என் மலர்

    நீங்கள் தேடியது "Kumbabhishekam Ceremony"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இக்கோவில் புனரமைக்கப்பட்டு நாளை 26-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • புனித நீர் வழிபாடுடன் துவங்கி மூத்த பிள்ளையாருக்கு முதற்கால வேள்வியுடன் யாக பூஜைகள் துவங்கியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் இக்கோவில் புனரமைக்கப்பட்டு நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை 8 மணி அளவில் காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கேரள செண்டை மேளம், நாதஸ்வர மேளதாளத்துடன் ஊர்வலம் முக்கிய ரோடுகளின் வழியாக கூப்பிடு பிள்ளையார் கோவிலை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடுடன் துவங்கி இரவு 7:45 மணி அளவில் மூத்த பிள்ளையாருக்கு முதற்கால வேள்வியுடன் யாக பூஜைகள் துவங்கியது. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கூப்பிடு பிள்ளையார் காவடிக் குழுவினரின் காவடியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாத்தான்குளம் அழகம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா 5 நாட்கள் நடந்தது.
    • அழகம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அழகு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அழகம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா 5 நாட்கள் நடந்தது. முதல் நாள் கோ பூஜைகளும் பிர ம்மச்சாரி பூஜைகளும், இரவு கிராம சாந்தி தீபாராதனை நிகழ்ச்சியும், 2-ம் நாள் அன்று காலையில் தீபாராதனைகளும், இரவு ஏழு மணிக்கு கும்ப அலங்காரம் , மங்கல இசை தேவாரம், விஷேச சாந்தி சூரிய பூஜைகளும் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதிகாலை 3 மணிக்கு ரட்சாபந்தனன் பரிசோதி நாடி நந்தனம், பரிவார மூர்த்தி பூர்ண கோரி யாத்திர தனமும் மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார விமானம மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். இதைப்போல் அழகம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அழகு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    இரவில் அம்மாள் அலங்கார தோற்றத்தோடு சப்பரப்பவனி நடந்தது. மெயின் ரோடு வழியாக செண்டா மேளத்தோடு காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் ஆலயம் சேர்ந்து பின் அழகம்மன் கோவில் தெரு வழியாக ஆலயம் வந்து சேர்ந்தது. இதனை யொட்டி இரவில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் சண்டிகேஸ்வரி பைரவ பூஜைகளும் தீபாராதனைகளும் மங்கல ஆரத்தியும் நடைபெற்றன.

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபி ஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு கள் செய்தனர்.
    • புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    பவானி:

    பவானி அருகே உள்ள சேர்வராயன் பாளையம் கிராமத்தில் விநாயகர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவி லில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபி ஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு கள் செய்தனர்.

    இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரம் மற்றும் கோவில் சிற்பங்கள் அனைத்தும் வர்ணங்கள் தீட்டி புது பொலிவு பெற்றது.

    இதன் பின்னர் கோவில் வளாகத்தின் முன்பாக யாகசாலை பூஜை பந்தல் அமைத்து அதில் மணிகண்ட சிவாச்சாரியார் தலைமை யிலான சிவாச்சாரியார் குழுவினர் மூலம் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து விநாயகர், மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

    விழாவில் பவானி எம்.எல்.ஏ. கே.சி.கருப்பணன், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், தொட்டி பாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கேபிள் சேகர், விழா குழுவினர் மற்றும் பவானி, காடையம்பட்டி, புது காடையம்பட்டி

    சேர்வராயன் பாளையம், தொட்டிபாளையம், பெரிய மோளபாளையம், சின்னமோளபாளையம், ஜம்பை, தளவாய் பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×