search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி சண்முகபுரம் கருப்பசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
    X

    திருவிளக்கு பூஜை நடைபெற்றபோது எடுத் படம்.

    தூத்துக்குடி சண்முகபுரம் கருப்பசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை

    • திருவிளக்கு பூஜையை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பாரதி மதன் தொடங்கி வைத்தார்.
    • அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சண்முக புரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    கொடை விழாவை யொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடை பெற்றது. வியாழக்கிழமை அன்று இரவு மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பாரதி மதன் தொடங்கி வைத்தார். மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகிய வற்றிற்காக பஜனையுடன் திரு விளக்கு பூஜை நடை பெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளிக்கிழமை அன்று காலை தீர்க்கரை சென்று வந்து சிவனனைந்த பெருமாளுக்கு மதிய கொடை சிறப்பு பூஜை நடைபெற்று அன்ன தானத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். இரவு சாமக்கொடை கொடை விழா நடைபெறுகிறது.

    கோவில் கொடை விழாவை யொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள் மாதர் சங்கத்தினர் கோவில் கைங்கர்ய பக்தர்கள் சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×