search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோம்பையில் கோர்ட்டு உத்தரவின்பேரில் கருப்பசாமி கோவில் பீடம் அகற்றம்
    X

    கோவில் மேற்கூரையை அகற்றிச் சென்ற ஊழியர்கள்.

    கோம்பையில் கோர்ட்டு உத்தரவின்பேரில் கருப்பசாமி கோவில் பீடம் அகற்றம்

    • கருப்பசாமி கோவில் பீடம் ஆக்கிர மிப்பில் இருந்தது தெரிய வந்தது.
    • அந்த கோவில் பீடத்தை போலீசார் பாது காப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சா லைத்துறையினர் அகற்றினர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் - போடி இடையே மாநில நெடுஞ்சாலை கோம்பை வழியாக செல்கிறது. இங்கு சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறைக்கு ஆக்கிரமிப்பின் உண்மை த்தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி நெடுஞ்சாலைத்துறையினர் உரிய அறிவிப்பு ஆணை வழங்கினார்.

    இதனையடுத்து அப்பகுதி யில் உள்ள கருப்பசாமி கோவில் பீடம் ஆக்கிர மிப்பில் இருந்தது தெரிய வந்தது. அந்த கோவில் பீடத்தை போலீசார் பாது காப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சா லைத்துறையினர் அகற்றி னர். மேலும் கோம்பை போலீஸ் நிலையம் அருகே உள்ள பாலம் முதல் கால்ந டை ஆஸ்பத்திரி வரை நெடுஞ்சாலையோரத்தில் இருந்து 2 வீடுகள் உள்பட நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.

    ஆண்டு தோறும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்பு களை தொடர்ந்து அகற்றி வருகின்றனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படு கிறது. எனவே அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×