search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி"

    • கடந்த இரண்டு மாதத்திற்கு முன் காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.
    • காய்கறிகளின் விலை சந்தையில் ஏற்றம், இறக்கத்தின் போது சராசரி விலை கிடைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தருமபுரி,

    காய்கறி பொருட்களை ரேசன் கடையில், குறைந்த விலையில், குடும்ப அட்டை தாரருக்கு வழங்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதாவிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    மத்திய அரசின் மோசமான கொள்கையே விலை உயர்வுக்கு காரணம். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.

    தக்காளி உள்ளிட்ட சிலகாய்களுக்கு உரிய கட்டுப்படியான விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே தக்காளியை அழித்தனர். தற்போது தக்காளி உயர்வுக்கு பருவநிலை ஒரு காரணமாக உள்ளது.

    காய்கறிகளின் விலை சந்தையில் ஏற்றம், இறக்கத்தின் போது சராசரி விலை கிடைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு காய்கறிகள் விலை சராசரியாக கிடைக்க ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, முன்னாள் மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, மாவட்ட தலைவர் ஜெயா, நகரசெயலாளர் நிர்மலாராணி, உள்ளிட்டா நிர்வாகிகளுடன் மனு கொடுத்தனர்.

    • தக்காளி சிறிய வெங்காயம் போன்ற பொருட்கள் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காய்கறி-மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் என்னென்ன பொருட்கள் விலை உயர்ந்துள்ளது, அதை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக தக்காளி, சிறிய வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இப்போது தக்காளி சிறிய வெங்காயம் போன்ற பொருட்கள் கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.

    இது தொடர்பாக பல்வேறு துறையை சார்ந்த நீங்கள் உங்கள் துறை மூலமாக அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவு அங்காடிகளிலும், நியாய விலை கடைகளிலும் சந்தை விலையை விட குறைவாக விற்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

    தேவைப்பட்டால் இதற்கென தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ள வேண்டும்.

    அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கடுமையாக கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமைப் பொருள் காவல் துறையினர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும்.

    காய்கறி விலை உயர்ந்தாலும், அதன் பலன் நேரடியாக விவசாயிகளுக்கு செல்லவில்லை என்று கேள்விப்படுகிறேன். இதனை சரி செய்ய உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் பெரிதும் உதவும்.

    எனவே வேளாண் துறை இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல் நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போது பெருமளவு மாநகராட்சி மற்றும் தோட்டக் கலைத் துறை மூலம் தொடங்கலாம்.

    இவ்வாறு நீங்கள் உங்கள் துறைகள் மூலம் மேற் கொண்ட மற்றும் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    • தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதேபோல் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    இந்நிலையில் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    • ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது.
    • தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவு எதிரொலியாக தக்காளி விலை உயரத் தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ.120 முதல் 130 வரை உயர்ந்து விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படும் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று ஈரோடு சம்பத் நகர் மற்றும் சத்தியமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பத் நகரில் 250 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் வீற்று தீர்ந்தன. இதேபோல் சத்தியமங்கலத்தில் 150 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் வீற்று தீர்ந்தன.

    நேற்று ஓசூரில் இருந்து விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் இன்று மற்ற பகுதியில் செயல்படும் உழவர் சந்தைகளில் தக்காளி மலிவு விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்திருந்தார்.

    ஆனால் இன்று ஓசூரில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய முடியாததால் தாளவாடியில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்கப்பட்டது. ஆனால் அதே நேரம் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.104-க்கு விற்கப்பட்டது.

    ஈரோடு சம்பத் நகரில் இன்று தோட்டக்கலைத்துறை சார்பாக 150 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இவை சில மணி நேரத்தில் வீற்றுத் தீர்த்து விட்டன. இதேப்போல் சத்தியமங்கலத்திலும் 100 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இன்று முதல் கோபி, பெருந்துறை உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்கப்பட்டது. நாளை ஓசூரில் இருந்து மீண்டும் விவசாயிகளிடமிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டால் விலை குறையும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்துள்ளார்.

    இதேப்போல் ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன.

    இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.110 -க்கு விற்பனை ஆனது. இதே போல் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று புதிய உச்சமாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 150 க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.10 அதிகரித்து ரூ.160-க்கு விற்பனை ஆனது.

    இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்கறிகள் விலை தொடர்ந்து வருவதால் மக்களின் கவனம் இப்போது கீரைகள் மீது திரும்பி உள்ளது. கீரை விலை மலிவாக இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். சிறுகீரை, மிளகு தக்காளி கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, செங்கீரை, முருங்கைக்கீரை ஆகிய கீரை ஒரு கிலோ ரூ.10 -க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் கரிசலாங்கண்ணி கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகிய கீரைகள் ஒரு கிலோ ரூ. 8-க்கு விற்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக கீரை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் எலுமிச்சம் பழம் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காய்கறியின் விலை உயர்வால் பொதுமக்கள் எலுமிச்சம் பழத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு எலுமிச்சம் பழம் ரூ.4 முதல் 7 வரை விற்கப்படுகிறது. தக்காளி, காய்கறி விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தற்போது எலுமிச்சை சாதம், புளி சாதத்திற்கு மாறி உள்ளனர்.

    • அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதன் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.
    • மளிகை பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

    பெரம்பலூர்,

    மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அதிலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களுக்கு இது கலக்கத்தையே உண்டாக்கி விடும். இதன் விளைவு, சமையலில் மளிகை பொருட்களின் அளவு குறையும். அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே காய்கறி-பழங்களின் விலை உயர்வால் நொந்துபோன மக்களுக்கு, மளிகை பொருட்களின் திடீர் விலையேற்றம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவைைய கருதி ஆந்திரா, கேரளா, மராட்டியம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதன் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

    குறிப்பாக துவரம் பருப்பு விலை கடந்த வாரத்தில் கிலோ ரூ.120 அளவில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பை பொறுத்தவரையில் மராட்டியத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது.

    இதுவே துவரம் பருப்பின் விலையேற்றத்துக்கு காரணம். வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் மிளகாய் தூள், சீரகம், சோம்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. போக்குவரத்து, வண்டி -ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

    அரியலூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கூறும் போது:- விலை உயர்வால் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்கறி விளையும் உயர்ந்துள்ள நிலையில், முக்கிய உணவுப் பொருளான அரிசி விலையும் உயர்திருப்பது பொதுமக்களுக்கு சிரமத்தை அளித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் வழக்கமாக வாங்கும் ெபாருட்களின் அளவைவிட குறைவாக வாங்கி செல்கின்றனர். இந்த திடீர் விலை உயர்வை கட்டுப்படுத்தி அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலைகளை குறைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

    • மதுரை காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
    • இஞ்சி விலை ரூ.300, சின்ன வெங்காயம்-ரூ.90..

    மதுரை

    மதுரையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தக்காளி, இஞ்சி உள்ளிட்டவற்றின் விலைகள் பொதுமக்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றன.

    மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படு கிறது. இதனால் ஒட்டன் சத்திரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு வரும்.

    மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்ப னைக்கு வருவது வழக்கம். வெளி மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தற்போது காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மதுரை மார்க்கெட்டு களில் தக்காளியின் விலை கடந்த 2 வாரங்களாக உச்சத்தில் இருந்து வருகிறது உழவர் சந்தைகளில் ரூ.100-ஐ தாண்டி விற்கப்படும் தக்காளி வெளி மார்க்கெட்டுகளில் ரூ.140 வரை விற்பனையாகி வருகிறது. பச்சை மிளகாய் கடந்த சில நாட்களாக கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை சற்று குறைந்து ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது.

    இஞ்சியை பொறுத்த வரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.220-க்கு விற்கப்பட்டது. தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.270-க்கு உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் வெளி மார்க்கெட்டுகளில் இஞ்சியின் விலை ரூ.300-ஐ தாண்டி உள்ளது. தற்போது இஞ்சி சீசன் இல்லை என்பதாலும் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை என்பதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.

    காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அசைவ உணவிற்கு அதிக முக்கியத்து வம் தருவதாகவும், அதற்காக இஞ்சியின் தேவை அதிகரித் துள்ளதாலும் விலை உயர்ந்து வருவதாகவும் சில வியாபாரிகள் கூறுகின்ற னர்.

    மதுரையில் உள்ள உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகள் விலை விவரம் வருமாறு:-

    கத்திரிக்காய்-ரூ.36, முருங்கைக்காய்-ரூ.50, உருளை-ரூ.50, கேரட் -ரூ.70, பட்டர் பீன்ஸ் -ரூ.120, முட்டைக் கோஸ்-ரூ.30, பச்சை மிளகாய்-ரூ.110, சின்ன வெங்காயம்-ரூ.90, பெரிய வெங்காயம்-ரூ.30, பூண்டு-ரூ.200, மல்லி-ரூ.90, கறிவேப்பிலை-ரூ 36 ஆக உள்ளது.

    தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றின் திடீர் விலை உயர்வுக்கு பதுக்கலும் ஒரு காரணம் என்று தெரிய வந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இந்த காய்கறிகளை சில வியாபாரிகள் தங்களது குடோன்களில் அதிக அளவில் பதுக்குவதாகவும் அதனால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுவ தாகவும் புகார் எழுந்துள்ளது.

    எனவே காய்கறிகளின் விலை மேலும் உயராமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி குடோன்களில் தக்காளி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை சோதனை செய்து கண்டறிய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ‘காய்கறி’ விலை கடும் உயர்வால் ‘கறி’க்கு பொதுமக்கள் மாறினர்.
    • இந்த விற்பனையால் இறைச்சி கடைக்காரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மதுரை

    பொதுவாக ஆன்மீகத் திற்கு உகந்ததாக கருதப்படும் கார்த்திகை, மார்கழி மாதங் களில் அசைவ பிரியர்கள் சைவத்திற்கு மாறுவார்கள் என்பதாலும், சபரிமலை யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டும் காய்கறிகளின் விலை உச்சம் தொடும்.

    அதேபோல் சுபமுகூர்த்த நாட்கள் மிகுந்த தை, மாசி வைகாசி, ஐப்பசி மாதங்க–ளில் சராசரியாக காய்கறி–களின் விலை உயரும். மற்ற மாதங்களில் காய்க–றிகளின் விலை குறைவா–கவே இருக் கும்.

    ஆனால் தற்போது வழக் கத்திற்கு மாறாக ஆனி மாதத்தில் காய்கறிகளின் விலை எதிர் பாராத அள–வுக்கு புதிய உச்சம் தொட் டுள்ளது. குறிப்பாக தக்கா–ளியின் விலை 100 ரூபாயை தாண்டி–யுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.

    அதேபோல் சின்ன வெங் காயத்தின் விலையும் 100 எட்டி இல்லத்தரசிகளுக்கு பெரும் சுமையை கொடுத் துள்ளது. இதனால் பெரும் பாலான உணவகங்கள் தக்காளியை தவிர்த்து வருகி–றது. அதேபோல் சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இந்தநிலையில் சைவம், அசைவம் இரண்டையும் சாப்பிடுபவர்கள் அசை–வத்திற்கு தற்போது முழுமை–யாக மாறியுள்ளனர். காய்க–றிகளின் விலையை விட இறைச்சி வகைகளின் விலை குறைவாக இருப்ப–தாக கருத்து தெரிவித்துள்ள அவர்கள் காய்கறிகளின் அபரிமிதமான இந்த விலையேற்றம் தங்களது அன்றாட செலவை இரு–மடங்காக்கி விட்டதாக ஆதங்கத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை விடு–முறை தினமான இன்று காய்கறி மார்க்கெட்டுகள் பெரும்பாலும் வெறிச்சோ–டியே காணப்பட்டன. அதற்கு மாறாக இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே–போல் மீன் விற்பனை–யும் இன்று அமோகமாக இருந் தது.

    மதுரை மாநகரில் நெல் பேட்டை, தெற்குவாசல், கருப்பாயூரணி, நரிமேடு, காளவாசல், மாட்டுத்தா–வணி, பழங்காநத்தம், மக–பூபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடு, மீன் விற்பனை கடை–களில் ஏராளமானோர் குவிந்தனர்.

    இதில் ஆட்டுக்கறியை பொறுத்தவரை எலும்புடன் கிலோ ரூ.700, தனிக்கறி ரூ.800 என்றும், கறிக்கோழி கிலோ ரூ.190, நாட்டுக்கோழி கிலோ ரூ.550 முதல் ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. சராசரியாக ஆட்டு இறைச் சிக்கு ஒரு கடையில் 10 முதல் 15 ஆடுகள் வரை விற் பனையானது.

    அதிரடியான இந்த விற்பனையால் இறைச்சி கடைக்காரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தக்காளி, மிளகாய், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.
    • இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ள ரிக்காய், புடலங்காய், தடி யங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஓசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து தக்காளியும், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கேரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்காக வருகிறது.

    கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் காய்கறிகளின் உற்பத்தி அடியோடு பாதிக் கப்பட்டது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு வரக்கூ டிய காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியது. இதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி, மிளகாய், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    தக்காளி வரத்தை பொறுத்தமட்டில் வழக்கமாக வரக்கூடிய அளவைவிட மிகக்குறைவான அளவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தைக்கு வருகிறது. இதனால் தினமும் தக்காளியின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.100-ஐ தொட்டது.

    இந்த நிலையில் இன்றைய தக்காளி கிலோ ரூ.110-க்கு விற்பனை ஆகி வருகிறது. 28 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி ரூ.3500-க்கு விற்பனையானது. தக்காளி வரத்து குறைவாக உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

    பீன்ஸ் விலையும் கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. மிளகாய் விலை வரலாற்றில் இதுவரை விற்பனை இல்லாத அளவிற்கு கிலோ ரூ.180 ஆக உயர்ந்து காணப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் மிளகாய் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. நாட்டுக்கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டது. இஞ்சி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.80-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் 3 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது. நாகர்கோவில் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி ரூ.110, கேரட் ரூ.90, வழுதலங்காய் ரூ.80, நாட்டு கத்தரிக்காய் ரூ. 120, வரி கத்தரிக்காய் ரூ.60, வெள்ளரிக்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.29, பீன்ஸ் ரூ.130, புடலங்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, மிளகாய் ரூ.150, பூண்டு ரூ.150, இளவன்காய் ரூ.30,

    காய்கறி விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு கடந்த சில நாட்களாக வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. தக்காளி, மிளகாயை பொறுத்தமட்டில் இதுவரை இல்லாத அள விற்கு உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உற்பத்தி குறைந்ததே ஆகும். இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    • காய்கறிகள் மற்றும் பழங்கள் என ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை நடக்கிறது.
    • 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 600 முதல் 645 விவசாயிகள், 145 முதல் 163 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் என ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை நடக்கிறது. இதன் மூலம் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    உழவர் சந்தைகள் தொடர்பாக கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறும்போது, 'உழவர் சந்தையில் காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 485 விவசாயிகள் பழைய அட்டைகளை புதுப்பிக்க ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு நடக்–கிறது. 939 பழைய அட்டைகளின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை 6 ஆயிரத்து 743 கிலோ காய்கறிகள் இருப்பு வைத்து 284 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். நடமாடும் உழவர் சந்தை திட்டத்தில் 6 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கி நான்கு சக்கர வாகனங்களில் காய்கறி, பழங்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகள் மூலமாக ரூ.310 கோடி மதிப்புள்ள 1 லட்சத்து 13 ஆயிரத்து 447 டன் அளவு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளும், 1 கோடியே 10 லட்சத்து 93 ஆயிரம் நுகர்வோரும் பயனடைந்துள்ளனர் என்றார்.

    • அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பசுமை காய்கறிகளை வழங்க வேண்டும்.
    • குழந்தைகள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்கான கட்டிட வசதியை அமைத்துத்தர வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி, அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அமிர்தசரோவர் திட்டத்தின் கீழ் தூர்வாரி, ஆழ்படுத்தப்பட்ட ஊராட்சி குளத்தையும், மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் இயக்குனர் அமுதவல்லி மற்றும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் கட்டிடப் பணிகளை துரிதமாகவும் தரமாகவும் கட்ட வேண்டும்.

    அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பசுமை காய்கறிகளை வழங்க வேண்டும். மேலும் அங்கன்வாடி குழந்தைகள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்கான கட்டிட வசதியை அமைத்து தர வேண்டும் என்றார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், சீர்காழி ஆர்டி.ஓ அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்கு மார், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார்.

    உதவி செய ற்பொறியாளர் சீதாலட்சுமி, ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி,வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் பூர்ணசந்திரன், தாரா, பலராமன், ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி சுப்பையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணராயபுரம் பகுதியில் காய்கறி சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது
    • கத்திரிக்காய் கிலோ 30 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 20 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, புனவாசிப்பட்டி, பாப்பாப்பட்டி, வயலுார், சரவணபுரம், சிவாயம் ஆகிய கிராமங்களில் குறைந்த செலவில் அதிகம் வருமானம் தரக்கூடிய காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கத்திரிக்காய், வெண்டைக்காய் சாகுபடி நடந்துள்ளது. சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. விவசாயிகள் காய்களை பறித்து கரூர், குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். கத்திரிக்காய் கிலோ 30 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 20 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    • நடப்பு நிதியாண்டில் 1,300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இணையதளத்தில் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மானியத்தில் மாடி தோட்டம் அமைக்க, பயனாளிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மாடி தோட்டம் மூலம் காய்கறி உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க நடப்பு நிதியாண்டில் 1,300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ஒரு பயனாளிக்கு 450 ரூபாய் மதிப்பில் காய்கறி வளர்ப்பு பைகள், 2 கிலோ கோகோ பீட், 6 வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, வேப்பெண்ணெய், தொழில் நுட்ப கையேடு, பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் அந்தந்தவட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

    திட்ட விபரங்களுக்கு கீழ்க்கண்டவட்டார தோட்டக்கலை உதவிஇயக்கு நர்களை தொடர்பு கொள்ள வேண்டும். தஞ்சாவூர் மற்றும் பூதலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9943422198. ஓரத்தநாடு மற்றும் திருவோணம் தோட்டக்கலை உதவி இயக்குநர் -9488945801.

    பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் தோட்டக்கலை உதவி இயக்குநர்- 9597059469.

    கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் உதவி இயக்குநர்- -9842569664.

    பாபநாசம், அம்மாப்பேட்டை மற்றும் திருவையாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் -9445257303.

    பேராவூரணி மற்றும் சேதுபா வாசத்திரம் தோட்ட க்கலை உதவி இயக்குநர் 8903431728 ஆகிய செல்போன் எண்களில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×