கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா நடந்தது.வருகிற 24-ந்தேதி கொடியேற்றமும், 2-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.
கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா
Published on

அலங்காநல்லூர்

திருமாலிருஞ்சோலை மற்றும் தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப் படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவில், கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திரு–விழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பெருந்தி–ருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆடி திருவிழா வருகின்ற 24-ந்தேதி திங்கட் கிழமை காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.

25-ந்தேதி காலையில் தங்க பல்லக்கு உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 26-ந்தேதி காலையில் சுவாமி புறப்பாடு, இரவு அனுமார் வாகனத்திலும், 27-ந்தேதி இரவு கருட வாகனத்திலும், 28-ந்தேதி காலை பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்த–ருளுவார்.

அன்று இரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலும் 29-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந்தேதி இரவு புஷ்ப சக்கரமும் நடைபெறும். 31-ந்தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெ–றும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடை–பெறுகிறது. இதில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி எழுந்தருளல், 8 மணிக்கு மேல் 8.35 மணிக் குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். அன்று இரவு புஷ்ப பல்லாக்கு, 2-ந்தேதி காலையில் தீர்த்த–வாரி, இரவில் சப்தா வர்ணம் புஷ்ப விமானம், 3-ந்தேதி உற்சவ சாந்தி நடக்கிறது.

அதைத் தொடர்ந்து 16-ந்தேதி ஆடி அமைவாசையை யொட்டி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெ–றும். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகி–றது. ஆடிப்ெபருந்திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாஜலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்கா–ணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர் கள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com