search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மின்வேலி அமைக்கக் கூடாது: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
    X

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மின்வேலி அமைக்கக் கூடாது: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

    • தற்காக சமீப காலங்களில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
    • தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காப்பு காடுகள் மற்றும் காப்பு நிலங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைப்பதால் வன விலங்குகள், மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு விவசாயிகள் தங்களின் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்ப தற்காக சமீப காலங்க ளில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் யானைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு மின்வேலி அமைத்தல் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் தமிழ்நாடு மின்சார சட்டம் 2003 பிரிவு 138-ன்படி மிகக் கடுமையான தண்ட னைக்குரிய குற்றமாகும்.

    எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது என கடுமையாக எச்சரி க்கப்படு கிறார்கள். இந்த எச்சரிக்கையை மீறி மின்வேலி அமைத்தால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவு களுக்கும் சம்மந்தப்பட்ட நபரே பொறுப்பேற்க நேரிடும். மேலும் மின்வாரிய மற்றும் வன அதிகாரி கள் ஆய்வு மேற்கொள்ளும் போது மின்வேலி அமைத்தி ருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள்மீது சட்டப்படி கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் மின்வேலி அமைப்பதை தவிர்த்து மற்ற உயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×