search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 jallikattu bulls"

    • மின்வேலியில் சிக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்தன.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள வி கரிசல்குளம் கருப்பசாமி கோவில் அருகில் மின்வேலியில் சிக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் துணை மின் பொறியாளர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது பூமி என்பவர் தனது வயல்காட்டில் உள்ள நெற்பயிர்களை காப்பதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் பூமி மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.

    அதில் மின்சாரம் தாக்கி இறந்த ஜல்லிக்கட்டு காளைகள் 2 நாட்களுக்கு முன்பு ஆவியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாயமான ஜெய்ஹிந்த்புரம் மாணிக்கம் மற்றும் அவனியாபுரம் கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான காளைகள் என்பது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×