search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alaghar Temple"

    • மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் கோவில் பதினெட்டாம்படி ராஜகோபுர மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பதினெட்டாம்படி ராஜகோபுரத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் கோவி லில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 வேத விற்பன்னர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜை கள் நடத்தினர்.

    இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபி ஷேக விழா இன்று காலை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபி ஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு கள்ளழகர் கோவில் பதி னெட்டாம்படி 7 நிலை கொண்ட ராஜகோபுரம், முழுக்க முழுக்க வண்ண விளக்குகளால், அலங்க ரிக்கப்பட்டிருந்தது.

    பக்தர்கள் பாதுகாப்புடன் நின்று கும்பாபிஷேக விழாவை காண, தனித்தனியாக, இரும்பு கம்பிகளான தடுப்புகள் மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவில் முன்பு மிகப் பழமையான திருப்பவுத்திர புஷ்கரணி தெப்பக்குளத்திற்கு அழகர் மலையில் இருந்து வழிந்து நூபுர கங்கை தீர்த்த தண் ணீர், மற்றும் தற்போது பெய்யும்மழை நீர் சேர்ந்து தெப்பக்குளம் நிரம்பி வழி யும் நிலையில் உள்ளது. இந்த கும்பாபிஷேக நேரத் தில் இந்த தெப்பக்குளம் நிரம்பி உள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நூபுர கங்கை புனித தீர்த்தக் குடங்களிலுருந்து, கும்ப கலசங்களில் குடம் குடமாக ஊற்றி பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க வானத் தில் கருடன் வட்டமிட கும்பாபிஷேக விழா நடை பெற்றது. அப்போது ஹெலிகாப்ட ரில் இருந்து பூ மழை தூவியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

    விழா ஏற்பாடு களை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் அறங்காவலர் குழுவினர், திருக்கோவில் கண்கா ணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா நடந்தது.
    • வருகிற 24-ந்தேதி கொடியேற்றமும், 2-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை மற்றும் தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப் படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவில், கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திரு–விழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பெருந்தி–ருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆடி திருவிழா வருகின்ற 24-ந்தேதி திங்கட் கிழமை காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.

    25-ந்தேதி காலையில் தங்க பல்லக்கு உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 26-ந்தேதி காலையில் சுவாமி புறப்பாடு, இரவு அனுமார் வாகனத்திலும், 27-ந்தேதி இரவு கருட வாகனத்திலும், 28-ந்தேதி காலை பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்த–ருளுவார்.

    அன்று இரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலும் 29-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந்தேதி இரவு புஷ்ப சக்கரமும் நடைபெறும். 31-ந்தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெ–றும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடை–பெறுகிறது. இதில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி எழுந்தருளல், 8 மணிக்கு மேல் 8.35 மணிக் குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். அன்று இரவு புஷ்ப பல்லாக்கு, 2-ந்தேதி காலையில் தீர்த்த–வாரி, இரவில் சப்தா வர்ணம் புஷ்ப விமானம், 3-ந்தேதி உற்சவ சாந்தி நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து 16-ந்தேதி ஆடி அமைவாசையை யொட்டி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெ–றும். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகி–றது. ஆடிப்ெபருந்திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாஜலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்கா–ணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர் கள் செய்து வருகின்றனர்.

    ×