search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள்"

    • கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஊர்மக்கள் அனைவரது வீட்டிலும் கருப்பு கொடி கட்டி எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வாக்களிக்க மாட்டோம் என்று கூறினோம்.
    • இது சம்பந்தமாக பல முறை ஏற்காடு தாசில்தார், சேலம் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொடிகாடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முறையாக சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் தொட்டில் கட்டி அவரை அழைத்து சென்றனர். இதனை வீடியோவாக பதிவு செய்த கிராம மக்கள் அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு தங்கள் கிராமத்தின் அவல நிலை குறித்து குமுறியுள்ளனர்.

    இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    பல வருடமாக இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். கிராமத்தில் யாருக்காவது உடல் நிலை பாதிக்கப்படும் நேரங்களில் ஆம்புலன்சு உள்ளிட்ட வாகனங்கள் வர முடியாத காரணத்தால் தொட்டில் கட்டிதான் கொண்டு செல்ல வேண்டி உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஊர்மக்கள் அனைவரது வீட்டிலும் கருப்பு கொடி கட்டி எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வாக்களிக்க மாட்டோம் என்று கூறினோம். அப்போது அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எங்கள் கிராமத்திற்கு வந்து தேர்தல் முடிந்தவுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்களித்தனர்.

    அதன்பின்பு இதுவரை யாரும் எங்களை பார்க்க வரவில்லை. இது சம்பந்தமாக பல முறை ஏற்காடு தாசில்தார், சேலம் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சென்னி மலை- காங்கேயம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இந்த மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை-காங்கேயம் இடையே புறவழி ச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டு வந்து சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி பிரிவு அருகே திருவள்ளுவர் நகர் பகுதியினை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து நாங்கள் மேற்கண்ட முகவரியில் 3 தலைமுறை யாக வசித்து வருகிறோம்.

    சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் புறவழிச்சாலை போடப்பட உள்ளது. இதற்காக பசுவப்பட்டி, திருவள்ளுவர் நகர் வழியாக நில அளவை பணிகள் நடைபெறுகிறது.

    இந்த வழியாக புறவழி ச்சாலை அமைக்கப்பட்டால் திருவள்ளுவர் நகர், கே.சி.நகர், காமராஜர் நகர், தட்டங்காடு ஆகிய 4 கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகி ன்றனர். எங்களுக்கு தேவை யான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

    இதனால் இப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்கா மால் மாற்று வழியில் அமைக்க கோரி சென்னி மலை- காங்கேயம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தெடார்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


    • மேலூர் அருகே அய்வத்தான்பட்டியில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • கிராம மக்கள் போட்டி போட்டு மீன் பிடித்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கம்பூர் ஊராட்சி அய்வத் தான்பட்டி கிராமத்தில் உள்ள அய்வத்தான் கண் மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா இன்று காலை நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே மேலூர் மற்றும் கொட்டாம் பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து பொது மக்கள் மீன்பிடி உபகர ணங்களான வலை, கச்சா, ஊத்தா ஆகியவற்றை கொண்டு மீன்களை பிடிக்க கண்மாய் கரையில் காத்திருந்தனர்.



    பிடிப்பட்ட மீனுடன் வாலிபர்கள்.

    பின் அங்கு வந்த கிராம முக்கியஸ்தர்கள் அங்குள்ள கருப்பசாமி கோவிலில் வழிபட்டு பின் கண்மாய் கரையில் வெள்ளை கொடி வீசி யதை தொடர்ந்து தயாராக நின்ற பொதுமக்கள் கண் மாய்க்குள் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்து சென்ற னர். இந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தலா 2 கிலோ முதல் 5 கிலோ வீதம் வரை நாட்டு வகை மீன் களான கட்லா, ரோகு, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் சிக்கன.

    இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து உண்பதை கடை பிடித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இது போன்ற மீன்பிடி திருவிழா நடத்துவதால் விவசாயம் செழித்து மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது .

    இந்த மீன்பிடித் திரு விழாவின்போது பெண் ஒருவர் பிடித்த மீன் வலையில் திடீரென பாம்பு ஒன்று அகப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
    • மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கணவாய்புதூர் ஊராட்சியில் வீராச்சியூர், பூமருத்துவர், கண்ணப்பாடி, கோவில்பாடி, சுரக்காப்பட்டி, கொலகூர், கரடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகளுடன் இன்று காலை கணவாய்புதூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், வனத்துறையினர், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கிராம மக்கள் கூறுகையில், கணவாய்புதூர் பகுதியில் இருந்து கண்ணப்பாடிக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இங்கு தார் சாலை அமைக்கப்பட்டு சுமார் 7 வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில் சாலை முழுவதும் பழுதடைந்து உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் விடுமுறை நாட்களில் கர்நாடகா, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் கணவாய் புதூர் வழியாக ஏற்காடு சென்று வருகின்றனர். இந்த பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் சிரமப்பட்டு செல்கின்றனர்.

    எனவே சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    • கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட ஆவூர் கிராமத்தில் சுமார் 980 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கும், தங்களது கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏரியின் வெளிப்புற கரைப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தீவன மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஏரி இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவு உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் மின்வேலி அமைத்து உள்ளனர். மேலும் அதில் நெற்பயிரிட இருப்பதாக தெரிகிறது.

    மின்வேலியால் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும் ஆக்கிரமிப்பு ஏரிநிலத்தை மீட்க கோரியும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஆவூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் மதியழகன், ஏரி இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்

    • பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அனைத்து கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமானநிலையத்துக்கு பரந்தூர், ஏகனாபுரம், மேலேறி நெல்வாய், சிங்கிள்பாடி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை ஒன்றிணைந்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 432-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் இதுவரை நடந்த 6 கிராம சபை கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். மேலும் ஒரு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

    இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களை கடந்த வாரம் பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி. ஆய்வுகுழு நேரில் பார்வையிட இருந்தது. இதற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அனைத்து கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆய்வு திடீரென நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் இன்று பரந்தூர் பகுதியில் பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையில் ஐ.ஐ.டி. ஆய்வுகுழு ஆய்வு செய்ய மீண்டும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    அவர்கள், ஆய்வுக்குழு வரும்போது போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரந்தூர் பகுதி பதட்டமாக காணப்படுகிறது.

    • கிளியனூர் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • நேற்றிரவு அதே ஊரைச் சேர்ந்த மணி கண்டன் (35), சண்முகம் (30), கார்த்திக் (29) ஆகியோருடன் புதுவை நோக்கி காரில் சென்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தந்தி ராயன்பேட்டையை சேர்ந்த வர் சந்திரன் (வயது 40). இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராகவும், கவுன்சிலராகவும் உள்ளார். இவர் நேற்றிரவு அதே ஊரைச் சேர்ந்த மணி கண்டன் (35), சண்முகம் (30), கார்த்திக் (29) ஆகியோருடன் புதுவை நோக்கி காரில் சென்றார். அப்போது கிளியனூர் அருகே தென் கோடிப்பாக்கம் மேம்பா லத்தை கடந்தபோது, சாலை யில் இருந்த தடுப்புக் கட்டை யில் மோதி கார் விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த கவுன்சிலர் சந்திரன் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அந்த ஊரைச் சேர்ந்த பொது மக்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இத்தகவல் அறிந்து தென்கோடி பாக்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர். மேம்பாலம் அருகில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால் இங்கு உயர்மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்க வேண்டு மென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், இன்ஸ்பெக்டர் பால முரளி மற்றும் போலீ சார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நெடுஞ்சா லைத் துறை அதிகாரி கள் வந்து உயர்மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்க உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோ மென பொதுமக்கள் கூறினர். இதையடுத்து நெடுஞ்சா லைத் துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் பேசி னார். ஒரு மாதகாலத்திற்குள் மேம்பாலம் பகுதியில் உயர்மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதி யளித்ததாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் கூறினார். இதனையேற்ற பொது மக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் புதுவை - திண்டிவனம் சாலையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தை அடுத்த வெளியாத்தூர் ஊராட்சியில் உள்ள விவசாய நிலையத்தில் புதிய டாஸ்மாக் கடைதிறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக அங்கு புதிய கடை கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.

    தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும். எனவே கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

    இந்த நிலையில் டஸ்மாக் கடைஅமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாத்தனூர், வெளியாத்தூர், கண்டரமாணிக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட கிராம மக்கள், விவசாய சங்கத்தினர் திடீரென புதிய டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2-வது நாளாக இன்றும் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிராம மக்களின் போராட்டம் குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பாஸ்கரன், வட்டாட்சியர்கள் கந்தசாமி, வெங்கடேசன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • நறுமண பொருட்களை கொண்டு கெங்கை மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த கீழ்ப்பட்டு கிராமத்தில் உள்ள கெங்கை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 22-ம் தேதி காப்புகட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஊரணி பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், ஆரியமாலா, காத்தவராயன் திருக்கல்யாணம், கழுமரம் ஏறுதல், அலகு போடுதல், காளிகோட்டை இடித்தல், தீ மிதித்தல், அம்மன் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் நேற்று பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு கெங்கை மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் கெங்கை மாரியம்மன் எழுந்தருள தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 3 மணிக்கு நடைபெற்றது. அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுப்புறத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    • கிருங்காகோட்டை அழகுநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கிருங்காகோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருங்காகோட்டை கிராமத்தில் உள்ள அழகுநாச்சியம்மன் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா முதல் கால யாகபூஜையுடன் தொடங்கியது.

    அதைதொடர்ந்து 2-ம் காலம், 3-ம் காலம் பூஜைகளுடன் யாகசாலையில் வைத்து பூஜை செய்த புனித கடம் தீர்த்தங்களுடன் புறப்பாடாகி கோவில் விமான கோபுரம் கும்ப கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை அபிஷேகம் செய்தனர். அதை தொடர்ந்து அழகுநாச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்க ளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழில் அதிபர் பச்சேரி சி.ஆர்.சுந்தரராஜன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். கும்பாபிஷேக விழாவை கான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அழகுநாச்சியம்மனை வழிபாடு செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கிருங்காகோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • புதிய ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் பூசிவாக்கம் லெனின்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வாலாஜாபாத்:

    வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்னழுத்த குறைபாடு காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதடைவதாகவும் அதனால் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பேட்டை, திம்மையன்பேட்டை, ஏகனாம்பேட்டை, பூசிவாக்கம், வெண்குடி என 5 கிராமங்களில் ரூ.40 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு அதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

    வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் கலந்துகொண்டு புதிய டிரான்ஸ்பார்மர்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஏகனாம்பேட்டை கிராமத்திற்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதிக்கு வந்தபோது கிராம மக்கள் திரண்டு வந்து எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து தற்போது தான் தனக்கு தெரிய வருகிறது. அதனால் உடனடியாக புதிய ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். அதன் பேரில் முற்றுகையிட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் பி.சேகர், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி சுந்தரமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் பூசிவாக்கம் லெனின்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம மக்களிடம் சிக்கி தவித்த சிறுத்தையை மீட்டு இந்தூரில் உள்ள வன பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
    • சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கபட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இந்த வனப்பகுதியில் இருந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தை ஒன்று அருகில் உள்ள இக்லேரா கிராமத்திற்குள் புகுந்தது.

    அந்த சிறுத்தை நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு மெதுவாக சென்றது. இதை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த சிறுத்தை அருகில் சென்றனர். பின்னர் அந்த சிறுத்தையை சுற்றி நின்று கொண்டு அதன் வேதனையை பற்றி கவலைப்படாமல் கைத்தட்டி சிரித்தனர். மேலும் அதனை கையால் தள்ளி சித்ரவதை செய்தனர். அந்த சிறுத்தையுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் சிறுத்தை மீது ஏறி சவாரி செய்யவும் முயன்றார். இதை பார்த்த சிலர் அந்த கும்பலிடம் இது போன்று செய்யாதீர்கள், பாவம் சிறுத்தை உடல் நலம் சரியில்லாமல் உள்ளது என்று கூறினார்கள், ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவர்கள் தொடர்ந்து சிறுத்தையை கொடுமை படுத்துவதிலேயே மும்முரமாக இருந்தனர்.

    மேலும் ஒரு சிலர் அந்த சிறுத்தையை ஊருக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அதனை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் வனத் துறையினர் விரைந்து சென்று கிராம மக்களிடம் சிக்கி தவித்த சிறுத்தையை மீட்டு இந்தூரில் உள்ள வன பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    அந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண் காணிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கபட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிராம மக்கள் சிறுத்தையை கொடுமைப்படுத்தும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×