search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுத்தம்"

    • வீடுகளில் இருந்த கட்டில், மெத்தை, சோபா, டிவி, வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதமானது.
    • பொதுமக்கள் ஆன்லைனில் துப்புரவு நிறுவனத்தை அணுகும் போது இந்த கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 3 லட்சம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 2 முதல் 4 நாட்கள் வரை பல வீடுகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வீடுகளில் இருந்த கட்டில், மெத்தை, சோபா, டிவி, வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதமானது.

    இந்நிலையில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்துள்ள நிலையில் வீடுகளை சுத்தம் செய்வது என்பது பொதுமக்களுக்கு சவாலான பணியாக மாறியுள்ளது. வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்ததால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி கழுவி வீடுகளை சுத்தம் செய்து வருகிறார்கள். ஆனார் பலர் தங்கள் வீடுகளை சுத்தம் செய்ய தனியார் துப்புரவு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர். ஏராளமானோர் துப்புரவு நிறுவனங்களை அணுகுவதால் அவர்கள் கெடுபிடி காட்டுகிறார்கள். அத்துடன் வீடுகளை கழுவி சுத்தம் செய்வதற்கான கட்டணத்தை 2 மடங்காக அதிகரித்துவிட்டனர்.

    சென்னையில் இதற்கு முன்பு ஒரு படுக்கை அறை கொண்ட வீடுகளை சுத்தம் செய்ய ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வசூலித்தனர். தற்போது அந்த கட்டணத்தை ரூ.7,500 ஆக அதிகரித்துவிட்டனர். 2 படுக்கை அறை, 3 படுக்கை அறை கொண்ட வீடுகளுக்கு இன்னும் அதிகமாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர். பொதுமக்கள் ஆன்லைனில் துப்புரவு நிறுவனத்தை அணுகும் போது இந்த கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

    வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் வட சென்னையில் உள்ள பல் பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள். குறிப்பாக மூத்த குடிமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வேறு வழியில்லாமல் அவர்கள் அதிக கட்டணம் கொடுத்து வீடுகளை சுத்தம் செய்து வருகிறார்கள்.

    வெள்ளத்தில் வீடுகளில் இருந்த பொருட்களை இழந்துள்ள நிலையில் இந்த கட்டணம் அவர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

    இதுகுறித்து தனியார் துப்புரவு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வீடுகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாக ஏராளமான வீடுகளில் இருந்து எங்களுக்கு அழைப்பு வருகிறது. ஆனால் ஆள் பற்றாக்குறை காரணமாக எங்களால் அனைத்து அழைப்புகளையும் ஏற்க முடியவில்லை.

    எனவே நாங்கள் தற்காலிக ஊழியர்களையும் பணிக்கு நியமித்துள்ளோம். ஒரு படுக்கை அறை கொண்ட வீடாக இருந்தால் ஒன்றரை மணி நேரத்தில் சுத்தம் செய்து விடுகிறோம். அதை விட பெரிய வீடுகளுக்கு கூடுதல் நேரம் ஆகிறது. தினமும் 16 மணி நேரம் வேலை செய்கிறோம். ஒரு நாளில் 4 முதல் 5 வீடுகளை சுத்தம் செய்கிறோம். எங்களிடம் வீடுகளை சுத்தம் செய்வதற்கான தனித்தனி பேக்கேஜ்கள் உள்ளன.

    தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் சாக்கடையாக மாறி விட்டதால் சுத்தம் செய்யும் பணிக்கு செல்லும் பல ஊழியர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் வளாகத்தில் பக்தர்கள் விட்டு சென்ற குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
    • அங்கு கிடந்த குப்பைகளை தூய்மை கருவிகளை கொண்டு சுத்தம் செய்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் விட்டு சென்ற தண்ணீர் பாட்டில்கள், காகித தட்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

    இதனை கண்ட மூத்த குடிமக்கள் பேரவை உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சித்திரவேலு (வயது 61) என்பவர் அங்கு கிடந்த குப்பைகளை தூய்மை கருவிகளை கொண்டு சுத்தம் செய்தார்.

    தொடர்ந்து, அப்ப குதி பக்தர்களான ஆறுகா ட்டுத்துறை உமா, கோயிலடி சாரதம், சின்னச்சாலை சாரதம் சோமு, காமாட்சி, முருகன், சிவகாமி உள்பட பலருடன் சேர்ந்து குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்தனர்.

    பின்னர், இந்த தூய்மை பணி குறித்து அறிந்த நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, சுகாதார கண்காணிப்பாளர் ராஜா, முருகேசன் மற்றும் தூய்மை பணியாளர்கள் டிராக்டர், லாரியுடன் வந்து குவித்து வைத்துள்ள குப்பைகளை அகற்றினர்.

    கோவில் வளாகத்தை சுத்தம் செய்த ஆசிரியர் சித்திரவேலு மற்றும் குழுவினரை அப்பகுதி மக்களும், பக்தர்களும் வெகுவாய் பாராட்டினர்.

    • சித்திரை திருவிழாவுக்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.
    • பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கவுள்ள நிலையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.

    மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.அதைத் தொடர்ந்து வீர அழகர் கோவிலில் சித்திரை திருவிழா ஆரம்பமாகிறது.

    இந்த திருவிழாக்களின் போது மானாமதுரை நகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்குள் பொழுது போக்கு அம்சங்களாக ராட்டினங்கள், திருவிழாக்கடைகள் அமைக்கப்படும். மானாமதுரை பகுதியை சேர்ந்த மக்கள் திருவிழாவை காண வைகை ஆற்றுக்குள் கூடுவார்கள்.

    திருவிழாவிற்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் நகர் பகுதி வைகை ஆறு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருவிழாவின் போது பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

    • குடிநீர் தொட்டியின் உள் சுவரில் பாசிகள் படர்ந்து அழுக்குகள் நிறைந்திருப்பதையும் நீண்ட நாட்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார்.
    • சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் உதயமார்தாண்டபுரம் ஊராட்சி நாச்சிகுளம் 5-வது வார்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மனிதநேய ஜனநாயக கட்சியின் ஊராட்சி மன்ற உறுப்பினர் நாச்சிகுளம் தாஜுதீன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த தொட்டியில் ஏறி தாஜுதீன் அதன் உள்ளே இறங்கி குடிநீர் தொட்டியின் சுத்தம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் தொட்டியின் உள் சுவரில் பாசிகள் படர்ந்து அழுக்குகள் நிறைந்திருப்பதையும் நீண்ட நாட்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார்.

    இதுகுறித்து நாச்சிகுளம் பகுதி உறுப்பினர்கள் அஜிரன், ராயல்காதர் ஆகியோருடன் ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்து தங்கள் வார்டுகளில் உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் பராமரிக்கப்படாமல் உள்ளது.

    குடிநீர் வினியோக பணியாளர் முறையாக பராமறிப்பு பணிகளை செய்வது கிடையாது. நாச்சிகுளம் பகுதி நீர் தேக்க தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் .

    இதுபோல் ஒவ்வொரு மாதமும் நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிதண்ணீர் விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

    • ஆகாய தாமரைகளை அகற்றி குண்டாற்றை சுத்தம் செய்யவேண்டும் என நகராட்சி தலைவர்-கவுன்சிலர்கள் தாசில்தாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • ரேசன் கடைகளில் முதியவர்களால் கைரேகை பதிவு செய்யமுடியாதநிலை இருப்பதால் அவர்களால் பொருள்களை ரேசன் கடையில் பெற இயலவில்லை.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் வார்டுகுழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல வார்டுகளில் பொதுமக்கள் ரேஷனில் பொருள்கள் சரிவர வழங்குவதில்லை, திருமங்கலம் நகரில் ஓடும் குண்டாற்றில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து அடைப்பை ஏற்படுத்தி யுள்ளது என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக் குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கவுன்சிலர்கள் ஆகியோர் தாசில்தார் சிவராமனை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

    அப்போது அவர்கள் கூறு கையில், திருமங்கலத்தில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது பகுதியில் ரேசன் பொருள்கள் சரிவரை விநியோகிப்பதில்லை, பலருக்கும் முதியோர் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என புகார் செய்தனர்.

    மேலும் ரேசன் கடைகளில் முதியவர்களால் கைரேகை பதிவு செய்யமுடியாதநிலை இருப்பதால் அவர்களால் பொருள்களை ரேசன் கடையில் பெற இயல வில்லை. மழைகாலம் துவங்கியுள்ள நிலையில் திருமங்கலம் நகரில் ஓடும் குண்டாற்றில் வளர்ந்துள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்றவேண்டும், ஷட்டரை திறந்துவிட்டு அடைப்பு களை நீக்கி நீர்வரத்து கால்வாய் மூல மாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த னர்.

    நகராட்சி கவுன்சிலர்கள், தலைவர்களின் கோரிக்கை யின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார்.

    • உணவில் வைட்டமின் சி அடங்கிய உணவு சத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    • கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும், கால்களில் காலணி அணிய வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஊட்டச்சத்து மாத விழா வாகன பிரச்சார தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    வேதாரண்யம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் தலைமையேற்று குத்துவிளக்கேற்றி கொடிய சைத்து தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, சிவகுரு பாண்டியன், தேவி செந்தில் சரவணன் வீர தங்கம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, வட்டார திட்ட உதவியாளர் சித்ரா, மேற்பார்வையாளர் சரவணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

    வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் நேரில் சென்று சுத்தம், சுகாதாரம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனை களையும் விதம், உணவில் வைட்டமின் சி அடங்கிய உணவு சத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும், கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும், கால்களில் காலணி அணிய வேண்டும் உள்ளிட்டவைளை குறித்து விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

    • சர்வதேச கடற்கரை தூய்மை நாளை முன்னிட்டு கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • மீனவர்கள் கடற்கரையை சுத்தம் செய்ததை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனோரா படகு இறங்குதளம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ஆகிய இரு இடங்களில் சர்வதேச கடற்கரை தூய்மை நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில், கடலோர சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ராஜசேகர், மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் கெங்கேஸ்வரி, ஓம்கார் பவுண்டேஷன் பாலாஜி, அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், மீன்வளத் துறையினர், கடலோர காவல் குழுமத்தினர், மீனவர்கள் கடற்கரையை சுத்தம் செய்தனர். தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

    • கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, படித்துறை வசதி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.
    • அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே 75 அணக்குடி ஊராட்சியில் உள்ள அய்யடிமங்கலம் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி , படித்துறை வசதி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • தேசிய மாணவர் படை மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தினர்.
    • தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தூய்மை பணி செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் இன்று 34 தேசிய மாணவர் படை தஞ்சாவூர் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. சி.ஓ.எல். கர்னல் சஞ்சீவிகுரானா வழிகாட்டுதல் படி சுபேதார் ஒய்.எஸ்.ராவ், சுபேதார் கே.டி.ராவ் மற்றும் ராணுவ வீரர்கள் முன்னிலையில் புனித் சாகர் அபியான் அமைப்பின் கீழ் தேசிய மாணவர் படை மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தினர்பின்னர் பள்ளி முன்பு உள்ள காந்தி சிலையை சுத்தப்படுத்தி சிலைக்கு மாலை அணிவி க்கப்பட்டது. இதனைத் தொ டர்ந்து நகரின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தூய்மை பணி செய்தனர். தெருவில் கிடந்த குப்பை களை அகற்றினர். தொடர்ந்து தூய்மை பணி முகாம் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், தேசிய மாணவர் படை அலுவலர்கள் சக்திவேல், சின்னசாமி, அருண் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நகரை சுத்தமாக வைத்து கொள்ள குப்பைகளை தொட்டியில் கொட்ட வேண்டும் என மேயர்-கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • செல்லூர்கழிவு நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செல்லூர்கழிவு நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கழிவுநீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள், புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீரேற்று தொட்டிகள், மின்மோட்டார்கள், பாதுகாப்பு உபகரணங்கள், சுத்திகரிக்கப்படும் முறைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து இன்று மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து செல்லூர் வைகை ஆற்றின் கரைப்பகுதியில் பூங்கா அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளை விரைந்து மேற்கொண்டு முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட னர்.

    முன்னதாக 34-வது வார்டு அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனி பகுதி களில் தீவிர தூய்மை பணிகள் நடைபெறுவதை அவர்கள் பார்வையிட்டனர். அப்பகுதியில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுமாறும், காலனியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போடுமாறும், காலனி பகுதியினை தொடர்ந்து தூய்மையாக வைத்துக் கொள்ள அப்பகுதி பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக் கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, உதவி ஆணையாளர்கள் அமிர்த லிங்கம், சுரேஷ்குமார் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், கந்தப்பா, சந்தனம், ஆரோக்கிய சேவியர், அலெக்ஸ்சாண்டர், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், சுப்புராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
    • இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    வீரபாண்டி:

    திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடையில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் 2 ஆண்டுகளாக உள்ளது.

    திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பாலத்தின் அடியில் சாக்கடை மண் நிரம்பியுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

    இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி பலவகை வைரஸ் நோய்கள் ஏற்படுகின்றன. மக்கள் பிரதிநிதி வந்த பின்பு இதற்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் இதற்கு இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே எங்களின் நீண்டநாள் கோரிக்கையை திருப்பூர் மேயர் மற்றும் நான்காம் மண்டலத்தலைவர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் விமானப்படை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்றின் கரையில் உலகப்பெருங்கடல் தினத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் கந்தசாமிக்கண்டர், பரமத்தி பி.ஜி.பி. மற்றும் மெட்டாலா லயோலா ஆகிய கல்லூரியின் தேசிய மாணவர் விமான படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பரமத்திவேலூர் பேருந்து நிலையம் முதல் காவிரி ஆற்றங்கரை வரை ஊர்வலமாக கையில் பதாகை ஏந்தி உலகப்பெருங்கடல் தினத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கந்தசாமி கண்டர் கல்லூரியின் முதல்வர் தங்கராசு விழாவை தொடங்கி வைத்தார். பரமத்திவேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி, காவிரி ஆற்றில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு கையுறைகளை வழங்கி பணிகளை பாராட்டினார்.

    பின்னர் மாணவர்கள் அனைவரும் காவிரி ஆற்றங்கரையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தப் படுத்தினர்.தேசிய விமானப்படை மாணவ, மாணவியர்களின் இந்த சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    ×