search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஞ்சி"

    • தற்போது ஒரு கிலோ இஞ்சி ரூ.110 முதல் அதிகபட்சமாக ரூ.225 வரை விற்கப்பட்டு வருகிறது.
    • அடுத்த சில வாரங்களில் இஞ்சி அதிகளவில் சாகுபடி செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு உள்ளூர் விவசாயிகள் தங்கள் தோட்டம் மற்றும் விளை நிலங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    கோவை மார்க்கெட் மற்றும் காய்கறி சந்தைகளில் இஞ்சி விலை கிடுகிடுவென அதிகரித்தது.

    தற்போதும் ஒரு கிலோ இஞ்சி ரூ.110 முதல் அதிகபட்சமாக ரூ.225 வரை விற்கப்பட்டு வருகிறது.

    கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் கொடைக்கானல், ஊட்டி பகுதியில் இருந்து வரும் பச்சை பட்டாணி ரூ.110 முதல் ரு.194 வரையும், ஊட்டி அவரை ரு.110 முதல் ரூ.120 வரையும், சுண்டைக்காய் ரு.120 முதல் ரூ.150 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கோவை மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், கோவையில் தற்போது வெயில் அதிகளவில் உள்ளதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவை மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது.

    கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களில் இஞ்சி அதிகளவில் சாகுபடி செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது இஞ்சியின் விலை கட்டுக்குள் வந்து விடும் என்று தெரிவித்தனர்.

    • எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தம் குறையும்.
    • பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

    பித்தம் என்பது உடல் உஷ்ணமாகும். கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கக்கூடிய நீர் தான் பித்த நீர். இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இது உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது.

    பித்தம் உடலில் சரியாக இருந்தால் தான் நன்றாக பசி எடுக்கும், உணவு நன்றாக செரிமானம் ஆகும். பித்தம் அதிகமானால் உதடு, உள்ளங்கை, உள்ளங்காலில் வெடிப்பு ஏற்படும். உடல் வறட்சியாக இருக்கும். தோல் கடினமானதாக மாறும். நாக்கு வறட்சியாக காணப்படும். வாய் கசப்பு தன்மை உடையதாக இருக்கும், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்ணும் போது உடலில் பித்தம் அதிகமாகும். காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் அடைய தாமதமாகும். இதனால் உடலில் அதிகளவு பித்தம் சுரக்கப்படும். அதிக எண்ணெய் தன்மையுள்ள உணவுகள் உண்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

    பித்தத்தை குறைக்கும் உணவு முறைகள்

    * இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

    * இஞ்சி சாறு, வெங்காய சாறு இவற்றுடன் தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

    * மாம்பழத்தை பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

    * எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தம் குறையும்.

    * ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

    * பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தம் தீரும்.

    * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

    * அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

    * பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

    * கமலாப்பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணம் தணியும்.

    * நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

    * எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

    * அரசமர குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

    • இஞ்சி முன் எப்போதும் இல்லாத அளவில் வரலாறு காணாத அளவுக்கு விலை ஏறி உள்ளது.
    • பீன்ஸ் கிலோ ரூ.110, பச்சை மிளகாய் கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சாவூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி, மளிகை பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகிறது. இன்று தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தான் உயர்ந்து காணப்பட்டது என்றால் தற்போது அந்த வரிசையில் பீன்ஸ், பச்சை மிளகாய் ,இஞ்சி ஆகியவையம் சேர்ந்துள்ளது. இதனால் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதே பொதுமக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

    இதில் இஞ்சி முன் எப்போதும் இல்லாத அளவில் வரலாறு காணாத அளவுக்கு விலை ஏறி உள்ளது. இன்று கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. பீன்ஸ் கிலோ ரூ.110, பச்சை மிளகாய் கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்கப்பட்டன. இதே போல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.30, கத்தரிக்காய் ரூ.60 முதல், கேரட் ரூ.70, சவ்சவ் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.35 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் ,பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். காய்கறிகளின் விலை குறைந்து எப்போது நாம் நிம்மதியாக நிறைவாக சமையல் செய்வோம் என்ற எதிர்பார்ப்புடன் இல்லத்தரசிகள் உள்ளனர்.

    காய்கறிகளின் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது:-

    பருவம் தவறி பெய்த மழை மற்றும் கடுமையான வெப்பத்தின் காரணமாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது . இதேபோல் இஞ்சி, பச்சைமிளகாய் விளைச்சலும் வழக்கத்தை விட மிகக் குறைவாக இருந்தன. இதனால் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தஞ்சைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைவாகவே காணப்பட்டு வருகிறது.

    இப்படி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவால் அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன.

    இன்னும் இரண்டு வாரத்திற்கு இந்த நிலைதான் நீடிக்கும். அதன் பிறகு வரத்து அதிகமான உடன் காய்கறி விலை குறைய தொடங்கும் என்றனர்.

    • நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.
    • மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது.

    இங்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் ஏல முறையில் காய்கறிகளை விலைக்கு வாங்கி வியாபாரிகள் விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர்.

    இந்த மொத்த காய்கறி மண்டிக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், நூல்கோல், டர்னீப், முள்ளங்கி, முட்டைகோஸ், சேனைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது.

    இதில் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் இஞ்சி தரம் பிரிக்கப்பட்டு, தரத்திற்கு ஏற்பட விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கும், குறைந்த பட்சமாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    கடந்த வாரத்தை காட்டிலும் இஞ்சி வரத்து குறைவாக இருப்பதால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    கடந்த வாரத்தில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.8,750க்கு விற்பனையானது. தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தற்போது 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கு விற்பனையானது. அதேபோல தரம் குறைந்த இஞ்சி குறைந்தபட்ச அளவாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மருத்துவ குணம் மிக்க இஞ்சியின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • கர்நாடகா மாநிலத்தில் இருந்து தான் நாடு முழுவதும் இஞ்சி சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
    • ஜூலை மாதம் அறுவடை செய்யப்பட்டு புது இஞ்சி விற்பனைக்கு வரத் தொடங்கியதும் இஞ்சியின் விலை படிப்படியாக குறையும்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் மைசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இஞ்சி விற்பனைக்கு வருகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் மொத்த விற்பனையில் ஒரு மூட்டை (60 கிலோ) இஞ்சி ரூ.3 ஆயிரத்துக்கு விற்றது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ இஞ்சி ரூ.70-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் படிப்படியாக அதிகரிக்க தொடங்கிய இஞ்சியின் விலை கடந்த வாரம் புதிய உச்சமாக ஒரு மூட்டை இஞ்சி ரூ.10ஆயிரத்து 300 வரை எகிறியது. இன்று கோயம்பேடு மார்கெட்டில் ஒரு மூட்டை இஞ்சி ரூ.9 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    மேலும் இஞ்சியின் வரத்தும் குறைந்ததால் அதன் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. இஞ்சி தட்டுப்பாடும் நிலவுகிறது. இதன் காரணமாக சில்லறை விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ இஞ்சி ரூ.240 வரை விற்பனை ஆனது. இந்த விலை உயர்வு கடந்த ஒரு மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இஞ்சி விலை அதிகரித்து உள்ளதால் பெரும்பாலான கடைகளில் இஞ்சி டீ போடுவதையே நிறுத்திவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து இஞ்சி மொத்த வியாபாரி ரெஜீஷ் கூறியதாவது:-

    கர்நாடகா மாநிலத்தில் இருந்து தான் நாடு முழுவதும் இஞ்சி சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் தொடர்ந்து இஞ்சி பயிரிடுவதை நிறுத்திவிட்டனர்.

    தற்போது குறைந்த விவசாயிகள் மட்டுமே இஞ்சியை உற்பத்தி செய்து வருவதால் தட்டுப்பாடு ஏற்பட்டு இஞ்சியின் விலை திடீரென 3 மடங்காக அதிகரித்து உள்ளது. ஜூலை மாதம் அறுவடை செய்யப்பட்டு புது இஞ்சி விற்பனைக்கு வரத் தொடங்கியதும் இஞ்சியின் விலை படிப்படியாக குறையும்.

    கோயம்பேடு மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.200-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெளி மார்கெட்டில் உள்ள கடைகளில் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    கோயம்பேடு சந்தைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவு இஞ்சி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் இஞ்சி வரத்து மேலும் குறைந்ததால் அதன் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ இஞ்சி மொத்த விற்பனை கடைகளில் ரூ.200-க்கு விற்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து இஞ்சி வியாபாரி ஒருவர் கூறும்போது, "கடந்த 2 ஆண்டுகளாக இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி சாகுபடியை நிறுத்திவிட்டனர். இதனால்தான் இஞ்சி வரத்து குறைந்தது. இந்த விலை உயர்வு மேலும் சில நாள்கள் வரை நீடிக்கும்" என்றார். இதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் கிலோ பீன்ஸ் ரூ.90-க்கு விற்பனை ஆனது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக இஞ்சி வரத்து குறைந்து விட்டது. இதனால் விலை அதிகரித்து உள்ளது.
    • இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் விரக்தி அடைந்த பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி உற்பத்தி செய்வதையே நிறுத்திவிட்டனர்.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிக அளவு இஞ்சி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று இஞ்சி வரத்து மேலும் குறைந்ததால் அதன் விலை இன்று புதிய உச்சம் தொட்டது.

    ஒரு கிலோ இஞ்சி மொத்த விற்பனை கடைகளில் ரூ.200-க்கு விற்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.240வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இஞ்சி வியாபாரி ஒருவர் கூறும்போது, 'கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக இஞ்சி வரத்து குறைந்து விட்டது. இதனால் விலை அதிகரித்து உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்ட இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் விரக்தி அடைந்த பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி உற்பத்தி செய்வதையே நிறுத்திவிட்டனர். இதனால் இஞ்சிக்கு தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு வரும் நாட்களிலும் தொடர்ந்து நீடிக்கும்' என்றார்.

    இதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-க்கு விற்பனை ஆனது. சில்லரை கடைகளில் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.

    • இரு வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.60 முதல் 70 வரை மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இஞ்சி, தற்போது கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • சில்லரை விற்பனையில் கிலோ ரூ.125 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு சந்தையில் இஞ்சி வரத்து குறைவு காரணமாக சில்லரை விற்பனையில் கிலோ ரூ.125 முதல் ரூ.140 வரை விற்பனையானது.

    இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உதகை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், கர்நாடக மாநிலம் மைசூரு, ஹசன், கேரளத்தின் தேக்கடி, ஆலப்புழா ஆகிய இடங்களில் அதிக அளவில் இஞ்சி பயிரிடப்படுகிறது. மார்ச் 2-வது வாரத்தில் இஞ்சி அறுவடைக்காலம் முடிந்து விடும். ஏப்ரல் மாதம் முழுவதும் இஞ்சியின் நடவு காலம் என்பதால் அதன் வரத்து குறைந்து உள்ளது.

    இரு வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.60 முதல் 70 வரை மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இஞ்சி, தற்போது கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.125 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் கடந்த மாதம் வரை தினமும் 250 லாரிகளுக்கும் குறைவாக வரத்து உள்ளது. இதனால் விலையும் அதிகரித்துள்ளது. இதே போல் தமிழகத்தின் பெரிய சந்தைகளான சென்னை கோயம்பேடு, மதுரை மாட்டு தாவணி, ஒட்டன்சத்திரம், தலைவாசல், வடசேரி ஆகிய காய்கறி சந்தைகளிலும் இஞ்சி வரத்து குறைந்து உள்ளது. இந்த விலை உயர்வு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றனர்.

    ×