வாய்க்காலில் தேங்கிய கழிவுகளை அகற்றும் பணி

வாய்க்காலில், பொதுமக்கள் கழிவுகளை கொட்டக்கூடாது.குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
வாய்க்காலில் தேங்கிய கழிவுகளை அகற்றும் பணி நடந்தது.
வாய்க்காலில் தேங்கிய கழிவுகளை அகற்றும் பணி நடந்தது.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு ஊராட்சியில் முதன்மை பாசன வாய்க்காலில் சில மதகுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளது.

அந்த பிளாஸ்டிக் கழிவுகள் தூய்மை பணியாளர்கள் கொண்டு அகற்றும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன் கூறுகையில்:-

பாசன வாய்க்கா ல்களிலும், நீர் நிலைகளிலும் பொதுமக்கள் கழிவுகளை கொட்டக்கூடாது.

மழைக்காலம் தொடங்க உள்ளதால் பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வில் துணைத்த லைவர் பாக்யராஜ், செயலாளர் புவனேஸ்வரன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com