இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.கணவனால் கைவிடப்பட்டவர், விதவை, ஏழை ஆகியோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தினை கணினி மையம் ஆக்குவது தொடர்பாக அதற்கான வலை பயன்பாடு ஒன்று டிஎன்இஜிஏ மூலம் தயார் செய்யப்பட்டு, அரசு இ-சேவை மையங்களில் அதற்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் சமூக நலத்துறையின் மூலம் கணவனால் கைவிடப்பட்டவர், விதவை மற்றும் ஏழை ஆகியோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

2023-24ம் ஆண்டிற்கான இலவச தையல் எந்திரம் பெறவிரும்புவோர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமலும், 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (பள்ளிசான்று அல்லது வயது சான்று), 6 மாதத்திற்கு குறையாத தையல் பயிற்சி சான்று, ஜாதிசான்று, விதவை சான்று, கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இனி வருங்காலங்களில் தகுதியான நபர்கள் அருகில் உள்ள அரசு இ- சேவை மையங்களை அணுகி விண்ணப்பம் செய்து பயன் பெறுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com