search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் தகவல்"

    • மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டு நிதிஒதுக்கீடு செய்து அர சாணை வெளியிட ப்பட்டுள்ளது.
    • சமூகநல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாநிலம் மற்றும் மாவட் ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவி லான கூட்டமைப்புகள் , வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பகுதி அளவிலா கூட்ட மைப்புகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசால் வழங்க ப்படும் மணிமேகைல விருது வழங்குவதற்கான அறி விப்பை வெளியிடப்பட்டு நிதிஒதுக்கீடு செய்து அர சாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கி ராம வறுைமஒழிப்புசங்கம், வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமை ப்புகள் முறையான கூட்டம் நடத்தல், சேமிப்பு செய்ததை முறையாகபயன்படுத்தல், வங்கிகடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதாரமேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சிபெற்றிருத்தல், சமூகநல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்ற அடிப்படையில்தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேலும் மணிமேகலை விருதிற்கு விண்ணப்பி ப்பதற்கான தகுதிகள் மற்றுமதிப்பீட்டு காரணிகள் குறித்த விவரங்களை தொடர்பு டைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக்கொ ள்ள லாம். விருதிற்குதகுதியான சமுதாய அமைப்புகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில்25-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் எனகள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்தெரிவித்துள்ளார்.

    • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயத்திற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடுக் கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.

    விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயத்திற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி, ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வழங்கப்படும்.

    பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை, ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதத்தில் வழங்கப்படும்.

    நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும், ஆண்டு வட்டி 4 சதவீதம் என வழங்கப்படுகிறது.

    மகளிர் மற்றும் ஆண்கள் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டி ருக்க வேண்டும்.

    ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் வரை, ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

    கடன் பெற விருப்பமுள்ள வர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டைமற்றம் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (அறை எண்.13), கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று, உரிய ஆவண ங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது.
    • பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம், ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் கடந்த 25-ந் தேதி தொடங்கி வரும் 31-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.

    அதன்படி கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, ஈரோடு மற்றும் நம்பியூர் ஆகிய வட்டங்களில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 29-ந் தேதி வரையிலும், தாளவாடி வட்டத்தில் 25-ந் தேதி அன்றும், அந்தியூர் வட்டத்தில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 30-ந் தேதி வரையிலும், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 31-ந் தேதி வரையிலும் (சனி, ஞாயிறு நாட்கள் நீங்கலாக) அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

    அதனால் வரும் 29-ந் தேதி (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வேலையற்ற இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, தமிழக அரசினால் கடன், மானியம் மற்றும் வயது வரம்பு உயர்த்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வியாபார சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு அதிகபட்சம் ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, மாநில அரசால் 25 சதவீத மானியம் அதிகபட்ச மாக ரூ.3.75 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும்.
    • வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்க்குள் இருக்க வேண்டும்.

    வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பி டச் சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று, ஜாதிச் சான்று, விண்ணப்பதாரரின் வண்ண புகைப்படம் - 2, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண்.30சி வ.உ.சி. நகர், 5-வது தெரு, கச்சிராப்பாளையம் ரோடு, கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    • சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
    • இந்த தகவலை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    திட்டம்1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1லட்சத்து 20ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புற மாயிருப்பின் ரூ.98ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம்2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.

    திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20லட்சமும், திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5சதவீதம், பெண்களுக்கு 4சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

    திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8சதவீதமும், பெண்களுக்கு 6சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சத்து 50ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம்-2ன் கீழ் மாணவர்களுக்கு 8சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    எனவே மதுரை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மைச்சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, ெசலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து சிறுபான்மையினர் இனத்தைச்சார்ந்த மக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • சமையல் பொறுப்பாளர் பணியானது முற்றிலும் தற்காலிகமானது.
    • ஆரோக்கியமான சமையலை சுகாதாரமான முறையில் செய்வது குறித்து முறையாக வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் (விரிவாக்கம்) கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    இதனை தொடர்ந்து, அனைத்து ஊரக, பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராகவும் மற்றும் அதேப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோராகவும் உள்ள 3 பெண்கள் சமையல் பொறுப்பாளராக முதன்மை குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேற்படி சமையல் பொறுப்பாளர் பணியானது முற்றிலும் தற்காலிகமானது. மேலும் அவர்களது குழந்தைகள் 5-ம் வகுப்பை தாண்டியவுடன் சமையல் பொறுப்பாளர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.

    எனவே மேற்படி சமையல் பொறுப்பாளர் தேர்வு செய்யப்படுவதில் தகுதியற்ற நபர்கள் என எவரேனும் கண்டறியப்பட்டாலோ, கையூட்டு பெறுவதாக புகார் ஏதேனும் பெறப்பட்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    மேலும் முதன்மை குழு மூலமாக தேர்வு செய்யப்பட்ட சமையல் பொறுப்பாளர் அனைவருக்கும், ஆரோக்கியமான சமையலை சுகாதாரமான முறையில் செய்வது குறித்து முறையாக வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்படும்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் முதற் கட்டமாக 1.6.2023 அன்றும், 2-ம் கட்டமாக 15.6.2023 அன்றும் செயல் படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 வரையும் பயிற்சியளிக்கப்படும்.
    • இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்ட ரங்கத்தில் 8-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை கோடை கால பயிற்சி முகாம் நடை பெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். தடகளம், கைப்பந்து, கபடி, கால்பந்து, வாலிபால், மல்லர்கம்பம், கூடைப்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டு களில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முகாமில் 10 வயதிற்கு மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 வரையும் பயிற்சியளிக்கப்படும்.

    இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வர்கள் தங்கள் பெயர்களை 6381799370 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். அல்லது 8-ந் தேதி அன்று நேரடியாக மாவட்ட விளை யாட்டரங்கம், அரசு கலை கல்லூரி அருகில் கீழ்பெரும் பாக்கம், விளையாட்டு மைதானத்தில் காலை 7.30 மணிக்கு நடை பெறும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பயன்பெற லாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்படும். எனவே இந்த கோடை கால விடுமுறையை பெருமளவில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என மாவட்ட கலெக்டர் சாந்தி, தெரிவித்துள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள், இதர சில்லறை விற்பனை யாளர்கள், வணிகர்கள், அரசு மற்றும் தனியார் பஸ் கண்டக்டர்கள், பொதுமக்கள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள், பல்பொருள் அங்காடி கடைகள், ஓட்டல்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் இந்திய அரசால் அங்கீகரிக் கப்பட்ட 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுக்ககூடாது. 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என மாவட்ட கலெக்டர் சாந்தி, தெரிவித்துள்ளார்.

    இக்கூட்டத்தில் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், சென்னை ரிசர்வ் வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன், இந்தியன் வங்கியின் தருமபுரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரவீன் பாபு. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராமதாஸ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹி முகமது நசீர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    • அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் திருக்கோ வில் சித்திரைப்பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள கூவாகம் கிராமத்தில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க கூத்தாண்டவர் சித்திரைப்பெருவிழா கடந்த 18- ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து வருகிற மே மாதம் 1- ந் தேதி மாலை கம்பம் நிறுத்துதல், 2- ந் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைள் பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக்கொள்ளுதல் 3 - ந் தேதியன்று காலை திருத்தேர் வலம் வருதல், மாலையில் பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, குளியலறை, மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் கூட்ட நெரிசலை கட்டுபடுத்துவதற்கும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், கூடுதல் காவலர்களை காவல் பணியில் ஈடுபடுத்திடவும், கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள், பாதுகாப்பிற்காக அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநா ராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்சிவாகரன், திருக்கோவிலூர் கோட்டா ட்சியர் யோகஜோதி, உதவி இயக்குநர்( ஊராட்சிகள்) ரெத்தினமாலா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சரவணன், உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், செல்வபோதகர், கூவாகம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    • மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 3.5.2023 காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்காக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பு விளையாட்டு விடுதி, தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி, வேலூர் காட்பாடியில் மாணவ மாணவிர்ளுக்கு சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 01-01-2023 அன்று 17 வயது நிரம்பிய 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை பயிலும் மாணவ , மாணவிர்ள் தகுதியுடையவர்கள் ஆவர்.

    தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு , பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல்3 இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் , இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள், சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை 19.4.2023 முதல் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 2.5.2023 மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 3.5.2023 காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மேற்படி சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பியோருக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு "புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை'' செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொேரானா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி ெபற்றுப் பயன் பெறலாம். அவர்கள் ெகாரோனா பரவலால் 1.1.2020 அன்று அல்லது அதற்குப் பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பி இருக்க வேண்டும். குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18-க்கு மேலாகவும், 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    விற்பனை மற்றும் சேவைத் தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சமாகவும், உற்பத்தித் தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சமாகவும் பயனாளர் தம் பங்காக, பொதுப் பிரிவுப் பயனாளர்கள் எனில் திட்டத் தொகையில் 10 சதவீதம் மற்றும் பெண்கள், இட ஒதுக்கீடு பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் எனில் 5சதவீதம் செலுத்த வேண்டும்.

    மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். அரசு திட்டத் தொகையில் 25சதவீதம் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிகட்டப்படும்.

    மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www/msme.Online.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரி யில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை 2 பிரதிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில்மையம், சிவகங்கை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே வெளிநாடுகளில் இருந்து கொரோனா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் ஆர்வமும் கொண்டோர் வாழ்வாதாரத்துக்கான தொழில் தொடங்க (MEGP) என்ற இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இது குறித்து மேலான விவரங்கள் மற்றும் ஆலோச னைகள் பெற மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திள் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையத்தை நேரடியாகவோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி மூலமாகவோ அணுகி பயன்பெறலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×