search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீன்ஸ்"

    • கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு, முருக்கோடை, முத்தாலம்பாறை, தொப்பையாபுரம், அருகவெலி, உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், அவரை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • சீசன் தொடங்க உள்ள நிலையில் பீன்ஸ், அவரை கொடிகளில் மஞ்சள் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு, முருக்கோடை, முத்தாலம்பாறை, தொப்பையாபுரம், அருகவெலி, உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், அவரை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்க உள்ள நிலையில் பீன்ஸ், அவரை கொடிகளில் மஞ்சள் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நோய் தாக்கப்பட்ட கொடிகளில் இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி தானாக உதிர்ந்து கீழே விழுந்து விடுகிறது. விவசாயிகள் பல்வேறு மருந்துகளை தெளித்து கொடிகளை பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் எந்தவித மருந்துக்கும் கட்டுப்படாமல் மஞ்சள் நோய் வேகமாக பரவி வருகிறது.

    இதுதொடர்பாக பாதிப்படைந்த விவசாயிகள் கூறுகையில் - வருடம் தோறும் நவம்பர்,டிசம்பர், மாதங்களில் அதிக அளவில் பீன்ஸ், அவரை உள்ளிட்ட விவசாயம் நடைபெறும். ஆனால் ஆண்டுதோறும் மஞ்சள் நோய் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவி வருகிறது.

    இதனால் விவசாயி களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளா ண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மஞ்சள் நோயை கட்டுப்ப டுத்த வேண்டும். மற்றும் பாதிப்படைந்த விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • இஞ்சி முன் எப்போதும் இல்லாத அளவில் வரலாறு காணாத அளவுக்கு விலை ஏறி உள்ளது.
    • பீன்ஸ் கிலோ ரூ.110, பச்சை மிளகாய் கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சாவூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி, மளிகை பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகிறது. இன்று தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தான் உயர்ந்து காணப்பட்டது என்றால் தற்போது அந்த வரிசையில் பீன்ஸ், பச்சை மிளகாய் ,இஞ்சி ஆகியவையம் சேர்ந்துள்ளது. இதனால் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதே பொதுமக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

    இதில் இஞ்சி முன் எப்போதும் இல்லாத அளவில் வரலாறு காணாத அளவுக்கு விலை ஏறி உள்ளது. இன்று கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. பீன்ஸ் கிலோ ரூ.110, பச்சை மிளகாய் கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்கப்பட்டன. இதே போல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.30, கத்தரிக்காய் ரூ.60 முதல், கேரட் ரூ.70, சவ்சவ் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.35 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் ,பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். காய்கறிகளின் விலை குறைந்து எப்போது நாம் நிம்மதியாக நிறைவாக சமையல் செய்வோம் என்ற எதிர்பார்ப்புடன் இல்லத்தரசிகள் உள்ளனர்.

    காய்கறிகளின் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது:-

    பருவம் தவறி பெய்த மழை மற்றும் கடுமையான வெப்பத்தின் காரணமாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது . இதேபோல் இஞ்சி, பச்சைமிளகாய் விளைச்சலும் வழக்கத்தை விட மிகக் குறைவாக இருந்தன. இதனால் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தஞ்சைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைவாகவே காணப்பட்டு வருகிறது.

    இப்படி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவால் அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன.

    இன்னும் இரண்டு வாரத்திற்கு இந்த நிலைதான் நீடிக்கும். அதன் பிறகு வரத்து அதிகமான உடன் காய்கறி விலை குறைய தொடங்கும் என்றனர்.

    • தக்காளி, மிளகாய், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.
    • இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ள ரிக்காய், புடலங்காய், தடி யங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஓசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து தக்காளியும், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கேரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்காக வருகிறது.

    கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் காய்கறிகளின் உற்பத்தி அடியோடு பாதிக் கப்பட்டது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு வரக்கூ டிய காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியது. இதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி, மிளகாய், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    தக்காளி வரத்தை பொறுத்தமட்டில் வழக்கமாக வரக்கூடிய அளவைவிட மிகக்குறைவான அளவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தைக்கு வருகிறது. இதனால் தினமும் தக்காளியின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.100-ஐ தொட்டது.

    இந்த நிலையில் இன்றைய தக்காளி கிலோ ரூ.110-க்கு விற்பனை ஆகி வருகிறது. 28 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி ரூ.3500-க்கு விற்பனையானது. தக்காளி வரத்து குறைவாக உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

    பீன்ஸ் விலையும் கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. மிளகாய் விலை வரலாற்றில் இதுவரை விற்பனை இல்லாத அளவிற்கு கிலோ ரூ.180 ஆக உயர்ந்து காணப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் மிளகாய் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. நாட்டுக்கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டது. இஞ்சி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.80-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் 3 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது. நாகர்கோவில் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி ரூ.110, கேரட் ரூ.90, வழுதலங்காய் ரூ.80, நாட்டு கத்தரிக்காய் ரூ. 120, வரி கத்தரிக்காய் ரூ.60, வெள்ளரிக்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.29, பீன்ஸ் ரூ.130, புடலங்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, மிளகாய் ரூ.150, பூண்டு ரூ.150, இளவன்காய் ரூ.30,

    காய்கறி விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு கடந்த சில நாட்களாக வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. தக்காளி, மிளகாயை பொறுத்தமட்டில் இதுவரை இல்லாத அள விற்கு உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உற்பத்தி குறைந்ததே ஆகும். இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    • தக்காளி ரூ.50-க்கு விற்பனை
    • சின்ன வெங்காயம் ரூ.75, பாகற்காய் ரூ.80-க்கு விற்பனையானது.

    :நாகர்கோவில் 

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    வெள்ளரிக்காய், புடலங்காய், தடியங்காய், பூசணிக்காய், வெண்டைக்காய் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக வருகிறது. தக்காளி பெங்களூரில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேட்டுப்பாளையம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது.

    கடந்த சில நாட்களாக காய்கறி வரத்துகுறைய தொடங்கியதையடுத்து காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி, பீன்ஸ், கேரட், மிளகாய், விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது. பீன்ஸ், மிளகாயின் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ பீன்ஸ் இன்று ரூ.110-க்கும், மிளகாய் ரூ.120-க்கும் விற்பனையானது.

    தக்காளியின் விலையும் தினமும் உயர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரூ.25-க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை 2 மடங்கு உயர்ந்து இன்று ரூ.50-க்கு விற்பனையானது. இஞ்சியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று இஞ்சியின் விலை ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம், சேனை விலையும் அதிகரித்து வருகிறது. சேனை கிலோ ரூ.70-க்கு விற்பனையானது. மார்க்கெட்டில் இன்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி ரூ.50, வழுதலங்காய் ரூ.80, கத்தரிக்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.25, வெண்டைக்காய் ரூ.50, வெள்ளரிக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.35, பல்லாரி ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.30, மிளகாய் ரூ.120, பின்ஸ் ரூ.110, கேரட் ரூ.80, சேனை ரூ.70, இஞ்சி ரூ.200, சின்ன வெங்காயம் ரூ.75, பாகற்காய் ரூ.80-க்கு விற்பனையானது.

    காய்கறிகளின் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், உள்ளூரிலிருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. வெளியூர்களில் இருந்தும் குறைவான அளவில் காய்கறிகள் விற்பனைக்கு வருவதால் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. இன்னும் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.

    • வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    கோயம்பேடு சந்தைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவு இஞ்சி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் இஞ்சி வரத்து மேலும் குறைந்ததால் அதன் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ இஞ்சி மொத்த விற்பனை கடைகளில் ரூ.200-க்கு விற்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து இஞ்சி வியாபாரி ஒருவர் கூறும்போது, "கடந்த 2 ஆண்டுகளாக இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி சாகுபடியை நிறுத்திவிட்டனர். இதனால்தான் இஞ்சி வரத்து குறைந்தது. இந்த விலை உயர்வு மேலும் சில நாள்கள் வரை நீடிக்கும்" என்றார். இதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் கிலோ பீன்ஸ் ரூ.90-க்கு விற்பனை ஆனது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

    • கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் மாலூர் மற்றும் வி.கோட்டா ஆகிய பகுதிகளில் இருந்து பீன்ஸ் விற்பனைக்கு வருகிறது.
    • கடந்த சில நாட்களாகவே அதன் வரத்து பாதியாக குறைந்ததால் பீன்ஸ் விலை திடீரென அதிகரித்தது.

    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் மாலூர் மற்றும் வி.கோட்டா ஆகிய பகுதிகளில் இருந்து பீன்ஸ் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை தினசரி 1,200மூட்டைகளில் சுமார் 80டன் அளவுக்கு பீன்ஸ் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அதன் வரத்து பாதியாக குறைந்ததால் பீன்ஸ் விலை திடீரென அதிகரித்தது. இன்று 600 மூட்டைகளில் மட்டுமே பீன்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது. வரத்து குறைந்து தேவை அதிகரித்து உள்ளதால் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90-க்கு விற்பனை ஆனது. அதேபோல் வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120 வரை விற்கப்படுகிறது.

    • வரத்து குறைவால் அவரைக்காய் மற்றும் இஞ்சி விலையும் அதிகரித்து உள்ளது.
    • உற்பத்தி அதிகம் காரணமாக கடந்த சில நாட்களாகவே தினசரி 55 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்து குவிந்து வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. தினசரி 70டன் வரை வந்து கொண்டிருந்த பீன்ஸ் தற்போது பாதியாக குறைந்து 40டன் அளவுக்கு மட்டுமே விற்பனைக்கு வருகிறது இதனால் அதன் விலை அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120 வரையிலும் விற்கப்படுகிறது.

    இதேபோல் வரத்து குறைவால் அவரைக்காய் மற்றும் இஞ்சி விலையும் அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் அவரைக்காய் ஒரு கிலோ ரூ.60-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    உற்பத்தி அதிகம் காரணமாக கடந்த சில நாட்களாகவே தினசரி 55 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்து குவிந்து வருகிறது.

    இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து தக்காளி ஒரு கிலோ ரூ.6 முதல் ரூ.9 வரை விற்கப்பட்டு வருகிறது.

    • பொள்ளாச்சியில் காய்கறி மார்கெட்கள் உள்ளது.
    • ய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டடு விற்பனையாகி வருகிறது.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் காய்கறி மார்கெட்கள் உள்ளன இந்த மார்க்கெட்டு களுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோபா லபுரம், ஆனை மலை, வேட்டைக்காரன்புதூர் போன்ற உள்ளூர் பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டடு விற்பனையாகி வருகிறது.

    தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, பச்சை மிளகாய் போன்றவை பொள்ளாச்சி சுற்றுப்பகுதி களிலேயே உற்பத்தி நடைபெற்று வருகிறது. கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காளிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலையில் உள்ள பகுதிகளில் நன்கு வளரும் என்பதால் ஊட்டி, மேட்டுப்பாளையம், குன்னூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதனால், அந்த பகுதிகளில் இருந்து பொள்ளாச்சிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவில் பீன்ஸ், கேரட் பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு வரத்து இருந்தது. ஏப்ரல், மே மாதங்களில் கேரட் ரூ.24 முதல் 30 வரையிலும் விற்கப்பட்டது. ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்ததால் பீன்ஸ், கேரட் விவசாயம் பாதிக்கப்பட்டது.

    இதனால், ஜூலை மாதத்தில் இருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு பீன்ஸ், கேரட் வரத்து குறைந்தது. இதனால், விலை அதிகரித்து ரூ.90 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    • கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வெளியூர்களில் பீன்ஸ் சாகுபடி அதிகமாக காணப்பட்டது.
    • வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் அதனை ரூ.25 முதல் 30 வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அதிகளவில் வருகிறது.

    இதில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

    கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வெளியூர்களில் பீன்ஸ் சாகுபடி அதிகமாக காணப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மற்றும் மே என சில மாதமாக அறுவடை செய்யப்பட்ட பீன்ஸ் மார்க்கெட்டுக்கு அதிகமாக கொண்டு வரப்பட்டது.

    வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் அதனை ரூ.25 முதல் 30 வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர். தற்போது பல மாவட்டங்களில் மழைப்பொழிவு இருப்பதால் பீன்ஸ் சாகுபடி சற்று குறைந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில வாரங்களாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பீன்ஸ் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நேற்று மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.85 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    ×