search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்விக்கடன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடப்பு கல்வி ஆண்டில் மதுரை மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு இலக்கைத் தாண்டி இந்த ஆண்டு ரூ.168.28 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    2023-2024 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023-2024 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகமும் வங்கி நிர்வாகமும், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் இணைந்து கூட்டாக விரிவான முயற்சி எடுத்தன. கடந்த 24.11.2023 அன்று மாவட்டம் முழுமைக்குமான கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கல்விக்கடன் பற்றி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு தரப்பட்ட ரூ.125 கோடி என்ற இலக்கைத் தாண்டி, இந்த ஆண்டு ரூ.168.28 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 2,627. இவர்களில் 2,078 பேருக்கு 168.28 கோடி ரூபாய் கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 79 சதவீதம் பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

    • 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்று கல்விக்கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர்.
    • ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி படிப்புக்கான கல்விக்கடன் சிறப்பு முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.முகாமில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 22 வங்கிகள் பங்கேற்றன.

    300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்று கல்விக்கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர். நடப்பு கல்வியாண்டில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.64 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    சாலையோர வியாபாரிகளுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்விக்கடன் கேட்டு முகாமில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு விரைந்து கல்விக்கடன் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை–பெற உள்–ளது.
    • www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்,

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்க சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 23-ந்தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

    மாவட்டத்தின் முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

    கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல், மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    விண்ணப்ப நகல், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கிக்கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமான சான்று நகல், சாதிச்சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், கல்விக்கட்டண விவரம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆவணம் போன்றவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று கல்விக்கடன் வழங்க, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உரிய சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • தமிழக மாணவர்களின் கல்விக்கடனை தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டும்.
    • தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப் வலியுறுத்தினார்.

    மதுரை

    தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. கடந்த 2021-ம் ஆண்டு தனது தேர்தல் அறிக் யில் தாங்கள் ஆட் சிக்கு வந்தால் தமிழக மாண வர்களின் கல்விக்கடன் முழுவதையும் ரத்து செய்வ தாக அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இது பற்றி எவ்விதமான முயற்சி யையும் தமிழக அரசு எடுக்க வில்லை.

    ஒரு லட்சம் ரூபாய் கல் விக்காக கடன் வாங்கியிருந் தால் பத்து லட்சம் முதல் இருபது லட்சம் வரை கட்ட வேண்டும் என்று வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகிறது. கட்டத்தவறினால் நீதிமன்ற சம்மனும் வருகிறது. சில வங்கிகள் கடனை வசூலிக்க ஏஜென்சிகளை பயன்படுத் துகின்றன.

    தனியார் ஏஜென்சிகள் வட்டிக்காரர்களை போன்று கடன் பெற்ற மாணவர்களை மிரட்டுகிறார்கள். கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுபற்றி எவ்வித கவலையும்படாமல் அதிகாரத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள்.

    அரசின் விளம்பரங்க ளுக்கு ஆகும் செலவை நிறுத்தினாலே மாணவர்க ளின் கல்விக்கடனை ரத்து செய்துவிடலாம். எனவே திராவிட முன்னேற்றக்கழக அரசு தனது தேர்தல் வாக்கு றுதியில் சொல்லியபடி உட னடியாக கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும். வட்டிக்கடைக்காரர்களை போல் மாணவர்களை மிரட்டும் வங்கி ஏஜென்சி யிடம் இருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கையை தமிழக அரசிற்கு முன்வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

    • சென்னையில் இருந்து ஊருக்கு வந்தவர் தூக்கில் தொங்கினார்
    • பூஜை அறைக்குள் சென்று அங்கிருந்த சாமி படங்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.

    இரணியல் :

    இரணியல் மேலத்தெரு மெயின்ரோடு ஆமத்தன் பொத்தை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 64). இவர் குளச்சல் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. பொறுப்பாளராக உள்ளார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (56). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உண்டு. மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். மகன் கணேஷ்ராஜா (28). எம்.இ. பட்டதாரி. சென்னையில் தனியார் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் இரணியல் கிளையில் உள்ள ஒரு தேசிய வங்கியில் ரூ.2.5 லட்சம் கல்விக்கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த கடனை கட்டி முடிக்காததால் கணேஷ்ராஜா பெயருக்கு இலவச சட்ட மையத்தில் இருந்து அழைப்பாணை ஒன்று வந்துள்ளது.

    அதில் செப்டம்பர் 8-ந்தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு கணேஷ்ராஜாவை ஆஜராகும்படி கூறி இருந்தது. இதுகுறித்த தகவலை அவரது தாயார் ஜெயஸ்ரீ சென்னையில் பணிபுரிந்து வந்த கணேஷ்ராஜா வை செல்போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த கணேஷ்ராஜா நான் உயிரோடு இருக்க மாட்டேன் என செல்போனில் தாயாரிடம் கூறி அழுததாக தெரிகிறது. 8-ந்தேதி ஆஜராக வேண்டியிருப்பதால் வீட்டிற்கு வருமாறு தாயார் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்தார். கல்வி கடன் தள்ளுபடி ஆகும் என்று காத்திருந்தபோது பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டு வங்கி கடன் செலுத்த சட்ட உதவி மையம் அழைப்பு விடுத்த விரக்தியில் கணேஷ்ராஜா மிகுந்த மன வேதனையுடன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது அவர்கள் கடனை கட்டிவிடலாம் என்றும், இலவச சட்ட மையத்தில் ஆஜராகி விட்டு வரும்படியும் கூறியுள்ளனர். எனினும் மனவேதனையில் இருந்த கணேஷ்ராஜா எதையும் பொருட்படுத்தாமல் பூஜை அறைக்குள் சென்று அங்கிருந்த சாமி படங்களையும் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாடி அறைக்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார்.

    பெற்றோர்கள் கதவை தட்டியும் கணேஷ்ராஜா கதவை திறக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஏணி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கணேஷ்ராஜா தூக்குபோட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கணேஷ்ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உதயகுமார் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்குப்ப திவு செய்த போலீசார் கணேஷ்ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கல்லூரி மாணவர்கள் 39 பேருக்கு ரூ.2.57 கோடி கல்விக்கடன் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
    • தகுதியான மாணவர்களுக்கு கடன் அனுமதி உத்தரவுகளை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாண வர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்ட அளவில் இரண்டு சிறப்பு கல்வி கடன் முகாம் கள் நடத்திட திட்டமிடப்பட் டது. அதன் தொடக்கமாக சிவகங்கையில் சிறப்பு கல்வி கடன் முகாம் தொடங் கியது. இம்முகாமில் விண் ணப்பித்த மாண வர்களுக்கு, அந்தந்த வங்கிகளினால் அனுமதிக் கப்பட்டு அதன்படி நேற்றைய தினம் மொத்தம் 39 பேருக்கு ரூ.2.57 கோடி மதிப்பீட்டி லான கல்வி கடன் ஆணை–கள் வழங்கப் பட்டுள்ளது.

    மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட 37 மா–ணவர்கள் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற் கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். தகுதி யான மாணவர்களுக்கு கடன் அனுமதி உத்தரவு களை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள் ளது. இதேபோன்று வருகின்ற 8-ந்தேதி அன்று காரைக்குடி கண்ணதாசன் மணி மண்ட பத்திலும் மா வட்ட அளவி லான சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது. எனவே தற்போது பயன் பெற்றுள்ள மாணவர்களும், தங்களை சார்ந்தோர்களிடம் எடுத்து ரைத்து, பயன்பெற செய்வ தற்கான நடவடிக்கை–களில் ஈடுபடவேண்டும்.

    மேலும் கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள், இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு, வங்கிக்கடன்களை சரிவர செலுத்தி, சிறப்பாக பயின்று தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் சிவ கங்கை சுற்று வட்டா ரத்தில் இயங்கும் 18 வங்கி களின் மேலாளர்கள் கலந்து கொண்டு மாண வர்கள் சமர்ப்பித்த விண்ணப் பங்களை பெற்றுக் கொண்டனர்.

    • வருகிற 8-ந்தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடைபெற உள்ளன.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 5-ந்தேதியும், காரைக்குடியில் வருகிற 8-ந்தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடைபெற உள்ளன. காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்ட பத்தில் கல்வி கடன் முகாம் நடக்கிறது.

    எனவே கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ- மாணவிகள் www.vidyalakshmi.co.in என்ற இணைய தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்து, முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்ப நகல் மற்றும் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    இந்த முகாம்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும்.

    முகாமில் கலந்து கொள்பவர்கள் விண்ணப்ப நகல், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரின் 2 பாஸ்போர்ட்டு புகைப்படம், வங்கி பாஸ் புத்தகம், இருப்பிட சான்று, வருமான சான்று, ஜாதி சான்று, பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள், நன்னடத்தை சான்று, கல்விக்கட்டண விவரம், மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்று, கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
    • இந்த தகவலை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    திட்டம்1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1லட்சத்து 20ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புற மாயிருப்பின் ரூ.98ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம்2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.

    திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20லட்சமும், திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5சதவீதம், பெண்களுக்கு 4சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

    திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8சதவீதமும், பெண்களுக்கு 6சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சத்து 50ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம்-2ன் கீழ் மாணவர்களுக்கு 8சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    எனவே மதுரை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மைச்சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, ெசலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து சிறுபான்மையினர் இனத்தைச்சார்ந்த மக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
    • இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவி குழுக்க ளுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்க ளுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    திட்டம்-1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புற மாயிருப்பின் ரூ.98 ஆயிரத்துக்கும் மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம்-2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.

    திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    கைவினை கலைஞர்க ளுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉத விக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படு கிறது.

    திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8சதவீதமும், பெண்களுக்கு 6சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம்-2ன் கீழ் மாணவர்களுக்கு 8சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தி லும் ரூ.30 லட்சம் வரையி லும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    எனவே மதுரை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச்சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, ெசலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்க ளின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து சிறுபான்மையினர் இனத்தைச்சார்ந்த மக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.

    • கல்விக்கடன் முகாமில் வங்கிகள் பங்கேற்றன.
    • பேராசிரியர் அருண்ராஜா நன்றி கூறினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து ''கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாமை'' சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

    கல்லூரி தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில் குமார், டீன் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதலாமாண்டு துறைத் தலைவர் ஸ்ரீராம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வெம்பக்கோட்டை கிளை மேலாளர் ராஜகுமாரி, ஆலங்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் தணிகைநாதன், தாயில்பட்டி கிளை மேலாளர் ஆனந்த், பேங்க் ஆப் இந்தியாவின் செவல்பட்டி கிளை மேலாளர் சீனிவாசராவ், சல்வார்பட்டி கிளை மேலாளர் பிரபு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மம்சாபுரம் கிளை மேலாளர் மணிகண்டன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஏழாயிரம்பண்ணை கிளை மோலாளர் ரகுநாத் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.

    வெம்பக்கோட்டை கிளைமேலாளர் ராஜகுமாரி பேசுகையில், விருதுநகர் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின்படி இந்த சிறப்பு முகாம் நடை பெறுகிறது. தமிழக அரசின் ''வித்யாலட்சுமி'' என்ற திட்டத்தின் மூலமாக உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கவிக்கடன் வழங்கும் திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? அதற்குரிய ஆவணங்கள் சமர்பிப்பது பற்றிய வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. விண்ணப்பிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    ஏழை, எளிய மாண வர்களும் பயன்பெறும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் சாகுல் ஹமீது, பேராசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் அலுவலக உதவியாளர் களுடன் இணைந்து செய்திருந்தனர். பேராசிரியர் அருண்ராஜா நன்றி கூறினார்.

    • திருப்பூரில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    • கல்விக்கடன் பெற பெற்றோர்களுடன் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி படிப்பிற்கான கல்விக்கடன் பெற சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் முன்னோடி வங்கி மூலம் முகாம் நிறைவடைந்தது.

    2 நாட்களாக நடந்த இந்த முகாமில் திருப்பூர் மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கல்விக்கடன் பெற பெற்றோர்களுடன் மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் வங்கி உள்ளிட்ட 18 வங்கிகள் கலந்துகொண்டன. திருப்பூரில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்துகொண்ட இந்த முகாமில் 325 மாணவர்களுக்கு ரூ.10.39 கோடி அளவில் கடன் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. மேலும் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களான தாட்கோ, மாவட்ட தொழில் மையத்தின் கடன் திட்டங்கள், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வங்கிகள் அதனை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி சாலையோர வியாபாரிகளுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரீசிலனை செய்து கடன் வழங்க அறிவுறுத்தினார். மேலும் அரசின் காப்பீடு திட்டங்கள் குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மீதான குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரீசிலனை செய்யப்பட்டு விரைந்து கல்விக்கடன் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களின் கல்விக் கடன் ரத்தாகுமா? என்ற வெங்கடேசன் எம்.பி. கோரிக்கைக்கு மத்திய மந்திரி பதில் அளித்தார்.
    • மருத்துவ மாணவர்களின் கல்விக் கடன் ரத்தாகுமா?

    மதுரை

    உக்ரைன் நாட்டில் படிக்கும் இந்திய மாண வர்களின் படிப்பு அங்கு நடந்து வரும் போரால் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    அதற்கு மத்திய மந்திரி பகவத்கரத் பதில் அளித்துள்ளார். அதில் "வெளியுறவு அமைச்சக கணக்குப்படி 22 ஆயிரத்து 500 இந்திய மாணவர்கள் உக்ரைன் நாட்டில் தங்கி படித்து வந்தனர். ரஷ்யா வுடன் போர் காரணமாக அவர்கள் மத்திய அரசின் "ஆபரேசன் கங்கா" திட்டத்தின் கீழ் விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.

    அங்கு நிலைமை சீரடைந்தவுடன் எல்லா தாக்கங்களையும் மதிப்பிட்டு, தீர்வுகளுக்கான வழிகளை பரிசீலிப்போம். இடைக்கால நடவடிக்கை யாக, நாடு திரும்பியுள்ள மாணவர்களின் கல்விக் கடன் தொடர்பாக ஆய்வு செய்யும்படி இந்திய வங்கியாளர் கூட்டமைப்பை அறிவுறுத்தி உள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வெங்க டேசன் எம்.பி கூறுகையில், மத்திய மந்திரியின் பதி லில் நம்பிக்கை தரும் வார்த்தைகள் இருந்தாலும், முடிவுகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். உக்ரைன் போரை கல்விக் கடன் ரத்து பிரச்சினை யுடன் இணைக்காமல், ஏற்கனவே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ள மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

    ×