழா ஏற்பாடு களை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் அறங்காவலர் குழுவினர், திருக்கோவில் கண்கா ணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில், தியான மண்டபத்துடன் கூடிய சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.
    • ஆகம விதிப்படி துவாரகமாயி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவாரகமாயி சிலை கும்பா பிஷேக விழா நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில், தியான மண்டபத்துடன் கூடிய சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஆகம விதிப்படி துவாரகமாயி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவாரகமாயி சிலை கும்பா பிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை யொட்டி கணபதி ஹோமம், யாக கால சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் சீரடி சாய்பாபா, துவாரகமாயி சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பல்வேறு பகுதியை சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், பொது மக்கள் ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப் பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சாய்பாபா கோயில் அறக்கட்டளை நிர்வா கிகள் ஜவஹர், மாதேஸ்வரி, அரசவர்மன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • திருமங்கலம் அருகே கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைக்குளம் கிராமத்தில் அயன் அனஞ்ச பெருமாள் கல்யாண கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. 116 இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாகசாலை பூஜையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாரதனை செய்யப்பட்டது. கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹெலிகாப்டரில் இருந்து 500 கிலோ பூக்கள் தூவப்பட்டது. பின்னர் அன்னதானம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.

    • இக்கோவில் புனரமைக்கப்பட்டு நாளை 26-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • புனித நீர் வழிபாடுடன் துவங்கி மூத்த பிள்ளையாருக்கு முதற்கால வேள்வியுடன் யாக பூஜைகள் துவங்கியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் இக்கோவில் புனரமைக்கப்பட்டு நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை 8 மணி அளவில் காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கேரள செண்டை மேளம், நாதஸ்வர மேளதாளத்துடன் ஊர்வலம் முக்கிய ரோடுகளின் வழியாக கூப்பிடு பிள்ளையார் கோவிலை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடுடன் துவங்கி இரவு 7:45 மணி அளவில் மூத்த பிள்ளையாருக்கு முதற்கால வேள்வியுடன் யாக பூஜைகள் துவங்கியது. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கூப்பிடு பிள்ளையார் காவடிக் குழுவினரின் காவடியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

    • சாத்தான்குளம் அழகம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா 5 நாட்கள் நடந்தது.
    • அழகம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அழகு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அழகம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா 5 நாட்கள் நடந்தது. முதல் நாள் கோ பூஜைகளும் பிர ம்மச்சாரி பூஜைகளும், இரவு கிராம சாந்தி தீபாராதனை நிகழ்ச்சியும், 2-ம் நாள் அன்று காலையில் தீபாராதனைகளும், இரவு ஏழு மணிக்கு கும்ப அலங்காரம் , மங்கல இசை தேவாரம், விஷேச சாந்தி சூரிய பூஜைகளும் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதிகாலை 3 மணிக்கு ரட்சாபந்தனன் பரிசோதி நாடி நந்தனம், பரிவார மூர்த்தி பூர்ண கோரி யாத்திர தனமும் மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார விமானம மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். இதைப்போல் அழகம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அழகு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    இரவில் அம்மாள் அலங்கார தோற்றத்தோடு சப்பரப்பவனி நடந்தது. மெயின் ரோடு வழியாக செண்டா மேளத்தோடு காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் ஆலயம் சேர்ந்து பின் அழகம்மன் கோவில் தெரு வழியாக ஆலயம் வந்து சேர்ந்தது. இதனை யொட்டி இரவில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் சண்டிகேஸ்வரி பைரவ பூஜைகளும் தீபாராதனைகளும் மங்கல ஆரத்தியும் நடைபெற்றன.

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.

    • கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபி ஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு கள் செய்தனர்.
    • புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    பவானி:

    பவானி அருகே உள்ள சேர்வராயன் பாளையம் கிராமத்தில் விநாயகர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவி லில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபி ஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு கள் செய்தனர்.

    இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரம் மற்றும் கோவில் சிற்பங்கள் அனைத்தும் வர்ணங்கள் தீட்டி புது பொலிவு பெற்றது.

    இதன் பின்னர் கோவில் வளாகத்தின் முன்பாக யாகசாலை பூஜை பந்தல் அமைத்து அதில் மணிகண்ட சிவாச்சாரியார் தலைமை யிலான சிவாச்சாரியார் குழுவினர் மூலம் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து விநாயகர், மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

    விழாவில் பவானி எம்.எல்.ஏ. கே.சி.கருப்பணன், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், தொட்டி பாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கேபிள் சேகர், விழா குழுவினர் மற்றும் பவானி, காடையம்பட்டி, புது காடையம்பட்டி

    சேர்வராயன் பாளையம், தொட்டிபாளையம், பெரிய மோளபாளையம், சின்னமோளபாளையம், ஜம்பை, தளவாய் பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×