search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் தூய்மை பணி
    X

    தூய்மை பணியில் ஈடுபட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள்.

    மாணவர்கள் தூய்மை பணி

    • தேசிய மாணவர் படை மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தினர்.
    • தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தூய்மை பணி செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் இன்று 34 தேசிய மாணவர் படை தஞ்சாவூர் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. சி.ஓ.எல். கர்னல் சஞ்சீவிகுரானா வழிகாட்டுதல் படி சுபேதார் ஒய்.எஸ்.ராவ், சுபேதார் கே.டி.ராவ் மற்றும் ராணுவ வீரர்கள் முன்னிலையில் புனித் சாகர் அபியான் அமைப்பின் கீழ் தேசிய மாணவர் படை மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தினர்பின்னர் பள்ளி முன்பு உள்ள காந்தி சிலையை சுத்தப்படுத்தி சிலைக்கு மாலை அணிவி க்கப்பட்டது. இதனைத் தொ டர்ந்து நகரின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தூய்மை பணி செய்தனர். தெருவில் கிடந்த குப்பை களை அகற்றினர். தொடர்ந்து தூய்மை பணி முகாம் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், தேசிய மாணவர் படை அலுவலர்கள் சக்திவேல், சின்னசாமி, அருண் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×