search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வயல்வெளிகளில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை
    X

    வயல்வெளிகளில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை

    • மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை
    • 2 மாதங்களில் 55 மின் விபத்து ஏற்பட்டுள்ளது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்தில் கடந்த 2 மாதங்களில் வீட்டில் துணி களை உலர வைப்பது, செல்போன் சார்ஜர் செய்யும்போது, மின் வேலி அமைத்தது போன்ற 55 சமயங்களில் மின் விபத்து ஏற்பட்டுள்ளது.

    பழுது ஏற்பட்டால் உடனடியாக மின்சாரத்தை துண்டிக்க, வீடு மற்றும் கட்டுமானம் நடைபெறும் கட்டிடத்தில் நில கசிவு மின் திறப்பானை பொருத்த வேண்டும்.

    வீட்டில் துணிகளை உலர வைக்க கட்டப்படும் கயிற்றின் மீது மின் வயரை கொண்டு செல்ல வேண்டாம். ஐஎஸ்ஐ சான்று பெற்றுள்ள மின் சாதன பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். மின் பாதைக்கு அருகே பணிகளை மேற்கொள்ள கூடாது.

    இதனால் ஏற்படும் விபத்துக்கு கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு. வயல்வெளிகளில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

    மின் கம்பிகள் மற்றும் ஸ்டே (இழுவை) கம்பிகளில் ஆடு, மாடுகளை கட்ட வேண்டாம். மின் மாற்றி அல்லது மின் கம்பிகளில் பழுது ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு தெரியப்படுத்தி சரி செய்ய வேண்டும். மின் பழுது. மின் மீட்டர் அளவு குறைபாடுகள் மற்றும் விபத்து குறித்து மின்னகம் சேவை எண் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேலும், 94458 -55768 என்ற மண்டல வாட்ஸ்-அப் எண்ணுக்கு 1 தகவல் தெரிவித்து குறைகளுக்கு விதிகளை பின்பற்றி, மின் விபத்து நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.பழனிராஜு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×