search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளிக்கு தொடரும் கிராக்கி
    X

    மதுரை காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளிக்கு தொடரும் கிராக்கி

    • மதுரை காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
    • இஞ்சி விலை ரூ.300, சின்ன வெங்காயம்-ரூ.90..

    மதுரை

    மதுரையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தக்காளி, இஞ்சி உள்ளிட்டவற்றின் விலைகள் பொதுமக்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றன.

    மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படு கிறது. இதனால் ஒட்டன் சத்திரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு வரும்.

    மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்ப னைக்கு வருவது வழக்கம். வெளி மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தற்போது காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மதுரை மார்க்கெட்டு களில் தக்காளியின் விலை கடந்த 2 வாரங்களாக உச்சத்தில் இருந்து வருகிறது உழவர் சந்தைகளில் ரூ.100-ஐ தாண்டி விற்கப்படும் தக்காளி வெளி மார்க்கெட்டுகளில் ரூ.140 வரை விற்பனையாகி வருகிறது. பச்சை மிளகாய் கடந்த சில நாட்களாக கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை சற்று குறைந்து ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது.

    இஞ்சியை பொறுத்த வரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.220-க்கு விற்கப்பட்டது. தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.270-க்கு உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் வெளி மார்க்கெட்டுகளில் இஞ்சியின் விலை ரூ.300-ஐ தாண்டி உள்ளது. தற்போது இஞ்சி சீசன் இல்லை என்பதாலும் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை என்பதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.

    காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அசைவ உணவிற்கு அதிக முக்கியத்து வம் தருவதாகவும், அதற்காக இஞ்சியின் தேவை அதிகரித் துள்ளதாலும் விலை உயர்ந்து வருவதாகவும் சில வியாபாரிகள் கூறுகின்ற னர்.

    மதுரையில் உள்ள உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகள் விலை விவரம் வருமாறு:-

    கத்திரிக்காய்-ரூ.36, முருங்கைக்காய்-ரூ.50, உருளை-ரூ.50, கேரட் -ரூ.70, பட்டர் பீன்ஸ் -ரூ.120, முட்டைக் கோஸ்-ரூ.30, பச்சை மிளகாய்-ரூ.110, சின்ன வெங்காயம்-ரூ.90, பெரிய வெங்காயம்-ரூ.30, பூண்டு-ரூ.200, மல்லி-ரூ.90, கறிவேப்பிலை-ரூ 36 ஆக உள்ளது.

    தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றின் திடீர் விலை உயர்வுக்கு பதுக்கலும் ஒரு காரணம் என்று தெரிய வந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இந்த காய்கறிகளை சில வியாபாரிகள் தங்களது குடோன்களில் அதிக அளவில் பதுக்குவதாகவும் அதனால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுவ தாகவும் புகார் எழுந்துள்ளது.

    எனவே காய்கறிகளின் விலை மேலும் உயராமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி குடோன்களில் தக்காளி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை சோதனை செய்து கண்டறிய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×