search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பைகள்"

    • கலெக்டர் அதிரடி உத்தரவு
    • நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளிகள், கால்நடை மருத்துவமனை, சிறிய வணிக வளாகங்கள், துணி கடைகள், உள்ளிட்டவைகள் உள்ளன.

    சுற்று வட்டார மக்கள் மட்டுமின்றி, மலைவாழ் மக்களும் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அணைக்கட்டுக்கு தான் அதிகம் வருகின்றனர். சிறிய வர்த்தக நகரமாக திகழும் இந்த அணை க்கட்டில் மக்கள் அதிகம் கூடுவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    அணைக்கட்டு பஜாரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் உள்ளன. கடைகள், வீடுகள் மற்றும் தெருக்களில் உள்ள குப்பைகளை தூய்மை பணியாளர்கள் வாகனங்கள் மூலம் சேகரிக்கின்றனர்.

    தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பை களை அணைக்கட்டு- வேலூர் சாலையில் உள்ள கெங்கநல்லூர் சந்தைமேடு அருகே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டு ஏற்படுகிறது. மலைபோல் குவிக்கப்படும் குப்பைகள் சில சமயங்களில் பகல் நேரங்களிலேயே தீயிட்டு கொளுத்து கின்றனர்.

    அந்த சமயத்தில் கரும்புகை மண்டலம் உருவாகி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் கண்களில் எரிச்சலை உருவாக்குகிறது.

    இது தொடர்பான செய்தி மாலைமலரில் புகைப்படத்துடன் வெளியானது.

    இதனைத் தொடர்ந்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அணைக்கட்டு சாலை யோரத்தில் குப்பகைளை தீ வைத்து எரிப்பதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது எரிந்து கொண்டிருந்த குப்பை களை தண்ணீர் ஊற்றி அணைத்து கொட்ட ப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இனிமேல் இங்கு குப்பைகள் கொட்ட கூடாது. சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை அகற்றாமல் வைத்திருந்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அணைக்கட்டு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அணைக்கட்டு அல்லது கெங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் திடக்கழிவு மேலாண்மை அமைக்க இடம் வழங்க வேண்டும்.

    மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை உரமாக மாற்றி உடனடியாக அப்புற ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து அணைக்கட்டு தாலுகா ஆஸ்பத்திரி மற்றும் ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, வின்சென்ட்ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மாணவா்களுக்கு நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
    • குப்பைகள் கொட்டுவதையும், அவற்றுக்கு தீ வைப்பதையும் நகராட்சி நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட அகிலாண்டபுரம் பகுதியில் தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியிலுள்ள சிலா் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு அருகில் குப்பைகள் கொட்டுவது, அவற்றுக்கு தீ வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

    பள்ளிக்கு அருகில் கொட்டப்பட்டு தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மாணவா்களுக்கு நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, தீ வைக்கப்படும் குப்பைகளில் இருந்து எழும் புகை மாணவா்களை பாதிக்கிறது.

    எனவே, பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு அருகே குப்பைகள் கொட்டுவதையும், அவற்றுக்கு தீ வைப்பதையும் நகராட்சி நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். 

    • குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
    • இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    தென் இந்தியாவின் மான்செஸ்டர், தொழில்களின் நகரம் என பல்வேறு பெயர்களுடன் தாங்கி நிற்கிறது கோவை மாவட்டம்.

    இந்த நகர் கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த பலருக்கும் வேலை வாய்ப்ைப கொடுக்கும் நகரமாகவும் இருந்து வருகிறது. தற்போது கோவை மாநகரின் பல பகுதிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொலிவுபடுத்தப்பட்டு, அந்த பகுதிகள் எல்லாம் அழகுற காட்சியளிக்கிறது.கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தினமும் குப்பைகள் அள்ளப்பட்டு அந்த பகுதி சுத்தமாக காட்சி அளிக்கிறது. ஆனால் ஒரு சில பகுதிகளில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் குவியல், குவியலாக கிடக்கிறது.

    கோவை மாநகரில் ஒரு நாளைக்கு சராசரியாக 2,000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிகாலை தங்களது வேலையை தொடங்கும் அவர்கள் மாலை வரை பணியாற்றுகிறார்கள். குப்பைகளை சேகரித்து மாநகரை தூய்மையான கோவையாக வைத்து கொள்வதில் அவர்களுக்கு தான் பெரும் பங்கு உள்ளது.

    கோவை மாநகரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 35 ஆயிரம் டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் ஏராளமான பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதையும் நாம் பார்த்து தான் வருகிறோம்.

    இப்படி கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியை கடக்கும் மக்கள் மிகவும் சிரமத்துடனேயே சென்று வருகிறார்கள். மேலும், குப்பைகளால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள், வியாதிகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

    கோவை சாய்பாபா காலனியில் என்.டி.சி மில் குவாட்டர்ஸ் அருகே நீண்ட நாட்களாக குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பைகளில் கிடக்கும் பொருட்களை சாப்பிடுவதற்காக, ஆடு, மாடுகள் அங்கு சுற்றி திரிந்து வருகின்றன.

    அப்படி வரும், ஆடு மாடுகள் குப்பைகளை இழுத்து ெகாண்டு வந்து சாலையில் போட்டு விட்டு செல்கின்றன. இதனால் அந்த சாலைகளில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் அந்த சாலை வழியாக செல்வதே சிரமமாக உள்ளது.

    இந்த பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதி ஆகும். இங்குள்ள பொதுமக்கள் விடிந்தவுடன் நடைப்பயிற்சி செல்லும்போது குப்பையை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீண்ட நாட்கள் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அவ்வப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது குற்றம் சாட்டுகிறார்கள் அப்பகுதி பொதுமக்கள். சாலையின் நடு பகுதி வரை குப்பை பரந்து விரிந்து கிடப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழும் நிலையும் அங்கு அரங்கேறி வருகிறது.

    ராஜா அண்ணாமலை சாலை என்பது கோவை சாய்பாபா காலணியின் மிக முக்கியமான சாலை ஆகும். என்.எஸ். ஆர் ரோடு, அழகேசன் ரோடு, பாரதி பார்க் ரோடு, பாரதி பார்க் ரோட்டின் குறுக்கு சாலைகள் இவை அனைத்தையும் இணைக்க கூடிய முக்கியமான சாலையாகும். இந்த பகுதியிலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    இந்த குப்பைகள் தேங்கி கிடக்கும் இடத்திற்கு நேர் எதிரே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர். தினமும் காலையிலும், மாலையிலும் அப்பள்ளி மாணவ, மாணவிகளும், அவர்களை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்களும் இந்த குப்பையை தாண்டி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று எதுவும் ஏற்படும் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் தினமும் தவித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் கடந்து வரும் இந்த சாலை இப்படி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது போன்று மாநகரின் பல பகுதிகள் மற்றும் சாக்கடை கால்வாய்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்று காணப்படுகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தூய்மையான நகரம், சுத்தமான நகரம், ஸ்மார்ட் சிட்டி என்று மார்தட்டி கூறிவரும் சூழ்நிலையில் இத்தகைய குப்பைமேடுகள் மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. குடியிருப்புகளுக்கு நடுவே இவ்வாறு குப்பை தேங்குவது மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும். இந்த அவல நிலை மாற வேண்டும்.

    இதில் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை. நகரத்தை சுத்தமாக வைப்பது மட்டுமன்றி, வரப்போகும் நோயிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் பொதுமக்கள் தயார் நிலையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கோவை மாநகரப் பொருத்தவரை சுகாதாரப் பணியாளர்கள் தினமும் வீட்டு வாசலுக்கு வந்து குப்பைகளை சேகரித்து விட்டு செல்கின்றனர். ஆனால் ஒரு சிலர் அவர்கள் வரும் சமயத்தில் குப்பைகளை போடாமல் விட்டுவிடுகின்றனர். பின்னர் அந்த குப்பையை எங்கே போடுவது என்று தெரியாமல் தேவையில்லாத இடத்தில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர். ஒவ்வொருவரும் என் நகரத்தை நான் தூய்மையாக வைத்திருப்பேன் என்று உறுதிமொழி எடுத்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் அனாசியமான இடத்தில் குப்பைகள் தேங்குவதற்கு வாய்ப்பு கிடையாது. அவ்வாறு கோவை மாநகராட்சியும் நாமும் இணைந்து செயல்பட்டால் நகரும் தூய்மையாகும். நாமும் நோய் இல்லாத வாழ்க்கை வாழ முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குப்பை கொட்டப்படும் காலி இடம் முன்னர் நீர்நிலையாக இருந்ததாக கூறப்படுகிறது.
    • ஊாட்சி நிர்வாகம் குப்பைகளை கையாள்வதில் தணறி வருகிறது.

    வேளச்சேரி:

    சென்னைைய அடுத்த மேடவாக்கம் சோழிங்க நல்லூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டது.

    சென்னை புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மேடவாக்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இதனால் அப்பகுதியில் குடியிருப்புகள் அதிக அளவில் பெருகி மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. இதேபோல் வாகன நெரிசலும் பல மடங்கு உயர்ந்து விட்டன.

    இந்த நிலையில் மேடவாக்கம் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம்பிரிக்கப்படாமல் குவிந்து வருவதால் அதனை கையாள்வதில் ஊராட்சி நிர்வாகம் கடும் சிரமம் அடைந்து வருகிறது.

    தினந்தாறும் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் பள்ளிக்கரணை போலீஸ்நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி உள்ளது.

    குப்பை கொட்டப்படும் காலி இடம் முன்னர் நீர்நிலையாக இருந்ததாக கூறப்படுகிறது. கூகுள் மேப்பிலும் அப்படியே உள்ளது. ஆனால் தற்போது அந்த இடம் குப்பை மேடாக மாறி வருவது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, தினமும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மைதானத்தில் கொட்டப்படுகிறது. ஊராட்சியில் குறைந்த அளவிலான ஊழியர்கள் உள்ளதால் குப்பைகள் தரம்பிரிக்கப்படாமல் அப்படியே கொட்டுகின்றனர். இதனால் ஊாட்சி நிர்வாகம் குப்பைகளை கையாள்வதில் தணறி வருகிறது.

    திடக்கழிவு மேலாண்மை பின்பற்றப்படவில்லை. ஊராட்சி மூலம் நுண் உரம் தயாரிக்கும் வசதி செயல்படுத்தப்படவில்லை. தரம் பிரிக்கப்படாத குப்பைகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது என்று திடக்கழிவு மேலாண்மை விதி உள்ளது. ஆனால் இது மீறப்பட்டு குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டுவதால் நிலத்தடி நீர் மற்றும் அப்பகுதி பாதிக்கப்படுகிறது என்றார்.

    இதுகுறித்து ஊராட்சி தலைவி சிவபூஷணம் ரவி கூறும்போது, ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பள்ளிக்கரணை பகுதியில் கொட்டப்பட்டு பின்னர் ஆப்பூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு குப்பைகள் கொட்ட இடம் ஒதுக்கி உள்ளனர்.

    குப்பைகள் தினந்தோறும் லாரிகள்மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. மொத்தம் 36 தொழிலாளர்கள் உள்ளனர். டிராக்டர், லாரிகள் மூலம் குப்பைகள் தேங்கமால் அகற்றி வருகிறோம் என்றார்.

    இதற்கிடையே ஏற்கனவே தேசிய பசுமைதீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம், மற்றும் மேடவாக்கம் ஊராட்சிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் திடக்கழிவு மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக நிதியுதவி உள்ளிட்ட அனைத்து தேவையான அனுமதியைப் அரசிடம் இருந்து பெற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குப்பைகள் அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு, குப்பைகளின் கூடாரமாக மாறி வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோண்டூர் ஊராட்சி உள்ளது. இது பெரிய ஊராட்சி என்பதால் அதிக மக்கள் தொகையை கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் இருந்து குப்பைகள் அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் குப்பைகள் அதே பகுதியில் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு, குப்பைகளின் கூடாரமாக மாறி வருகின்றது. இங்கு வரும் கால்நடைகள் குப்பைகளை கிளறி தங்களுக்கு தேவையான உணவுகளை உட்கொண்டு வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. மேலும் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் மக்காமல் சிதறி கிடக்கின்றது.

    அவ்வழியே வாகனத்தில் செல்வோர் மீது காற்றில் பறந்து பிளாஸ்டிக் குப்பைகள் விழுகின்றது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இது மட்டும் இன்றி அவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களும் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் வகையில் துர்நாற்றம் வீசி வருவதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் ஊராட்சி நிர்வாகம், அப்பகுதி சுகாதாரத்தை பேணிக்காத்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வணிக வளாகம் இருக்கும் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு இருக்கிறது.
    • முத்தூர் பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், முத்தூர் பஸ் நிலையம் அருகில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் இருக்கும் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளின் நீர் மாசடைந்து கலர் மாறி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் கிணற்று நீரை கொண்டு குடிநீர் தேவையை பூர்த்திச் செய்து கொள்ளும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சில மாதங்களாக மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பின்னர் மாணவிகளுக்கு அங்கேயே விளைவிக்கப்பட்ட சுரைக்காயை வழங்கினார்.

    மானாமதுரை

    மானாமதுரை நகராட்சி சார்பில் தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள வளமீட்பு பூங்காவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகளுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. துப்புரவு ஆய்வாளர் பாண்டிசெல்வம் தலைமை தாங்கி. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள். அதை எவ்வாறு கையாள வேண்டும். குப்பைகளை எவ்வாறு தரம் பிரிக்க வேண்டும். குறிப்பாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து, எவ்வாறு வழங்கிட வேண்டும், குப்பைகள் மூலம் உரங்கள் தயாரித்து, இந்த வளம்மீட்பு பூங்காவில் வளர்க்கப்பட்ட காய், கனிகள், முலிகை செடிகள், பூக்கள் பற்றி விளக்கி பேசினார். பின்னர் மாணவிகளுக்கு அங்கேயே விளைவிக்கப்பட்ட சுரைக்காயை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்தி ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருச்சுழியில் சாலையில் தேங்கும் குப்பைகள், கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
    • சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகரில் பொதுமக்கள் வந்து போகும் முக்கிய இடங்களாக சார்பதி வாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ளது.

    திருச்சுழி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரிலுள்ள போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கு வதால் அதிலிருந்து துர்நாற் றம் வீசி நோய்த்தொற்று ஏற்படும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் வீசும் காற்று காரணமாக கொட்டப்படும் குப்பைகளா னது அங்கும் இங்குமாக சிதறி காணப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் குப்பை கள் மற்றும் கழிவுநீர் வாறு காலில் தேங்கி வருவதுடன் அங்கிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரால் மேற்படி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அதனை கண்டு முகம் சுளிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு கடும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இது போன்ற குப்பைத்தொட்டி இல்லாத திருச்சுழி நகரின் முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டிகளை அமைத்து குப்பைகள் தேங்காத வண்ணம் ஊராட்சி ஊழி யர்கள் மூலமாக நாள்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருச்சுழி ஊராட்சி நிர்வாகத்திற்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பல இடங்களுக்கு சென்று சேகரிக்கின்றனர்.
    • எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் கடைவீதி, ரயில் நிலைய த்திற்கு செல்லும் சாலை உள்ளது.

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் எதிர்ப்புறம் மற்றும் பயணியர் விடுதி, சார் பதிவாளர் அலுவலகம் நீர்வளத்துறை அலுவலகம் மற்றும் காவல் நிலையம், ரயில் நிலையம் எதிர்புறம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

    மேலும் கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் தினந்தோறும் குப்பைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.

    குவிந்து வரும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பல இடங்களுக்குச் சென்று சேகரிக்கின்றனர்.

    இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் ஆங்காங்கே சாலையோரம் கொட்டப்ப டும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது.

    இவ்வாறு சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படும் போது அதிக அளவில் புகை சாலை முழுவதும் பரவி வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

    எனவே ஊராட்சி நிர்வாகம் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பதை நிறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாய்க்காலில், பொதுமக்கள் கழிவுகளை கொட்டக்கூடாது.
    • குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு ஊராட்சியில் முதன்மை பாசன வாய்க்காலில் சில மதகுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளது.

    அந்த பிளாஸ்டிக் கழிவுகள் தூய்மை பணியாளர்கள் கொண்டு அகற்றும் பணி நடைபெற்றது.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன் கூறுகையில்:-

    பாசன வாய்க்கா ல்களிலும், நீர் நிலைகளிலும் பொதுமக்கள் கழிவுகளை கொட்டக்கூடாது.

    மழைக்காலம் தொடங்க உள்ளதால் பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    அவ்வாறு இல்லாமல் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    இந்நிகழ்வில் துணைத்த லைவர் பாக்யராஜ், செயலாளர் புவனேஸ்வரன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலையோரம் மலை போல் தேங்கி இருக்கும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் சிரமைப்படுகின்றனர்.
    • தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    திருமங்கலம்

    திருமங்கலம் விமான நிலைய சாலை செல்லும் பகுதியில் நகராட்சி எல்லைக்கு அடுத்தபடியாக வடகரை ஊராட்சி அமைந்துள்ளது. ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வீடுகள் கடைகள் இருந்து வெளி யேற்றப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது.

    குறிப்பாக உணவகங்களில் மீதமாகும் உணவு கழிவுகள் சிக்கன் கடைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கோழிக்கழிவு கள் மூட்டை, மூட்டையாக கட்டப்பட்டு கொட்டப்படு கிறது.

    குப்பைகளை நாய்கள் கிளறுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசப்படுகிறது. காற்று வீசும்போது பறக்கும் குப்பையால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே விமான நிலைய சாலை செல்லும் சாலையில் சாலையோரம் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பை மேடாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த குப்பைகளால் அந்தப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் கொட்டப் படும் கழிவுகளை உண்ப தற்காக வரும் நாய், பன்றி, மாடுகள் போன்றவை களுக்குள் ஏற்படும் சண்டையால் அவைகள் சாலைகளில் ஓடிவரு கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.

    மேலும் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அந்தப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

    எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதிக்கவும், குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பைகளை வாங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவில் வளாகத்தில் பக்தர்கள் விட்டு சென்ற குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
    • அங்கு கிடந்த குப்பைகளை தூய்மை கருவிகளை கொண்டு சுத்தம் செய்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் விட்டு சென்ற தண்ணீர் பாட்டில்கள், காகித தட்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

    இதனை கண்ட மூத்த குடிமக்கள் பேரவை உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சித்திரவேலு (வயது 61) என்பவர் அங்கு கிடந்த குப்பைகளை தூய்மை கருவிகளை கொண்டு சுத்தம் செய்தார்.

    தொடர்ந்து, அப்ப குதி பக்தர்களான ஆறுகா ட்டுத்துறை உமா, கோயிலடி சாரதம், சின்னச்சாலை சாரதம் சோமு, காமாட்சி, முருகன், சிவகாமி உள்பட பலருடன் சேர்ந்து குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்தனர்.

    பின்னர், இந்த தூய்மை பணி குறித்து அறிந்த நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, சுகாதார கண்காணிப்பாளர் ராஜா, முருகேசன் மற்றும் தூய்மை பணியாளர்கள் டிராக்டர், லாரியுடன் வந்து குவித்து வைத்துள்ள குப்பைகளை அகற்றினர்.

    கோவில் வளாகத்தை சுத்தம் செய்த ஆசிரியர் சித்திரவேலு மற்றும் குழுவினரை அப்பகுதி மக்களும், பக்தர்களும் வெகுவாய் பாராட்டினர்.

    ×