search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோப்புத்துறையில், கோவில் குப்பைகளை சுத்தம் செய்த ஆசிரியர்
    X

    தோப்புத்துறையில் கோவில் வளாகத்தில் குவிந்த குப்பைகளை சுத்தம் செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    தோப்புத்துறையில், கோவில் குப்பைகளை சுத்தம் செய்த ஆசிரியர்

    • கோவில் வளாகத்தில் பக்தர்கள் விட்டு சென்ற குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
    • அங்கு கிடந்த குப்பைகளை தூய்மை கருவிகளை கொண்டு சுத்தம் செய்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் விட்டு சென்ற தண்ணீர் பாட்டில்கள், காகித தட்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

    இதனை கண்ட மூத்த குடிமக்கள் பேரவை உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சித்திரவேலு (வயது 61) என்பவர் அங்கு கிடந்த குப்பைகளை தூய்மை கருவிகளை கொண்டு சுத்தம் செய்தார்.

    தொடர்ந்து, அப்ப குதி பக்தர்களான ஆறுகா ட்டுத்துறை உமா, கோயிலடி சாரதம், சின்னச்சாலை சாரதம் சோமு, காமாட்சி, முருகன், சிவகாமி உள்பட பலருடன் சேர்ந்து குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்தனர்.

    பின்னர், இந்த தூய்மை பணி குறித்து அறிந்த நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, சுகாதார கண்காணிப்பாளர் ராஜா, முருகேசன் மற்றும் தூய்மை பணியாளர்கள் டிராக்டர், லாரியுடன் வந்து குவித்து வைத்துள்ள குப்பைகளை அகற்றினர்.

    கோவில் வளாகத்தை சுத்தம் செய்த ஆசிரியர் சித்திரவேலு மற்றும் குழுவினரை அப்பகுதி மக்களும், பக்தர்களும் வெகுவாய் பாராட்டினர்.

    Next Story
    ×