search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sewing machine"

    • ராஜேஸ்வரி, அமைச்சர் கீதாஜீவனிடம் தையல் எந்திரம் தந்து உதவுமாறு கோரிக்கை மனு அளித் திருந்தார்.
    • கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீதாஜீவன் கலைஞர் அரங்கில் அந்த பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட் சிக்குட்பட்ட சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த பொன் ராஜேஸ்வரி, அமைச்சர் கீதாஜீவனிடம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டும், தன் குடும்பத்தின் வாழ்வா தாரத்திற்காகவும் தையல் எந்திரம் தந்து உதவுமாறு கோரிக்கை மனு அளித் திருந்தார்.

    இதனையடுத்து அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்ற வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் கலைஞர் அரங்கில் அந்த பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கி னார்.

    மாநகர தி.மு.க. செயலா ளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் பிரபு, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, வட்ட செயலாளர் கதிரேசன், பெருமாள் கோவில் அறங்காவலர்குழு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    தூத்துக்குடி அண்ணா பஸ் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகி கள் மற்றும் உறுப்பினர்கள் கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவனை மரியாதை நிமித்த மாக சந்தித்ததுடன் சில கோரிக்கைகளையும் முன் வைத்ததையடுத்து, நிறை வேற்றி தருவதாக உறுதி யளித்தார்.

    தூத்துக்குடி- தன சேகரன் நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அப்பகுதியில் சாலை வசதிகள் அமைக்கப் பட்டதற்கு அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மாவட்ட பிரதிநிதி செல்வ குமார் உடனிருந்தார்.

    தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டு பொது மக்கள் அப்பகுதியில் சாலை வசதிகள் அமைக்கப்பட்ட தற்கும் மற்றும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் வேகத்தடை அமைத்துக் கொடுத்ததற்கும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். கவுன்சிலர் முத்துவேல் உடனிருந்தார்.

    • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • கணவனால் கைவிடப்பட்டவர், விதவை, ஏழை ஆகியோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தினை கணினி மையம் ஆக்குவது தொடர்பாக அதற்கான வலை பயன்பாடு ஒன்று டிஎன்இஜிஏ மூலம் தயார் செய்யப்பட்டு, அரசு இ-சேவை மையங்களில் அதற்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் சமூக நலத்துறையின் மூலம் கணவனால் கைவிடப்பட்டவர், விதவை மற்றும் ஏழை ஆகியோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

    2023-24ம் ஆண்டிற்கான இலவச தையல் எந்திரம் பெறவிரும்புவோர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமலும், 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (பள்ளிசான்று அல்லது வயது சான்று), 6 மாதத்திற்கு குறையாத தையல் பயிற்சி சான்று, ஜாதிசான்று, விதவை சான்று, கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இனி வருங்காலங்களில் தகுதியான நபர்கள் அருகில் உள்ள அரசு இ- சேவை மையங்களை அணுகி விண்ணப்பம் செய்து பயன் பெறுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • முள்ளக்காடு ஊராட்சி பொட்டல்காடு கிராமத்தில் 32 பெண்களுக்கு 40 நாட்கள் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு இலவச தையல் எந்திரத்து டன் சான்றுகள் வழங்கும் விழா கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
    • கலைஞர் ஆட்சியில் தொடர்ந்த திட்டங்களின் மூலம் இன்று முதல்-அமைச்சர் ஆட்சிக்கு திராவிட மாடல் அடித்தளமாக அமைந்தது என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

    தூத்துக்குடி:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு என்.பெரியசாமி அறக்கட்ட ளை மற்றும் மகளிர் திட்ட ஒருங்கிணைப்புடன் முள்ளக்காடு ஊராட்சி பொட்டல்காடு கிராமத்தில் 32 பெண்களுக்கு 40 நாட்கள் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு இலவச தையல் எந்திரத்து டன் சான்றுகளும் மற்றும் தையல் பயிற்சி பெற்ற 68 பெண்கள் மொத்தம் 100 பேருக்கு தையல் எந்திரம் வழங்கும் விழா கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரி மைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 100 பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். அதிலும் அனைவரும் முறையாக தையல் பயிற்சி பெற்றவர்கள். தமிழகத்தில் ஓரே பெண் மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் மட்டும் தான். இது தான் நமக்கு பெருமை.

    கலைஞர் ஆட்சியில் தான் மகளிர் சுய உதவிக்குழு ஆரம்பிக்க ப்பட்டது. உலகத்தில் நடப்பதை இல்லத்தில் இருந்து தெரிந்து கொள்ள தொலைக்காட்சி பெட்டி வழங்கி , அடுப்பூதிய பெண்களுக்கு கியாஸ் அடுப்பு வழங்கப்பட்டது. காவல் துறையில் பெண்கள் பணி உருவாக்கப்பட்டது. இப்படி சாதனைகளை அடுக்கி கொண்டே செல்ல லாம். கலைஞர் ஆட்சியில் தொடர்ந்த திட்டங்களின் மூலம் இன்று முதல்-அமைச்சர் ஆட்சிக்கு திராவிட மாடல் அடித்தள மாக அமைந்தது. கலை ஞரின் நூற்றாண்டு விழா வை ஒரு வருடம் கொண்டாட உத்தர விடப்ப ட்டுள்ளது. அதை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண் டாட வேண்டும் என்றார்.

    விழாவில் மார்க் கண்டேயன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வ ராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்ன லட்சுமி, கலைச் செல்வி, பொதுக்குழு உறுப்பி னர்கள் கோட்டு ராஜா, ராஜா, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், பொறி யாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணா தேவி, மருத்துவ அணி அமைப்பாளர் அருண் குமார், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெபக்கனி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ஜாக்குலின் ஜெயா, சரவணக்குமார், விஜயகுமார், வைதேகி, மகேஸ்வரி, மரியகீதா, சரண்யா, நாகேஸ்வரி, ஜெய சீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ஜான்சிராணி, சுப்புலட்சுமி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாரா யணன், செல்வ க்குமார், வட்டச்செ யலாளர்கள் முக்கையா, கருப்பசாமி, கங்காராஜேஷ், கீதாசெல்வமாரியப்பன், சதீஷ்குமார், செல்வராஜ் மற்றும் கருணா, மணி, பிரபாகர், கவிதாதேவி பெல்லா, சந்தமாரி, லிங்கராஜா, ரேவதி, மகேஸ்வரன்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும்.
    • வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்க்குள் இருக்க வேண்டும்.

    வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பி டச் சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று, ஜாதிச் சான்று, விண்ணப்பதாரரின் வண்ண புகைப்படம் - 2, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண்.30சி வ.உ.சி. நகர், 5-வது தெரு, கச்சிராப்பாளையம் ரோடு, கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    • திருநங்கைகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
    • சுயதொழில் செய்ய விரும்புவோர் தொடர்பாக பட்டியல் எடுக்கப்பட்டது.

    மதுரை

    திருநங்கைகளுக்கு சமூகத்தில் உரிய மரியாதை தரப்படுவது இல்லை. எனவே அவர்கள் பாலியல் மற்றும் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் திருநங்கைகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் ஏற்படுத்தித் தருவது என்று மதுரை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ('டான்சாக்ஸ்') முடிவு செய்தது. இதன்படி மாவட்ட அளவில் சுயதொழில் செய்ய விரும்புவோர் தொடர்பாக பட்டியல் எடுக்கப்பட்டது. இதில் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் சுயதொழில் ஏற்படுத்த மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, மாவட்ட வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி மையம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது.

    இதனைத் தொடர்ந்து மதுரையில் பிரதர் சிகா மற்றும் அனியம் அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் 'டான்சாக்ஸ்' மாவட்ட திட்ட மேலாளர் ஜெய பாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் முதற் கட்டமாக 40-க்கும் திருநங்கைகளுக்கு, மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் சுவாமிநாதன், அனியம் அறக் கட்டளை நிறுவனர் அழகு ஜெகன், பிரதர் சிகா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பானுமதி, ராஜேசுவரி, பக்கீர் வாவா மற்றும் திருநங்கைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இலவச தையல் எந்திரம் வழங்க ராமநாதபுரம் கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 3 மாத கால பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் முத்தமிழ் அறக்கட்டளை சார்பாக பல்வேறு பொதுநல சேவைகளை செய்து வருகின்றனர். பசியில்லா தமிழகம் என்ற திட்டம் மூலம் தினந்தோறும் இலவச உணவு வழங்கி ஏழை எளியோரின் பசியை போக்கி வருகின்றனர். மேலும் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகளிர் குழு ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு சிறு தொழில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி முதல் கட்டமாக 30 பெண்களுக்கு ராமநாதபுரம் நேருயுவகேந்திராவுடன் இணைந்து தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. 3 மாத கால பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பயிற்சி பெற்ற 30 பெண்களும் இலவச தையல் எந்திரம் வழங்க கோரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். கலெக்டரும் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன், தையல் பயிற்சியாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்த பெண்ணுக்கு உடனடியாக இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் இந்த முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில் திருச்சுழியைச் சேர்ந்த சோனைபாண்டி என்ற பெண் தனக்கு சுயதொழில் புரிய தையல் எந்திரம் வழங்ககோரி இந்த கூட்டத்தில் மனு அளித்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடியாக அவருக்கு இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வித்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், கலெக்டரின்நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கலால்) அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் பெற ஏழை பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை மூலம் விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறன் ஏழை பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்க தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்குள் தாசில்தாரிடம் பெறப்பட்ட வருமானச் சான்று, இருப்பிடச் சான்று தாசில்தாரிடம் பெற வேண்டும்.

    அல்லது ரே‌ஷன்கார்டு, பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 6 மாத கால தையல் பயிற்சி சான்று, வயது சான்று (20 முதல் 40 வரை) அல்லது கல்வி சான்று அல்லது பிறப்பு சான்று, சாதிச்சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், மகளிர், மாற்றுத்திறன் பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் பாஸ்போர்ட் சைஸ் விண்ணப்பதாரரின் கலர் போட்டோ ஆகிய சான்றுகள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×