search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே சின்னவீரம்பட்டியில் வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    பூஜையில் பங்கேற்றவர்கள்.

    உடுமலை அருகே சின்னவீரம்பட்டியில் வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    • பணிகள் நிறைவற்ற நிலையில் நாளை 3.9.2023 ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
    • காலை 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் சித்திவிநாயகர், சக்தி வாராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள சின்ன வீரம்பட்டியில் வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. சப்த கன்னிகளில் ஒருவராக உள்ள வாராஹி அம்மனுக்கு கோவில் அமைத்து வழிபடுவதென சின்னவீரம்பட்டி ஊர்ப்பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து கோவில் கட்டுமான பணி தொடங்கி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.பணிகள் நிறைவற்ற நிலையில் நாளை 3.9.2023 ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.விழாவின் முதல் நிகழ்வாக நேற்று மங்கல இசை,கணபதி,லட்சுமி,நவகிரக ஹோமம் பூர்ணாஹுதி நடைபெற்றது. 2 ம் நாள் நிகழ்வாக இன்று மாலை 4.30 மணியளவில் பஞ்சகவ்யம், வாஸ்துசாந்தி,கோபுரகலசம் வைத்தல், மூலவருக்கு யந்திர ஸ்தாபனம்,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட முதல் கால பூஜையும் நடைபெற உள்ளது.

    அதைத் தொடர்ந்து நாளை காலை 5 மணியளவில் 2-ம் கால பூஜையும் இதையடுத்து யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.பின்னர் காலை 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் சித்திவிநாயகர், சக்தி வாராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்துக்கு தேவையான பால்,தயிர், இளநீர்,நெய்,நல்லெண்ணெய் ஹோமதிரவியம் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×