search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர்க்கும் முகாம்: மனு கொடுத்த பெண்ணுக்கு உடனடியாக இலவச தையல் எந்திரம்
    X

    இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    குறைதீர்க்கும் முகாம்: மனு கொடுத்த பெண்ணுக்கு உடனடியாக இலவச தையல் எந்திரம்

    • குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்த பெண்ணுக்கு உடனடியாக இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் இந்த முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில் திருச்சுழியைச் சேர்ந்த சோனைபாண்டி என்ற பெண் தனக்கு சுயதொழில் புரிய தையல் எந்திரம் வழங்ககோரி இந்த கூட்டத்தில் மனு அளித்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடியாக அவருக்கு இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வித்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், கலெக்டரின்நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கலால்) அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×