search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா:நவம்பர் 1-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா:நவம்பர் 1-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

    • ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி நவம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி நவம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நவம்பர் மாதம் 1-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் மட்டும் நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×