search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education loans"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடப்பு கல்வி ஆண்டில் மதுரை மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு இலக்கைத் தாண்டி இந்த ஆண்டு ரூ.168.28 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    2023-2024 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023-2024 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகமும் வங்கி நிர்வாகமும், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் இணைந்து கூட்டாக விரிவான முயற்சி எடுத்தன. கடந்த 24.11.2023 அன்று மாவட்டம் முழுமைக்குமான கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கல்விக்கடன் பற்றி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு தரப்பட்ட ரூ.125 கோடி என்ற இலக்கைத் தாண்டி, இந்த ஆண்டு ரூ.168.28 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 2,627. இவர்களில் 2,078 பேருக்கு 168.28 கோடி ரூபாய் கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 79 சதவீதம் பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

    • கல்வி கடன்களை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
    • வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், அனைத்து வங்கியாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தாட்கோ, மாவட்ட தொழில்மையம், மகளிர் திட்டம் ஆகிய துறை கள் மூலம் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை முறையாக பரிசீலனை செய்து காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும் என்றும், கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் எந்த வித தாமதமின்றி பரிசீலனை செய்து கடன்களை வழங்கிட வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் 7 பயனா ளிகளுக்கு பால் பண்ணை தொழில் புரிவதற்கும், 4 பய னாளிகளுக்கு வெள்ளாடு கள் வாங்குவதற்கும், 7 பய னாளிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கும் என மொத்தம் 18 பயனாளி களுக்கு ரூ.21.8 லட்சம் மதிப்பில் சுய தொழில் புரி வதற்கான மானிய தொகைக்கான ஆணை களை கலெக்டர் வழங்கி னார்.

    கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×