search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வேலி"

    • கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட ஆவூர் கிராமத்தில் சுமார் 980 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கும், தங்களது கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏரியின் வெளிப்புற கரைப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தீவன மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஏரி இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவு உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் மின்வேலி அமைத்து உள்ளனர். மேலும் அதில் நெற்பயிரிட இருப்பதாக தெரிகிறது.

    மின்வேலியால் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும் ஆக்கிரமிப்பு ஏரிநிலத்தை மீட்க கோரியும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஆவூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் மதியழகன், ஏரி இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்

    • கலெக்டர் ஒதுக்கிய நிதியிலிருந்து உடனடியாக 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு தொங்கும் சூரிய மின்வெளி அமைக்கப்பட்டது.
    • நேற்று முதல் சூரிய மின்வெளியை பாலக்கோடு வனத்துறையினர் செயல்பட தொடங்கி வைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் வனம் நிறைந்த மாவட்டமாக உள்ளது. ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, உள்ளிட்ட வனப்பகுதிகள் யானைகள் அதிகமாக வசிக்கிறது.

    கோடைகாலங்களில் உணவு தண்ணீர் தேடி வனத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    பாலக்கோடு வட்டம், பேவுஅள்ளி பஞ்சாயத்து ஈச்சம்பள்ளம் பகுதியில் யானைகள் காட்டை விட்டு வெளியே வந்து விவசாய பயிர்களை அதிகளவில் சேதப்படுத்தியதை அடுத்து பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஒதுக்கிய நிதியிலிருந்து உடனடியாக 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு தொங்கும் சூரிய மின்வெளி அமைக்கப்பட்டது.

    இந்த பணிகள் முடிந்ததை அடுத்து பேவுஅள்ளி பஞ்சாயத்து தலைவர் பிரகாஷ் மற்றும் ஊர் கவுண்டர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலையில் நேற்று முதல் சூரிய மின்வெளியை பாலக்கோடு வனத்துறையினர் செயல்பட தொடங்கி வைத்தனர்.

    • முதியவர் கைது
    • 7 பேர் கொண்ட குழுவினர் நிலங்களில் சோதனையில் ஈடுபட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வன சரக பகுதியில் சில இடங்களில் வன விலங்குகளை வேட்டையாட மின்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

    இதையடுத்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனகாப்பாளர்கள் சிரஞ்சீவி, முகமது சுல்தான், பாலாஜி, மறுவரசன், மணிவேலன், சங்கீதா ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கவுத்தி மலை, காப்புக்காடு, திருவண்ணாமலை - காஞ்சி சாலை காப்பு காட்டு ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புனல்காடு கிராமம் காப்பு காட்டை ஒட்டி சண்முகம் (வயது 69) என்பவர் அவரது பட்டா நிலத்தில் வனவிலங்கு வேட்டைக்காக மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் சோதனையில் மின்வேலியில் சிக்கி 2 ஆண் புள்ளிமான் மற்றும் ஒரு நாய் இறந்தது கிடந்ததும் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் மின்வேலி அமைத்த சண்முகத்தை கைது செய்து விசாரணை செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மேகநாதன் தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் ரோஜா செடிக்களை வளர்த்து வருகிறார்.
    • வயலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் மேகநாதன் வயலுக்கு சென்று பார்த்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, பொம்மராஜுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 55) விவசாயி. இவரது மனைவி துளசி (50). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ள நிலையில் மகள்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து அவரவர்கள் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

    மகன் கல்லூரியில் படித்து வருகிறார். மேகநாதன் தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் ரோஜா செடிக்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் தோட்டத்திற்குள் நுழைவதை தடுக்க மின் வேலி அமைத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் தோட்டத்தில் ரோஜா பூக்களை பறித்து வருவதற்காக நேற்று காலை துளசி தனியாக தோட்டத்திற்கு வந்தார். அப்போது கணவன் அமைத்த மின்வேலியில் அவர் சிக்கி உடலில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    வயலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் மேகநாதன் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு மனைவி துளசி மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் அமைத்த மின்வேலியில் தனது மனைவியே சிக்கி இறந்து விட்டாரே என மன உளைச்சலில் தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட கிராமத்தினர் இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கணவன்-மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு பகுதியில் ஒரு யானையை விவசாயி ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • யானையின் உடல் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் வனப்பகுதி மற்றும் அந்தியூர் வன சரகத்துக்குட்பட்ட பர்கூர் வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த நிலையில் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே தற்போது 103 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு வருகிறது. இதையொட்டி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வரும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இப்படி வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதையொட்டி யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகாமல் இருக்க ஒரு சில பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்களையொட்டி மின் வேலிகள் அமைத்துள்ளனர். அந்த மின்வேலிகளில் சிக்கி யானைகள் பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது.

    ஈரோடு வனக்கோட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு கோவில் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சடையப்பன் (வயது 58). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த விவசாய தோட்டத்தில் யானைகள் வராமல் இருக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக வந்த ஒரு யானை மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பலியானது. இதையடுத்து அவர் இறந்த யானையை வனத்துறையினருக்கு தெரியாமல் அந்த பகுதியிலேயே குழிதோண்டி புதைத்து விட்டார்.

    இந்த நிலையில் பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு பகுதியில் ஒரு யானையை விவசாயி ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பர்கூர் வன சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் அவர் மின்சாரம் தாக்கி பலியான யானையை புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து பணியாளர்கள் மூலம் வனத்துறையினர் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டினர். அப்போது அங்கு யானையின் உடல் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து யானையின் உடல் பாகங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

    இதையடுத்து வனத்துறையினர் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்று புதைத்தாக கூறி சடையப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி மாவட்ட கிளையில் அடைத்தனர்.

    • தற்காக சமீப காலங்களில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
    • தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காப்பு காடுகள் மற்றும் காப்பு நிலங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைப்பதால் வன விலங்குகள், மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு விவசாயிகள் தங்களின் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்ப தற்காக சமீப காலங்க ளில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் யானைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு மின்வேலி அமைத்தல் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் தமிழ்நாடு மின்சார சட்டம் 2003 பிரிவு 138-ன்படி மிகக் கடுமையான தண்ட னைக்குரிய குற்றமாகும்.

    எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது என கடுமையாக எச்சரி க்கப்படு கிறார்கள். இந்த எச்சரிக்கையை மீறி மின்வேலி அமைத்தால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவு களுக்கும் சம்மந்தப்பட்ட நபரே பொறுப்பேற்க நேரிடும். மேலும் மின்வாரிய மற்றும் வன அதிகாரி கள் ஆய்வு மேற்கொள்ளும் போது மின்வேலி அமைத்தி ருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள்மீது சட்டப்படி கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் மின்வேலி அமைப்பதை தவிர்த்து மற்ற உயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்வேலியில் சிக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்தன.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள வி கரிசல்குளம் கருப்பசாமி கோவில் அருகில் மின்வேலியில் சிக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் துணை மின் பொறியாளர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது பூமி என்பவர் தனது வயல்காட்டில் உள்ள நெற்பயிர்களை காப்பதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் பூமி மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.

    அதில் மின்சாரம் தாக்கி இறந்த ஜல்லிக்கட்டு காளைகள் 2 நாட்களுக்கு முன்பு ஆவியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாயமான ஜெய்ஹிந்த்புரம் மாணிக்கம் மற்றும் அவனியாபுரம் கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான காளைகள் என்பது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். இந்த நிலத்தில் மணிலா அறுவடை பணிக்காகதனலட்சுமி (வயது 65) இன்று காலை சென்றார்.
    • காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிரை காட்டு பன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்க மின்வேலி அமைத்திருந்தார் இந்த நிலத்தில் மணிலா அறுவடை பணிக்காக பக்கத்து கிராமமான மணம் தவழ்ந்தபுத்தூர் காலணி சேர்ந்த சேட்டு என்பவரது மனைவி தனலட்சுமி (வயது 65) இன்று காலை சென்றார் 

    அப்போது காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.  இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி உயிர் இழந்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், அரசிடம் அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்த விவசாயி சுப்புராயனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை
    • 2 மாதங்களில் 55 மின் விபத்து ஏற்பட்டுள்ளது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்தில் கடந்த 2 மாதங்களில் வீட்டில் துணி களை உலர வைப்பது, செல்போன் சார்ஜர் செய்யும்போது, மின் வேலி அமைத்தது போன்ற 55 சமயங்களில் மின் விபத்து ஏற்பட்டுள்ளது.

    பழுது ஏற்பட்டால் உடனடியாக மின்சாரத்தை துண்டிக்க, வீடு மற்றும் கட்டுமானம் நடைபெறும் கட்டிடத்தில் நில கசிவு மின் திறப்பானை பொருத்த வேண்டும்.

    வீட்டில் துணிகளை உலர வைக்க கட்டப்படும் கயிற்றின் மீது மின் வயரை கொண்டு செல்ல வேண்டாம். ஐஎஸ்ஐ சான்று பெற்றுள்ள மின் சாதன பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். மின் பாதைக்கு அருகே பணிகளை மேற்கொள்ள கூடாது.

    இதனால் ஏற்படும் விபத்துக்கு கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு. வயல்வெளிகளில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

    மின் கம்பிகள் மற்றும் ஸ்டே (இழுவை) கம்பிகளில் ஆடு, மாடுகளை கட்ட வேண்டாம். மின் மாற்றி அல்லது மின் கம்பிகளில் பழுது ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு தெரியப்படுத்தி சரி செய்ய வேண்டும். மின் பழுது. மின் மீட்டர் அளவு குறைபாடுகள் மற்றும் விபத்து குறித்து மின்னகம் சேவை எண் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேலும், 94458 -55768 என்ற மண்டல வாட்ஸ்-அப் எண்ணுக்கு 1 தகவல் தெரிவித்து குறைகளுக்கு விதிகளை பின்பற்றி, மின் விபத்து நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.பழனிராஜு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளார்.

    • புல் அறுக்க முயன்ற இடத்தில் காட்டு பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளது.
    • விளைநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மின்வேலி அமைத்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் போலீஸ்சரகம் திருவக்கரை அருகே உள்ள தேனிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். விவசாயி. அவரது மனைவி நாகவள்ளி (வயது 60). இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள விளைநிலத்தில் மாட்டுக்கு புல் அறுக்க சென்றார். இரவு நேரமாகியும் நாகவள்ளி வீடு திரும்பாததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் விளைநிலம் நோக்கி சென்றனர். அப்போது நாகவள்ளி பிணமாக கிடந்தார். புல் அறுக்க முயன்ற இடத்தில் காட்டு பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளது. எனவே அந்த விளைநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மின்வேலி அமைத்துள்ளார். இதை கவனிக்காமல் நாகவள்ளி தொட்டதால் மின்சாரம் தாக்கி பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்தனர். இறந்துபோன நாகவள்ளி உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • மணல் கடத்தலின் போது சம்பவம் போலீசுக்கு பயந்து ஓடிய விவசாயி மின் வேலியில் சிக்கினார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • உயிருக்கு போராடிய பழனியை தூக்கி கொண்டு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே டி.எடையாறு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் தென்பெண்ணையாறு ஓடுகிறது. இங்கு அந்த பகுதியில் மர்ம மனிதர்கள் மாட்டு வண்டியில் இரவு-பகல் பாராமல் மணல் திருடி வருகிறார்கள். அதன்படி டி.எடையாறு கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 45) என்பவர் தென்பெண்ணையாற்றில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி கொண்டிருந்தார். இந்த தகவல் போலீசாருக்கு எட்டியது.தகவலறிந்த போலீசார் தென்பெண்ணையாற்று பகுதிக்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த பழனி அங்கிருந்து தப்பி ஓடினார். அவர் செல்லும் வழியில் அந்த பகுதியில் உள்ள விளைநிலத்தில் காட்டு பன்றிக்காக மின்வேலி போடப்பட்டு இருந்தது.

    இதனை கவனிக்காத பழனி அந்த வழியாக சென்ற போது மின் வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள விவசாயிகள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிய பழனியை தூக்கி கொண்டு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×