search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை கிடுகிடு உயர்வு"

    • தக்காளி ரூ.50-க்கு விற்பனை
    • சின்ன வெங்காயம் ரூ.75, பாகற்காய் ரூ.80-க்கு விற்பனையானது.

    :நாகர்கோவில் 

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    வெள்ளரிக்காய், புடலங்காய், தடியங்காய், பூசணிக்காய், வெண்டைக்காய் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக வருகிறது. தக்காளி பெங்களூரில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேட்டுப்பாளையம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது.

    கடந்த சில நாட்களாக காய்கறி வரத்துகுறைய தொடங்கியதையடுத்து காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி, பீன்ஸ், கேரட், மிளகாய், விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது. பீன்ஸ், மிளகாயின் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ பீன்ஸ் இன்று ரூ.110-க்கும், மிளகாய் ரூ.120-க்கும் விற்பனையானது.

    தக்காளியின் விலையும் தினமும் உயர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரூ.25-க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை 2 மடங்கு உயர்ந்து இன்று ரூ.50-க்கு விற்பனையானது. இஞ்சியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று இஞ்சியின் விலை ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம், சேனை விலையும் அதிகரித்து வருகிறது. சேனை கிலோ ரூ.70-க்கு விற்பனையானது. மார்க்கெட்டில் இன்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி ரூ.50, வழுதலங்காய் ரூ.80, கத்தரிக்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.25, வெண்டைக்காய் ரூ.50, வெள்ளரிக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.35, பல்லாரி ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.30, மிளகாய் ரூ.120, பின்ஸ் ரூ.110, கேரட் ரூ.80, சேனை ரூ.70, இஞ்சி ரூ.200, சின்ன வெங்காயம் ரூ.75, பாகற்காய் ரூ.80-க்கு விற்பனையானது.

    காய்கறிகளின் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், உள்ளூரிலிருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. வெளியூர்களில் இருந்தும் குறைவான அளவில் காய்கறிகள் விற்பனைக்கு வருவதால் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. இன்னும் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.

    • ஒரு சில காய்கறிகள், பழங்கள் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே விளையும்.
    • முட்டைகோசை விட பல மடங்கு சிறியதாக இருக்கும். இதனை ஜுனியர்’ கோஸ் என்றும் அழைக்கின்றனர்.

    ஊட்டி,

    அசைவ உணவின் சுவைக்கு ஈடு கொடுக்கும் சில காய்கறி களின் வருகையால், சைவ பிரியர்கள் குஷி அடைந்து ள்ளனர்.

    ஒரு சில காய்கறிகள், பழங்கள் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே விளையும். மீண்டும் அவற்றை சுவைக்க அடுத்த சீசன் வரை காத்திருக்க வேண்டும்.

    ஆனால், விவசாய புரட்சி காரணமாக அனைத்து வகை காய்கறிகள், பழங்களையும் ஆண்டு முழுவதும், நினைத்த நேரத்தில் விளைவித்து சுவைத்து மகிழ முடிகிறது.

    வீரிய விதைகள் மற்றும் வெளிநாட்டு விதைகள் மூலம், புதுரக காய்கறிகளும் தமிழகத்தில் விளைவிப்பது அதிகரித்து வருகிறது.

    வெளிநாடுகளில் குளிர்பிரதேசங்களில் விளையும் காய்கறிகள், தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கா னலில் விளைவிக்க ப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

    அந்த வகையில் அசைவ உணவின் சுவைதரும் கிளை கோஸ் நீலகிரி மாவட்ட பகுதிகளில் அதிகளவில் விளைவி க்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான முட்டைகோசை விட பல மடங்கு சிறியதாக இருக்கும். இதனை ஜுனியர்' கோஸ் என்றும் அழைக்கின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் இந்த கோஸ் ஊட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து வெளிமாவட்ட வியாபாரிகளும் இதனை வாங்கி செல்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ கிளை கோஸ் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாகி வந்தது.

    தற்போது கிளை கோஸ் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக விலையும் உயர்ந்துள்ளது. அதுவும் வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து இருக்கிறது. அதன்படி ஊட்டி மார்க்கெட்டில் ஒரு கிலோ கிளை கோஸ் நேற்று ரூ.500முதல் ரூ.550 வரை விற்பனையானது.

    • பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது.
    • நாமக்கல் மாவட்டம் பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, காக்கட்டான், ரோஜா, செவ்வந்தி, அரளி, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.900-க்கும், சம்பங்கி கிலோ ரூ.80-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ.120-க்கும், முல்லைப் பூ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.70-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், காக்கட்டான் ரூ. 400-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.2000-க்கும், சம்பங்கி கிலோ ரூ120-க்கும், அரளி கிலோ ரூ.240-க்கும், ரோஜா கிலோ ரூ.250-முல்லைப் பூ கிலோ ரூ.1400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.140-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், காக்கட்டான் ரூ.1000-த்திற்கும் ஏலம் போனது.

    பனிப்பொழிவு காரண மாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால், விலை‌ உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

    ×