search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்ப்பு தெரிவித்து"

    • புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை சார்பாக அளவீடு செய்யும் பணி நடந்தது.
    • பொதுமக்கள் திரண்டு வந்து சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சென்னிமலை:

    சென்னிமலை நகர பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெருசலை கட்டுப்படுத்த சென்னி மலை-நகர பகுதிக்கு கனரக வாகனங்கள் வராமல் காங்கேயம், பெருந்துறை செல்லும் படி புறவழி ச்சாலை அமைக்க நெடுஞ்சா லை துறை சார்பாக அளவீடு செய்யும் பணி நடந்தது.

    இதில் பசுவபட்டி ஊராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் புறவழிசாலை வந்து பசுவபட்டி பிரிவு அருகே காங்கேயம் மெயின் ரோட்டில் இணைக்கும் படி அளவீடு செய்துள்ளனர்.

    அந்த பகுதியில் புறவழி சாலை வேண்டாம். பசுவபட்டி பிரிவு, வெப்பிலி பிரிவு அருகே தற்போது அதிக அளவில் விபத்துகள் நடக்கிறது.

    மேலும் புறவழி சாலை வந்தால் நாங்கள் அதிகம் பாதிக்கப்படுவோம் என கூறி திருவள்ளுவர் நகர், காமராஜ் பதி குடியிருப்பு பகுதி, தட்டாங்காடு குடியிருப்பு, பசுவபட்டி பிரிவு பகுதி பொது மக்கள் திரண்டு வந்து, சென்னி மலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் புறவழிச்சாலை போடப்பட உள்ளது. இதற்காக பசுவப்பட்டி, திருவள்ளுவர் நகர் வழியாக நில அளவை பணிகள் நடைபெறுகிறது.

    இந்த வழியாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் திருவள்ளுவர் நகர், கே.சி.நகர், காமராஜர் நகர், தட்டங்காடு ஆகிய 4 கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு மிக ப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

    இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்காமால் மாற்று வழியில் அமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

    • சென்னி மலை- காங்கேயம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இந்த மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை-காங்கேயம் இடையே புறவழி ச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டு வந்து சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி பிரிவு அருகே திருவள்ளுவர் நகர் பகுதியினை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து நாங்கள் மேற்கண்ட முகவரியில் 3 தலைமுறை யாக வசித்து வருகிறோம்.

    சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் புறவழிச்சாலை போடப்பட உள்ளது. இதற்காக பசுவப்பட்டி, திருவள்ளுவர் நகர் வழியாக நில அளவை பணிகள் நடைபெறுகிறது.

    இந்த வழியாக புறவழி ச்சாலை அமைக்கப்பட்டால் திருவள்ளுவர் நகர், கே.சி.நகர், காமராஜர் நகர், தட்டங்காடு ஆகிய 4 கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகி ன்றனர். எங்களுக்கு தேவை யான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

    இதனால் இப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்கா மால் மாற்று வழியில் அமைக்க கோரி சென்னி மலை- காங்கேயம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தெடார்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


    • ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர்.
    • இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சத்தியமங்கலம் மெயின் ரோடு பகுதியில் நகராட்சி க்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. மேலும் அந்த பகுதியில் தினசரி மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்நிலையில் நகராட்சி சார்பில் நகராட்சி கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நோட்டீசு வழங்கினர். இதற்கு கடை காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இதை கண்டித்து நகராட்சி கடை குத்தகைதாரர்கள் சங்கம் மற்றும் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் அனைத்து வியா பாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் நகர மன்ற தீர்மானத்தினை கண்டித்தும் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் கடை களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி இன்று காலை பு.புளியம்பட்டி பகுதியில் தினசரி மார்க்கெட்டு கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    நகராட்சி கடைகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டண கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் அறிவிப்பின்படி இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. தலைவரும், முதல்-அமை ச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி -மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதன்படி ஈரோடு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பா ளர்கள் கே.இ.பிரகாஷ், சேகர், மாணவரணி அமைப்பாளர் திருவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட அறங்காவல் குழு தலைவர் எல்லபாளையம் சிவக்குமார், அந்தியூர் செல்வராஜ் எம்.பி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன்,

    கோபி நகர் மன்ற தலைவரும், நகர செயலாளருமான என்.ஆர்.நாகராஜன், கோபி முன்னாள் நகர செயலாளர் மணிமாறன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன், கோட்டைப்பகுதி செயலாளர் ராமச்சந்திரன்,

    பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு, வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளர் வீ.சி.நடராஜன், கவுன்சிலர்கள் புனிதா சக்திவேல், புவனேஸ்வரி பாலசுந்தரம், ஜெகதீஷ், சுகந்தி, கீதாஞ்சலி செந்தில்குமார், சுபலட்சுமி, தலைமைக் கழக பேச்சாளர் இளைய கோபால்,

    பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, வட்டச் செயலாளர் தங்கமணி, தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் கோபால், பொருளாளர் தங்கமுத்து உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டண கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான தி.மு.க. நிர்வாகிகள் திரண்டதால் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×