search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பசாமி கோவில்"

    • கருப்பசாமி கோவில் பீடம் ஆக்கிர மிப்பில் இருந்தது தெரிய வந்தது.
    • அந்த கோவில் பீடத்தை போலீசார் பாது காப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சா லைத்துறையினர் அகற்றினர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் - போடி இடையே மாநில நெடுஞ்சாலை கோம்பை வழியாக செல்கிறது. இங்கு சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறைக்கு ஆக்கிரமிப்பின் உண்மை த்தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி நெடுஞ்சாலைத்துறையினர் உரிய அறிவிப்பு ஆணை வழங்கினார்.

    இதனையடுத்து அப்பகுதி யில் உள்ள கருப்பசாமி கோவில் பீடம் ஆக்கிர மிப்பில் இருந்தது தெரிய வந்தது. அந்த கோவில் பீடத்தை போலீசார் பாது காப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சா லைத்துறையினர் அகற்றி னர். மேலும் கோம்பை போலீஸ் நிலையம் அருகே உள்ள பாலம் முதல் கால்ந டை ஆஸ்பத்திரி வரை நெடுஞ்சாலையோரத்தில் இருந்து 2 வீடுகள் உள்பட நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.

    ஆண்டு தோறும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்பு களை தொடர்ந்து அகற்றி வருகின்றனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படு கிறது. எனவே அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 நாட்கள் யாக பூஜையை தொடர்ந்து இன்று காலை கோவில் கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பட்டாளம்மன், கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2 நாட்கள் யாக பூஜையை தொடர்ந்து இன்று காலை கோவில் கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா, கடமலை-மயிலை ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா சுரேஷ், மாடசாமி, ராஜபட்டர் எஜமான் பாண்டி முனீஸ்வர், கடமலைக்குண்டு ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி வேல்முருகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கபாண்டியன், கடமலைக்குண்டு கிராம கமிட்டி தலைவர் கணேசன் உள்பட கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அருகே கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைக்குளம் கிராமத்தில் அயன் அனஞ்ச பெருமாள் கல்யாண கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. 116 இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாகசாலை பூஜையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாரதனை செய்யப்பட்டது. கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹெலிகாப்டரில் இருந்து 500 கிலோ பூக்கள் தூவப்பட்டது. பின்னர் அன்னதானம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.

    ×